பிரபாஸ் படத்துக்கு பயந்து விலகும் அஜித்-சூர்யா படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி 2 வை தொடர்ந்து சாஹோ என்னும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க, அருண் விஜய்தான் வில்லனாக நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குனர் சூஜீத் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படத்தின் சூட்டிங் மிகுந்த பொருட்செலவில் நடைபெற்றது.

ரூ. 300 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை யூவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்பட டீசர் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகி சாதனைகளை படைத்து வருகிறது.

எனவே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிட இருந்தனர்.

ஆனால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் சூர்யாவின் காப்பான் ஆகிய படங்கள் வெளியாகவிருந்தன.

தற்போது ஒரே வாரத்தில் பிரபாஸ் படம் வருவதால் தங்களின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் இதன் வெளியீட்டை ஜீலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடலாமா? என இரு படக்குழுவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

விஷாலுக்கு பெண்களை சப்ளை செய்யும் டீம்; தொழில் மீது சத்தியம் செய்யும் ஸ்ரீரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னோடு படு… சினிமாவில் சான்ஸ் தருகிறேன் என பலர் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதெல்லாம் புகார் கூறியிருந்தார்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெலுங்கு நடிகர் சங்கம் முன், அரை நிர்வாணம் போராட்டமும் நடத்தியிருந்தார்.

அதற்கு அடுத்து சில தினங்களில் இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரும் மீதும் இதே குற்றச்சாட்டை கூறினார்.

நீங்கள் திறமையான நடிகை என்றால் நானே என் படத்தில் வாய்ப்பு தருகிறேன் என அப்போதே அறிவித்தார் ராகவா லாரன்ஸ். பின்னர் அது என்ன ஆனதோ? அப்படியே நின்றது.

இந்த நிலையில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் வேளையில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிடும் விஷால் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.

அதில்… “விஷால் படத்தில் நாயகியாக வேண்டுமென்றால் அவரோடு படுத்துத்தான் ஆக வேண்டும்.

அவருக்கு பெண்களை ஏற்பாடு செய்ய ஒரு குழுவே உள்ளது. அவர்கள் யார் யார் என்பதும் எனக்குத் தெரியும்.

இதை நான் என் அம்மா மீதும் என் சினிமா தொழில் மீதும் சத்தியம் செய்து கூறுவேன். இனியும், நீங்கள் யாரையும் ஏமாற்ற முடியாது.” என பரபரப்பாக பேசியுள்ளார் ஸ்ரீரெட்டி.

Actress Sri Reddys sensational allegations against Vishal

ஆகஸ்ட்டு நம்ம டார்கெட்டு; ரஜினி போட்ட தர்பார் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் மூலம் ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் முதன்முறையாக கரம் கோர்த்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் தலைப்பை அறிவித்துவிட்டு இதன் சூட்டிங்கை மும்பையில் ஏப்ரல் மாதம் துவங்கினர்.

அதன்பின்னர் மே 29ம் தேதி முதல் 2ஆம் கட்டப் படப்பிடிப்பை தற்போது நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இதன் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக வதந்தி கிளம்பியது.

ஆனால் இதை படக்குழு மறுத்து, ஆகஸ்ட் மாதம் தான் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Rajinikanths Darbar shooting updates

தும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான ‘பேராண்மை’ மற்றும் ‘வனமகன்’ போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த ‘தும்பா’ படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான ஹீரோ ஜெயம் ரவி, இந்த குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, “இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜெயம் ரவி நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஒப்புக் கொண்டது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தை சர்ப்ரைஸாக வைக்க விரும்புகிறோம், அது ஒரு சிறப்பு தோற்றம் தான் என்றாலும் பார்வையாளர்கள் அவர் வரும் காட்சிகளை மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

தும்பா அது துவங்கப்பட்டதில் இருந்தே, தும்பாவுடன் அனிருத்தின் ஸ்பெஷல் வீடியோ மூலம் நல்ல எதிர்பார்ப்பு அலையை உருவாக்கியிருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்து பாடல்கள், ட்ரைலர் மூலம் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இது குறித்து சுரேகா கூறும்போது, “அனைத்து பாராட்டுக்களும் இயக்குனரையே சாரும். ஒரு இயக்குனரின் யோசனை உறுதியாக மற்றும் வலுவானதாக இருக்கும்போது, எல்லாம் மிகச்சரியாக அமைகிறது. நான் ஒரு தயாரிப்பாளராக, இயக்குனர் ஹரிஷ் ராம் LH, திரைப்படத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்து இப்போது இறுதி வடிவம் வரை படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கி வருவதை பார்க்கிறேன். குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் நிச்சயம் படத்தை ரசிப்பார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.

இந்தியாவின் முதல் மிகப்பெரிய லைவ் ஆக்‌ஷன் அனுபவமாக குறிப்பிடப்படும் தும்பா, ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் தீனா ஆகியோர் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. மேலும் அனிருத் முதல் சிவகார்த்திகேயன் வரை பிரபலங்களின் குரல்கள் ‘தும்பாவின் உலகத்துக்கு’ கூடுதல் அழகு சேர்த்திருக்கின்றன. அனிருத் ஒரு பாடலுக்கு இசையமைக்க, மற்ற பாடல்களுக்கு விவேக் – மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். நரேஷ் இளன் (ஒளிப்பதிவு), கலைவாணன் (படத்தொகுப்பு), ஸ்டன்னர் சாம் (சண்டைப்பயிற்சி), ராகவா, பிரபாகரன் (வசனம்), வாசுகி பாஸ்கர்-பல்லவி சிங் (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவினராக பணிபுரிந்துள்ளனர்.

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார். தும்பா மேனியா நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகும் வேளையில், படத்தின் இரண்டாவது ட்ரைலரும், Humpty Dumpty பாடலும் வெளியாகி இருப்பது கூடுதல் வெளிச்சத்தை தந்திருக்கிறது. வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால், அங்கும் மிகப்பெரிய அளவில் வெளியாக இருக்கிறது தும்பா.

உயரப்பறக்க தயாரான சிறகு! பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசியதாவது,

“இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார்

நடிகர் நிவாஸ் ஆதித்தன் பேசியதாவது

“என்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா மணியன் அவர்களுக்கும் இயக்குநர் குட்டி ரேவதி அவர்களுக்கும் நன்றி” என்றார்.

நடிகை டாக்டர் வித்யா பேசியதாவது,

“23 வருசமா நான் மருத்துவரா இருக்கிறேன். ஆக்டிங் எனக்கு பெரிய பேஷன். எதாவது செஞ்சாகணும்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இந்தப்படத்துல ரொம்ப நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறேன். தயாரிப்பாளர் மாலா மணியன் மேடம் எங்களை தன் பேமிலி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அதே மாதிரி தான் குட்டி ரேவதி மேடமும். இந்தப்படத்துல நடிச்சிருக்கோம் என்பதை விட எங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி இருக்கோம். சிறகு உயரப்பறக்கும்” என்றார்.

நாயகி அக்ஷிதா பேசியதாவது,

“நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஹீரோ ஹரியோட நடித்தது நல்ல அனுபவம். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. அருவி படத்தின் இயக்குநர் தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்” என்றார்.

ஹீரோ ஹரி கிருஷ்ணன் பேசியதாவது,

“ரொம்ப சந்தோஷமான தருணமா இருக்கு. இந்த டீம் ரொம்ப சூப்பரான டீம். குட்டி ரேவதி மேடம் தான் இந்த வாய்ப்பை கொடுத்தாங்க. பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன். ஆனா பெண்கள் தான் ஸ்ட்ராங் என்பதை உணர்ந்து கொண்டேன். கேமராமேன் மிக அற்புதமாக உழைத்திருக்கிறார். அருண் எடிட்டிங் செம்மயாக வந்திருக்கிறது. இந்த விழாவின் நாயகன் அரோல்கரோலி அட்டகாசமாக மியூசிக் அமைத்து இருக்கிறார். இந்தப்படத்தில் இசை ரொம்ப முக்கியம். அதை சரியாகச் செய்திருக்கிறார்” என்றார்.

இசை அமைப்பாளர் அரோல் கரோலி பேசியதாவது

“சிறகு எனக்கு பேவரைட்டான ஸ்ரிகிப்ட். கதையைப் படிச்சதும் ஒரு பயணம் போன மாதிரி இருந்தது. குட்டி ரேவதி மேடம் எழுத்து எப்படி ஸ்ட்ராங் என்பது எல்லோருக்கும் தெரியும். கேமராமேன் பெரிய வித்தைக்காரர். கலக்கி இருக்கிறார். ஹரி கிருஷ்ணன் அவர் நல்லா கவனிக்க வைக்கிறார். இந்தப்படம் நாம் இழந்த சில உணர்வுகளை வெளிப்படுத்தும். இந்தப்படம் மூலமாக ஏ.ஆர் ரகுமான் சாரையும், மணிரத்னம் சாரையும் சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.” என்றார்

இயக்குநர் குட்டி ரேவதி பேசியதாவது,

“இந்த டீமின் ஹம்பல்ஸில் தான் நான் நிற்கிறேன். இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள் . வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்த நாளில் இசையை வெளியீட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை செய்வது போல செய்திருக்கிறார். நடிகர் ஹரி கிருஷ்ணன். நாங்கள் நினைத்த ஒரே ஹீரோ அவர்தான். ஹீரோயின் அக்ஷிதா நின்னு விளையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இந்தப்படத்திற்குப் பிறகு அவர் நெடுந்தூரம் பயணிப்பார் என்று நம்புகிறேன். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் கேரக்டர்களை நீங்கள் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு வாழ்வில் மிக முக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படி வரிசைப்படுத்தினால் அதை மாலா மணியன் அவர்கள் மூலமாகத் தான் துவங்க வேண்டும். சினிமாவில் இப்படியொரு ஆளைப் பார்ப்பது அரிது. இந்தப்படம் இருவரின் பயணம் தான். சரியாக திட்டமிட வேண்டுமென்பதையும் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும் என்பதையும் மாலா மணியன் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.” என்றார்

தயாரிப்பாளர் மாலா மணியன் பேசியதாவது,

“இந்த விழாவுக்கு பெரிய வி.ஐ.பி-க்களை கூப்பிடாததிற்கு காரணம் இந்த டீம் புதியது. இவர்களை இந்த விழா நாயக்ர்களாக காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வேறு யாரையும் அழைக்கவில்லை. படத்தை முடித்ததும் மணி ரத்னம் சாரிடம் ஒரு வார்த்தை தான் கேட்டேன். உடனே சரி என்று பாடலை வெளியீட்டார். ஏ.ஆர் ரகுமான் சாரிடம் ரேவதி கேட்டார். அவரும் உடனே ஒப்புக்கொண்டார். இந்தப்படத்தை தேர்ந்தெடுக்க காரணம். சின்ன பட்ஜெட்ல வித்தியாசமான படமா இருக்கணும். அதே சமயம் நல்ல கதையா இருக்கணும்னு நினைச்சேன். சென்னையில் ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரைக்கும் படப்பிடிப்பு குறிப்பிட்ட டைம்ல எடுத்து முடிச்சோம். ஹரி, அக்ஷிதா , நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா எல்லாரும் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இந்தப்படம் எடுக்கும் போது ஒரே விசயத்தை தான் நினைத்தேன். இந்தப்படத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் மகிழ்வான நினைவாக இருக்க வேண்டும் என்று. அது அப்படியே நடந்துள்ளது.”என்றார்

படத்தின் பாடல்களை பத்திரிகையாளர்கள், தேவிமணி, திரைநீதி செல்வம், கவிதா ஆகியோர் வெளியீட்டார்கள்.

மேலும் இப்படத்தின் பாடல் ப்ரோமோ மற்றும் டீசரை இயக்குநர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வெளியீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சினிமாவிலும் ஹீரோவாகும் ‘சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட்’ சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ்.

இங்குள்ள தொழிலாளர்களின் ஹீரோவாக பார்க்கப்படுபவர் இதன் உரிமையாளர் லெஜண்ட் சரவணன்.

தனது நிறுவன விளம்பரங்களில் இவரே நடித்து அசத்தி வருகிறார்.

விளம்பரங்களை கலாய்த்து மீம்ச்கள், விமர்சனங்கள் வந்தபோதிலும், அசராமல் நடித்தார்.

தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார் லெஜண்ட் சரவணன்.

இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை ஜேடி -ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர்.

இப்படம் வரும் 2020ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இப்பட ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

More Articles
Follows