தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (வயது 46). இது இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது.
தற்போது அவருக்கு இறுதி நேரத்தில் சிகிச்சையளித்த டாக்டர் ரமணராவ் என்பவரை அவரது ரசிகர்கள் மிரட்டத் தொடங்கியுள்ளனர்..
புனித் ஆபத்தான நிலையில் இருந்தபோது அவரை ஏன் ஆம்புலன்ஸில் அனுப்பவில்லை? இது டாக்டரின் அலட்சியமே என கூறி அவரை மிரட்டியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.
இந்த புகார் குறித்து டாக்டர் ரமணராவ் கூறியுள்ளதாவது…
”புனித் என் மகனைப் போன்றவர். அவரது இறப்பு ரசிகர்களைப் போலவே எனக்கும் வேதனையான ஒன்றுதான்.
புனித் என் கிளினிக்கு வந்தபோது இ.சி.ஜி. எடுக்கப்பட்டது.
அப்போது ஹார்ட் அட்டாக் அறிகுறி தென்பட்டதால், அவரது மனைவி அஸ்வினியிடம் தகவல் தெரிவித்து விக்ரம் மருத்துவமனைக்குக் கொண்டு போக சொன்னேன்.
அப்போது ஆம்புலன்ஸ் வரவழைத்து இருந்தால், டிராப்பிக்கில் வருவதற்கே குறைந்தபட்சம் 10-15 நிமிடங்கள் ஆகியிருக்கலாம்.
பின்னர் இங்கிருந்து அங்கு செல்வதற்கு 10 நிமிடங்கள் ஆகியிருக்கும்.
எனவே தான் அவரது காரிலேயே விக்ரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதற்குள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.
புனித் சிகிச்சையில் எவ்வித தாமதமும் அலட்சியமும் காட்டவில்லை” என டாக்டர் ரமணராவ் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புனித் ரசிகர்கள். இல்லையெனில் பெங்களூருவில் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதனால் கர்நாடக மாநில தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பினர் “டாக்டருக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்”என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து டாக்டர் ரமணராவ்வின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Puneeth Rajkumar’s doctor given police protection after protests by his fans