தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (வயது 46).
இது இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது.
அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
புனித் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
இதனால் அவருக்கு இந்த செய்தி தெரிவிக்கப்படவில்லை. அதனால் புனித் மறைவுக்கு அவர் இரங்கலும் தெரிவிக்கவில்லை.
தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாகவே ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் அவர் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தன் 2வது மகள் சௌந்தர்யா உருவாக்கிய ஹூட் செயலியில் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
இது குறித்து அவர் பேசியிருப்பதாவது:
‘நான் மருத்துவமனையில் இருந்தபோது அகால மரணம் அடைந்து விட்டார் புனீத்.
அந்த செய்தி எனக்கு பிறகு தான் சொல்லப்பட்டது. அதை கேட்டு நான் மிக மிக வேதனை அடைந்தேன்.
என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார்.
அவருடைய இழப்பை கன்னட சினிமாத் துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
Rajinikanth’s emotional condolence message to Punith Rajkumar