கேப்டன் விஜயகாந்த் படத்தலைப்பில் பிரபுதேவா நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழைய படத்தலைப்புகளை புதிய படத்திற்கு வைப்பது அண்மைக்காலமாக வாடிக்கையாகிவிட்டது.

அந்த வரிசையில் ‛ஊமை விழிகள்’ என்ற படமும் இணைந்துள்ளது.

32 ஆண்டுகளுக்கு முன்பு இதே பெயரில் வெளியான இப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்க ஆபாவாணன் தயாரிக்க விஜயகாந்த், கார்த்திக் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு பிறகு தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு சினிமாவில் பிரபலமானார்கள்.

தற்போது இதே பெயரில் உருவாகவுள்ள படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க வி.எஸ் என்ற புதுமுகம் இயக்குகிறார்.

விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய காஸிப் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே பிரபுதேவா நடிப்பில் பொன்மாணிக்கவேல், யங் மங் சங் படங்கள் வெளியாக தயாராகவுள்ளது.

மேலும் சல்மான்கான், சுதீப், சோனாக்ஷி சின்கா நடிப்பில் ஹிந்தியில் தபாங் 3 என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.

அடுத்த படத்தை தொடங்கிய சிரஞ்சீவி; மோகன்லால் & த்ரிஷா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவிய சிரஞ்சீவி, பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு (10 வருடங்களுக்கு) மீண்டும் சினிமாவுக்கே திரும்பிவிட்டார்.

2017ல் கத்தி பட ரீமேக்கான ‘கைதி நம்பர் 150’ படத்தில் நடித்தார். இந்தாண்டில் ‘சைரா’ படத்தில் நடித்தார். இந்த படமும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தன் அடுத்த படத்தை உடனே தொடங்கியுள்ளார்.

கொரட்டலா சிவா இயக்கவுள்ள இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் நாயகியாக த்ரிஷா நடிப்பார் என கூறப்படுகிறது. ஏற்கெனவே முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் படத்தில் இந்த ஜோடி நடித்திருந்தனர்.

இவர்களுடன் மோகன்லால் மற்றும் நதியா மற்றொரு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

விரைவில் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளது.

ஜிப்ஸியை முடித்துவிட்டு ‘யானை டாக்டரரை இயக்கும் ராஜுமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருதை பெற்ற ஜோக்கர் படத்தை இயக்கியவர் ராஜுமுருகன். இந்த படத்தை ‘ட்ரீம் வாரியர்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த நிலையில் இதே கூட்டணி மீண்டும் இணைகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள, ‘யானை டாக்டர்’ சிறுகதையை, படமாக்க இருக்கிறார்களாம்.

கால்நடை மருத்துவரான, வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி, தன் வாழ்நாள் முழுக்க, யானைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. கடந்த 2002ம் ஆண்டு மறைந்தார்.

இவரின் வாழ்க்கையைத்தான் படமாக்கவுள்ளனர்.

தற்போது ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி என்ற படத்தை இயக்கியுள்ளார் ராஜுமுருகன். அந்த படம் வெளியானவுடன் யானை டாக்டரை இயக்குவார் எனத் தெரிகிறது.

ஜெயலலிதாவின் படத்தில் எம்ஜிஆர் & கருணாநிதி யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக எடுத்து வருகின்றனர்.

தலைவா பட இயக்குனர் விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்க உள்ளார். அவர் இதற்கான கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராமிடம் நடன பயின்று வருகிறார்.

எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளாராம்.

கருணாநிதி கேரக்டரில் நடிக்க பிரகாஷ்ராஜிடம் பேசி வருகிறார்களாம். அவரின் பதிலுக்காக படக்குழு காத்திருக்கிறது.

ஏற்கெனவே மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் மோகன்லால் மற்றும் கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை காப்பாற்ற வரும் ரட்சகனாக சரவணன் ஸ்டோர்ஸ் ஓனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த ஒரு பண்டிகை காலம் என்றாலும் டிவி.க்களில் விளம்பரங்கள் அதிகம் வருவதை பார்த்திருப்போம். அதிலும் சென்னையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் அடிக்கடி வருவதை பார்த்திருப்போம்.

முன்பெல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்கு கோடி கோடியாக கொட்டி கொடுத்த இதன் ஓனர் சரவணன் அருள் தற்போது அவரே ஆடல் பாடல் என அசத்தலாக விளம்பரங்களில் வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஒரு சினிமாவில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

ஜேடி ஜெர்ரி என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு பேன்டசி படம் என்றும், பூமியில் வசிக்கும் மக்களை, வேற்று கிரகத்தில் இருந்து வந்து காப்பாற்றும் ரட்சகனாக அவர் நடிக்கவுள்ளாராம்.

நாயகி யார்? என்பதுதான் இதுவரை சஸ்பென்சாக உள்ளது. பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நடிக்க வரமாட்டுறாரு.; செம லாஸ்… சிம்பு மீது ஞானவேல்ராஜா புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிம்பு மீது புகார் கொடுக்காத தயாரிப்பாளர்களை எண்ணிவிடலாம் போல. தினம் அவர் மீது புகார்கள் வருகின்றன.

பரபரப்பாக அறிவிக்கப்பட்ட மாநாடு படத்தை சிம்புவின் கால்ஷீட் சொதப்பலால் அவரை படத்தில் இருந்து நீக்கினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்த நிலையில் கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக்கில் சிம்பு, கௌதம் கார்த்திக் இருவரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

கன்னட படத்தை இயக்கிய நார்தன் தான் தமிழிலும் இந்த படத்தை இயக்கினார். சிம்பு சிவ ராஜ்குமார் கதாபாத்திரத்திலும், கௌதம் கார்த்திக் ஸ்ரீமுரளி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர்.

இப்பட ஷூட்டிங்கிற்கும் சிம்பு செல்லாமல் இருந்துள்ளார்.

அப்படியே வந்தாலும் பாதிநாள் தான் சூட்டிங்கில் இருப்பாராம்.

தற்போது சிம்புவின் பிரச்சினையால் இந்த படமும் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இணைத்து புகார் கடிதமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ளார் ஞானவேல் ராஜா.

Gnanavel Raja complaint against Simbu on his call sheet issue

More Articles
Follows