விஜய்-அஜித்துக்கு அப்பாவாக நடிக்க ஆசைப்படும் செந்தில்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“ஒரு நாள் கூத்து“ படத்தில் நாயகி நிவேதா பெத்துராஜின் தந்தையாக நடித்தவர் செந்தில்.

இப்படத்தில் கூட தினேஷிடம் “பொண்ண விட அவங்க அப்பா செமையா இருக்காருல“ என்று பாலா சரவணன் சொல்லியிருப்பார். அந்த அப்பாதான் நடிகர் செந்தில்.

இவர் தன் திரையுலக அனுபவம் பற்றி கூறியுள்ளதாவது..

“1995 ஆம் ஆண்டு பிலிம் இன்ஸ்டிட்யுடில் சேர்ந்து ஆக்டிங் கோர்ஸ் பயின்றேன்.

சில வருடங்கள் டி.வி சீரியல்களில் நடித்தேன்.

அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள சினிமா மேனேஜராக முடிவு செய்தேன்.

சத்யராஜ் அவர்களும் சினிமாவில் மேனேஜராக இருந்து நடிகராக ஆனவர்தான்.

அதன்பின்னர் மேனேஜராக இருந்தேன். படிப்படியாக சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.

இப்போது ஒரு நாள் கூத்து, ப்ருஸ் லீ, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நடித்துள்ளேன்.

ஒரு நாள் கூத்து படத்தில் நெல்சன், ஒரு நல்ல கேரக்டரை எனக்கு கொடுத்தார்.

எனது சினிமா என்ட்ரீ லேட் ஆனதால், தற்போது அப்பா வாய்ப்புகளே அதிகம் வருகிறது.

எனவே, விஜய், அஜித், மற்றும் த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட அனைவருக்கும் அப்பாவாக நடிக்க காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.

கபாலி பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் கபாலி தரிசனம் கிடைக்க இன்னும் 30 நாட்கள் கூட முழுமையாக இல்லை.

இப்படத்தை பார்க்க பல கோடி ரசிகர்கள் உலகெங்கும் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவை அண்மையில் பார்த்துள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை முழுவதுமாக ரசித்து பார்த்தாராம் தலைவர்.

அதன்பின்னர் இயக்குனர் ரஞ்சித்தை அழைத்த ரஜினி ‘படம் சூப்பர். என்னுடைய பெஸ்ட் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

நிச்சயம் என் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ என மனதார பாராட்டினாராம்.

சிவகார்த்திகேயன் குரலை மாற்றிய ரசூல் பூக்குட்டி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிமுருகன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள படம் ‘ரெமோ’.

இதன் படப்பிடிப்புகள் பணிகள் முடிந்து, தற்போது டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் பெண் வேடம் உள்ளிட்ட மூன்று வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

அந்த பெண் வேடம் மட்டும், படத்தில் 45 நிமிடங்கள் வருகிறதாம்.

இந்நிலையில், இந்த பெண் வேடத்திற்கு சிவகார்த்திகேயனே குரல் கொடுக்க வருவதாக கூறப்பட்டது.

ஆனால் சில காட்சிகளில் பெண் குரல் சரியாக மேட்ச் ஆகவில்லை என்பதால், சிவகார்த்திக்கேயனை பேச வைத்து, அதை தொழில்நுட்ப உதவியுடன் பெண் குரலாக மாற்றியிருக்கிறாராம் ரசூல் பூக்குட்டி.

ரஜினியின் கபாலி – சூர்யாவின் மாஸ்… ஓர் ஒற்றுமை..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி படம் என்றாலே பன்ச் டயலாக்ஸ்க்கு பஞ்சம் இருக்காது.

அண்மையில் வெளியான கபாலியும் இதே வகைதான்.

இதில் இடம்பெற்ற…

“நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துடேன்னு…”

என்ற இந்த பன்ச் தற்போது படு பாப்புலராகியுள்ளது.

கடந்த வருடம் வெளியான மாஸ் படத்திலும் சூர்யா, இதே போல் ஒரு பன்ச் பேசியிருப்பார்.

“நான் இப்படி திரும்ப வருவேன்ன்னு எதிர்பாக்கல இல்ல.…” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தூதுவிடும் வேதாளம் வில்லன்.,. அஜித் ஓகே சொல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேதாளத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித்தின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என கூறப்படுகிறது.

தற்போது மற்ற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதால், விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது..

இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் வில்லனாக நடிக்க, கபீர் துகான் சிங் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இவரின் சமீபத்திய வலைத்தள உரையாடலில்…

‘வேதாளம் படத்தில் நடித்த 25 நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை.

அதுபோன்ற அற்புதமான நாட்களுக்காக மீண்டும் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இம்… அஜித் என்ன சொல்வாரோ பார்க்கலாம்..?

ஜெய்யுடன் இணையும் சூர்யா-கார்த்தியின் ஹீரோயின்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி தற்போது தனி ஹீரோவாக பல படங்களில் கலக்கி வருகிறார் ஜெய்.

இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில் இவருடன் முதன்முறையாக இணைகிறார் ப்ரணித்தா. இவர் சூர்யாவுடன் மாஸ், கார்த்தியுடன் சகுனி ஆகிய படங்களில் நடித்தவர்.

தேவதாஸ் என்ற கேரக்டரில் ஜெய்யும் காந்தா கேரக்டரில் ப்ரணித்தாவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், நவீன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மகேந்திரன் ராஜாமணி இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

ஷான் சுதர்சன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

More Articles
Follows