நயன்தாராவுடன் நடிக்க ஆசை; ஆனா இப்படி பண்றாங்களே..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூனியர், சீனியர் என எந்த நடிகர் என்றாலும் ஈகோ பார்க்காமல் நடிப்பவர் நயன்தாரா.

ஆனால் ஜூனியர் நடிகர் என்றால் ஒரு நிபந்தனை விதிக்கிறாராம் இவர்.

அதாவது படத்தின் கதை தன்னை மையப்படுத்தியே இருக்க வேண்டும் என்பதுதான் அது.

அப்படின்னா ஹீரோ கேரக்டர் கொஞ்சம் டம்மிதான்.

என்னடா இது நயன்தாராவுடன் ஜோடி போடலாம்ன்னு பார்த்தா இந்த பொண்ணு இப்படி குண்டை தூக்கி போடுதே என்று நொந்து கொள்கிறார்களாம் ஜூனியர்ஸ்.

 

 

 

 

‘ரஜினி செஞ்சா மட்டும்தான் பார்க்குறாங்க’ – அக்‌ஷய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் ’2.0’.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.
வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்பட அனுபவங்களை சமீபத்தில் தெரிவித்திருந்தார் அக்‌ஷய்குமார். அதில்…

“ரஜினிக்கு வில்லனாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அடிவாங்கிவது ஒரு சூப்பர் ஸ்டாரிடம் என்பதால் இப்படி உணர்கிறேன்.

ரஜினி சார் என்ன செய்தாலும் அது ஸ்டைல்தான்.

ஒருமுறை நான் ரஜினி சார், ஷங்கர் சார் மற்றும் படக்குழுவினர் ஒரு இடத்தில் இருந்தோம்.

ரஜினி சார் அவர் கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருந்தார். அப்போது தன் சட்டை மேல் இருந்த தூசியை தட்டிவிட்டார்.

அவர் தட்டிவிட்டது கூட ஸ்டைல்தான். அதை அனைவரும் ரசித்தனர்.

ஆனால் அதுபோல் நான் செய்தபோது யாரும் கண்டு கொள்ளவில்லை.

அதுபோல் ஷங்கர் அவர்களை பற்றியும் சொல்ல வேண்டும்.

அவர் டைரக்டர் அல்ல. சயின்ஸ்ட். ஏதாவது ஒரு புதுமைகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்.” என்றார் அக்‌ஷய்குமார்.

ஹாலிவுட் படத்திற்கு குரல் கொடுத்த ரஜினி-விஜய் பட வில்லன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எத்தனை வருடம் ஆனாலும் நாம் வியந்து பார்க்கும் படங்களில் ஒன்று ‘ஜூராஸிக் பார்க்’.

இப்படத்தை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

இவர் அண்மையில் இயக்கியுள்ள ‘The BFG’ என்ற ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

இதிலும் வழக்கம்போல் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறாராம் இயக்குனர்.

இந்தியாவிலும் மட்டும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் முக்கிய குரல் கொடுத்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு.

இவர் ரஜினிக்கு வில்லனாக ‘லிங்கா’ படத்தில் நடித்தவர்.

தற்போது ‘விஜய் 60’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை ரஜினி வருகை… வரவேற்க தயாராகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலிடா, நெருப்புடா என தமிழகமே பரபரத்து கொண்டிக்கும் வேளையில், ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். எனவே அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் மீடியாக்களை ஆக்ரமித்தன.

அமெரிக்கா சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டதால், ரஜினியின் வருகைக்காக கபாலி படக்குழுவும் ஷங்கரின் 2.0 படக்குழுவும் காத்திருக்க தொடங்கின.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் நாளை (3-ம் தேதி) சென்னை திரும்புகிறார் என தகவல்கள் வந்துள்ளன.

எனவே விமான நிலையத்தில் ரஜினியை வரவேற்க ரசிகர்களும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

மறுநாளே 4ஆம் தேதி தயாராக உள்ள கபாலி பர்ஸ்ட் காப்பியை பார்க்க இருக்கிறாராம்.

அதன்பின்னர் 7ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்படுகிறது.

சென்சார் சான்றிதழ் கிடைத்த உடன் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுவரை வந்துள்ள தகவல்களின் படி கபாலி 22ஆம் தேதி ரிலீசாகும் என்பதே உறுதியாக தெரிகிறது.

சுந்தர் சி.யின் ‘சங்கமித்ரா’வில் விஜய்..? மகேஷ்பாபு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமான ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது.

இதன் படப்பிடிப்பை செம்டம்பரில் தொடங்கவுள்ளதால், படத்தின் கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகவிருப்பதால் சங்கமித்ரா என பெயரிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், கலைக்கு சாபு சிரில், கிராபிக்ஸ் பணிகளுக்கு ஆர்.சி. கமலக்கண்ணன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவரிடமும் பேசி இருக்கிறார்களாம்.

ஆனால் இருவரில் தரப்பில் இருந்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இருந்தாலும் டாப் ஹீரோ ஒருவரைத்தான் இப்படத்தில் நடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் சுந்தர் சி.

‘அஜித்துக்காக சென்றவர்தான் கௌதம்..’ சிம்பு ரசிகர்கள் பதிலடி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம் பெற்ற தள்ளிப் போகாதே பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ரசிகர்கள் இப்பாடலை பெரிதும் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

ஆனால் அப்பாடல் இதுவரை படமாக்கவில்லை என்றும் அதற்கு சிம்பு ஒத்துழைக்க இல்லை எனவும் கௌதம் தெரிவித்திருந்தார்.

சிம்புவுக்கு சம்பள பாக்கி உள்ளது எனவேதான் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என சிம்பு தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

எனவே சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதப் பொருளாகி விட்டது.

இதற்கு சிம்பு ரசிகர்கள் தெரிவித்துள்ளதாவது..

‘கௌதம் மேனன் நிதி நெருக்கடியில் இருந்த போது முதல் ஆளாக கால்ஷீட் கொடுத்தவர் சிம்புதான்.

ஆனால், அஜித்தின் என்னை அறிந்தால் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்றார் கௌதம்.

அதற்கும் சிம்பு விட்டுக் கொடுத்தார். ஆனால் அவர் தற்போது சிம்புவை பற்றி பேசியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது’ என தெரிவித்துள்ளனர்.

More Articles
Follows