நாகர்ஜுனா மகன் நாக சைதன்யா – சமந்தா திருமணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் நாகர்ஜுனா. இவரது மகன் குறித்து இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது…

“ என் மகன் நாகசைதன்யா ஒரு பெண்ணை மணக்க தேர்ந்தெடுத்திருக்கிறார். இதனால் நானும், என் மனைவி அமலாவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்” என்றார்.

நாகர்ஜுனா, மணப்பெண்ணாக குறிப்பிட்டது நடிகை சமந்தாவைத் தான் என டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

நாக சைதன்யாவும் சமந்தாவும் தெலுங்கில் “விண்ணைத் தாண்டி வருவாயா”மற்றும் “மனம்” என்று ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

அந்த சமயங்களில் இவர்களின் காதல் பற்றி செய்திகள் வந்தபோது இருவரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று செல்வா; இன்று கௌதம்… சிம்புவால் சிக்கிய இயக்குனர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்த கான் படத்தின் சூட்டிங் பாதியிலே நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த அச்சம் என்பது மடமையடா படமும் கைவிடப்படும் சூழ்நிலையை நெருங்கி வருவதாக தோன்றுகிறது.

இதன் படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வருவதில்லையாம்.

இதனால் பெரும் ஹிட்டடித்த ‘தள்ளிப் போகாதே’ பாடல் இதுவரை படமாக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன்.

மேலும் துருக்கி நாட்டில் நடந்த சூட்டிங்கில் கலந்த கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ரூ 80 லட்சம் செலவில் தெலுங்கு பதிப்பை மட்டும் முடித்து விட்டு வந்திருக்கிறார்களாம்.

ஒரு நேரத்தில் சிம்புவாக ஆதரவாக இருந்தவர் கௌதம் மேனன் மட்டுமே.

ஆனால் தற்போது அவரே சிம்புவை பற்றி இப்படி கூறியிருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் நாலு ஹீரோஸ் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து, ஐந்து ஹீரோக்கள் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் பாலா.

இப்படத்தை 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அர்விந்த்சாமி, விஷால், ஆர்யா, ராணா, அதர்வா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தற்போது பாலாவை போல் கௌதம் மேனனும் நான்கு ஹீரோக்கள் கொண்ட ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

தனுஷ் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு ‘ஒன்றாக’ என பெயரிட்டுள்ளார்.

பிருத்விராஜ், புனித் ராஜ்குமார், சாய் என மூன்று ஹீரோக்கள் கமிட்டாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுடன் ஜெயம் ரவியும் விரைவில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஹீரோக்களை போல நான்கு ஹீரோயின்களும் இருக்கின்றனர். இதில் நடிக்க அனுஷ்கா, தமன்னா ஆகிய இருவரும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.

மற்ற நாயகிகள் யார்? என்று இதுவரை தெரியவில்லை.

நாலு நண்பர்கள் ஒன்றாக சுற்றுலா செல்வதை கொண்டு இப்படம் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்-சூர்யா-சிம்பு-சிவகார்த்திகேயன்… இந்தாண்டில் யார் படம் அதிக வசூல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு (2016) தொடங்கி ஆறு மாதங்கள் இன்றோடு நிறைவு பெறுகிறது.

இன்று வரையில் தமிழின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால், ஆர்யா, சித்தார்த் ஆகியோரின் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடிகர்களின் படங்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வரவேற்பை போன்றே வெளிநாடுகளிலும் உள்ளது.

இதில் விஜய்யின் ‘தெறி’ மற்றும் சூர்யா தயாரித்து 3 வேடங்களில் நடித்த ’24’ ஆகிய படங்கள் அதிகம் வசூலை வெளிநாடுகளில் ஈட்டியுள்ளது.

இவை இரண்டும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

‘தெறி’ படம் 45 கோடிகளை வசூல் செய்துள்ளது.

’24’ படம் ரூ. 31 கோடிகளை வசூல் செய்துள்ளது.

‘ரஜினிமுருகன்’ படம் ரூ. 13 கோடிகளையும் ‘அரண்மனை 2’ ரூ. 9.5 கோடிகளையும் ‘இது நம்ம ஆளு’ படம் ரூ. 4.6 கோடிகளையும் வசூல் செய்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களை பிடித்த படங்கள்…

· மாதவனின் ‘இறுதிச்சுற்று’ ரூ. 3.8 கோடி

· ஜெயம் ரவியின் ‘மிருதன்’ ரூ. 4 கோடி

· விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ ரூ. 3.2 கோடி

· எஸ்.ஜே. சூர்யாவின் ‘இறைவி’ ரூ. 2.2 கோடி

· விஜய் சேதுபதியின் ‘சேதுபதி’ ரூ. 2 கோடி

சத்யராஜ்-சமுத்திரக்கனியுடன் இணைந்த ஷாம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜூலை 1ஆம் தேதி சத்யராஜ் மற்றும் சிபிராஜ் நடித்துள்ள ஜாக்சன் துரை வெளியாகிறது.இத்துடன் சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து நடித்துள்ள அப்பா படமும் வெளியாகிறது.

இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஷாம், மனீஷா ஆகியோர் நடித்துள்ள ‘ஒரு மெல்லியகோடு’ படமும் நாளை வெளியாகிறதாம். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கியுள்ளார்.

இப்படம் ஒரு சில மாதம் முன்பே வெளியாக இருந்ததால் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சிகளும் திரையிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போன இப்படம் நாளை ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களுடன் மஜீத் இயக்கிய பைசா படமும் ராம் கோபால் வர்மா இயக்கிய வில்லாதி வில்லன் வீரப்பன் படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கபாலியில் இணைந்த மோகன்லால்… ரஜினி என்ன சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவ்வப்போது நேரடி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையில் தமிழ் படங்களின் கேரள உரிமையையும் பெற்று விநியோகம் செய்து வருகிறார்.

தற்போது மிக எதிர்பார்ப்புக்குள்ளாகிய ரஜினியின் கபாலி படத்தின் விநியோகத்தையும் பெற்றுள்ளாராம்.

கேரளாவில் மட்டும் 160க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் ரூ. 8.5 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ரஜினியும் மோகன்லாலும் நல்ல ப்ரெண்ட்ஸ் என்பதால் கேரளாவில் நடைபெறும் புரமோஷன்களிலும் ரஜினியை கலந்துகொள்ள கேட்டுக் கொண்டாராம் லால் சேட்டன்.

ரஜினியும் சரி என்று சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

More Articles
Follows