தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழ் சினிமாவின் கிளாசிக் இயக்குனர் என்ற பெயர் டைரக்டர் கௌதம் மேனனுக்கு உண்டு.
எந்த ஆக்சன் ஹீரோவாக இருந்தாலும் இவரது படங்களில் மென்மையாக காட்டிவிடுவார்.
அதுபோல்தான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்புவை ரொமான்டிக் ஹீரோவாக்கினார்.
இப்படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசை பெரும் உதவியாக இருந்தது.
இதனையடுத்து அச்சம் என்பது மடமையடா என்ற படத்திலும் இந்த மூவர் கூட்டணி இணைந்தது. இது கடந்த 2016ல் வெளியானது.
தற்போது 3வது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளதாம்.
தற்போது இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் முழுமையான தகவல்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.
இது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் 2ஆம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளது.
AR Rahman Gautham Menon and Simbu to team up for 3rd time