சிவகார்த்திகேயன் பிரச்சினைக்காக ஒன்று கூடும் நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் நடைபெற்ற ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க பேசினார்.

தன் படங்களுக்கு சிலர் பிரச்சினை எழுப்புவதாக அப்போது கூறினார்.

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பேசியபோது…

“சிவகார்த்திகேயன் பிரச்சினை குறித்து புகார் நடிகர் சங்கத்திற்கு வந்துள்ளது. இதற்கு நிச்சயம் நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும்.

இது தொடர்பாக விரைவில் அனைத்து நடிகர்களுடன் ஒன்று கூடி ஆலோசிக்க இருக்கிறோம்.

இதில் முன்னணி நடிகர்களின் கருத்துக்களும் இடம்பெறும். என்றனர்.

டி.ராஜேந்தருடன் மடோனாவின் ‘நியூ இயர் சாங்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கவண்.

அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்து வருகிறார். நவம்பரில் இதன் இசை வெளியாகும் எனத் தெரிகிறது.

தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் உள்ள ஒரு பாடலை மடோனா செபாஸ்டியனும் டி.ராஜேந்தரும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்.

ஒரு நியூ இயர் ஆரம்பம் ஆவது போல இப்பாடலை வடிவமைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.

சரத்குமாரின் படத்தலைப்பை கைபற்றிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் நிறைய படங்கள் உருவாகி வெளியானாலும் சில படங்கள் இன்னும் கிடப்பில் உள்ளன.

அதில் இடம் பொருள் ஏவல் மற்றும் மெல்லிசை ஆகிய படங்கள் முடிவடைந்தும் சில பிரச்சினைகள் காரணமாக வெளியாகவில்லை.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள மெல்லிசை படத்தில் காயத்ரி, ராம்திலக், சோனியா தீப்தி, அர்ஜீனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மெல்லிசை படத்தின் தலைப்பை புரியாத புதிர் என மாற்றியுள்ளனர்.

இது 1990ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், ரகுமான், ரகுவரன் நடிப்பில்இப்படம் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஜேஎஸ்கே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த புதிய புதியாத புதிரை நவம்பரில் வெளியிடவுள்ளனர்.

 

ஒரே நாளில் இணைந்து வரும் விஷால்-ஜிவி.பிரகாஷ்-கயல் சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி கொண்டாட்டத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.

ஒரு பக்கம் ரசிகர்களுக்கு விருந்தாக 4 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

மறுப்பக்கம் பாடல்கள் வெளியீட்டு விழாவும் தடபுடலாக நடைபெற்று வருகின்றது.

இன்று மட்டும் மூன்று படத்தின் பாடல்கள் வெளியாகிறது.

1) ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையி விஷால் நடித்துள்ள கத்தி சண்டை. சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ளனர்.

2) ஜிவி. பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு. ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

3) இமான் இசையமைத்து கயல் சந்திரன் நடித்துள்ள ரூபாய். சாட்டை படப்புகழ் அன்பழகன் இயக்கியுள்ள இப்படத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

பவர் ஸ்டார் படத்திற்கு அனிருத் இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக இளைஞர்களின் இசை நாயகனாக அனிருத் திகழ்ந்து வருகிறார்.

இவர் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கவுள்ள ஒரு படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

இதன் சூட்டிங் நவம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்

ஒரு படம் பார்க்க 500 ரூபா கொடுப்பீங்களா.? டிக்கெட் ரேட் உயருதாம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியேட்டரில் படம் பார்க்க வருபவர்களை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் பிழைத்து வருகிறார்கள்.

பார்க்கிங் கட்டணம் முதல் பாப்கார்ன், பப்ஸ், குடி நீர் என அனைத்தையும் கறந்துவிடுகின்றனர். (இதில் சுவையும் ஒன்றும் பெரிதாக இருப்பதில்லை)

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1000 தியேட்டர்கள் உள்ளன.

இவைகளில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் மல்டிபிளக்ஸ் எனப்படும் காம்ப்ளக்ஸில் மூன்று முதல் நான்கு தியேட்டர்கள் வரை உள்ளன.

இவைகளில் அரசு நிர்ணயித்த கட்டணப்படி சராசரியாக ரூ. 120 டிக்கெட் விற்கப்படுகிறது.

ஆனால் மற்ற தியேட்டர்களில் ஹீரோக்களின் மார்கெட் பொறுத்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை இருக்கும்.

ரஜினியின் கபாலி படத்திற்கு ரூ. 1000, 2000 வரை விற்கப்பட்டதெல்லாம் வேறுகதை.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கின் மீதான விசாரணையில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து அரசு ஒரு மாதத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

அதாவது கிட்டதட்ட ரூ. 350 வரை பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் விற்கப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.

நாங்க எல்லாம் படம் பாக்குறதா? வேண்டாமா? என்று நீங்கள் சொல்லும் மைண்ட் வாய்ஸை நாங்க கேட்ச் பண்ணிட்டோம் பாஸ்

More Articles
Follows