ரஜினி-விஜய்-தனுஷ்-சிம்பு பற்றி மஞ்சிமா பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள மங்கை மஞ்சிமா மோகன் தமிழில் அறிமுகம் ஆகப்போகும் படம் அச்சம் என்பது மடமையடா.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த வாரம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் தற்போது கலந்துரையாடி வருகிறார் மஞ்சிமா. அப்போது ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதில்

ரஜினிகாந்தை பற்றி ஒருவர் கேட்டபோது…

அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது.

விஜய்யை பற்றி ஒரு வார்த்தை என கேட்டபோது… விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. அவருடன் விரைவில் நடிக்க ஆசை.

அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தபோது ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க சிரமமப்பட்டேன்.

சிம்புவுடன் மீண்டும் நடிப்பீர்களா? என கேட்டதற்கு… “நிச்சயமாக நடிப்பேன். அவர்தான் மீண்டும் நடிப்பாரா? என சொல்ல வேண்டும்.

அவர் ஒரு யதார்த்த நடிகர். சிறந்த மனிதர்” என்றார்.

தனுஷ் பற்றி கேட்டபோது… அவர் திறமைகள் நிறைந்தவர் என்றார்.

பின்னர் நடிகைகளிடம் வழக்கம்போல் நீங்கள் நடிகையாக வராவிட்டால் என்னவாகி இருப்பீர்கள் என ஒருவர் கேட்டார்? அதற்கு டான்ஸர் ஆகியிருப்பேன் என்றார்.

மீண்டும் இணையும் ஹாலிவுட்-ஆசியா சூப்பர் ஸ்டார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகளவில் ரசிக்கப்படும் படங்களாக ஹாலிவுட் திரைப்படங்கள் என்றும் உள்ளது.

இதனால் ஹாலிவுட் படங்களுக்கு என்றும் தனி மார்க்கெட் உள்ளது.

இந்நிலையில், ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த ‘ரஷ் ஹவர்’ உள்ளிட்ட படங்கள் படு பிரபலமானது.

தற்போது இதே சூப்பர் ஸ்டார் மற்றொரு ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையவிருக்கிறாராம்.

அவர் வேறு யாருமல்ல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட்தான்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டான VIY படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர்கள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பே இவர்கள் ‘Around the World in 80 Days’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அப்படம் கடந்த 2004ஆம் ஆண்டில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலர் தினத்திற்காக காத்திருக்கும் கார்த்தி – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காஷ்மோரா படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் படம் ‘காற்று வெளியிடை’.

மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கார்த்தியுடன் ஆதிதி ராவ், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறது.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது.

இப்படத்தின் பாடல்களை வருகிற 2017 ஜனவரியிலும், இப்படத்தை பிப்ரவரியில் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடவிருக்கிறார்களாம்.

இதே நாளில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படமும் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தனுஷ் ஏன் அப்படி சொன்னார்..? தீராத குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா நடிகர்களில் அதிகமான ட்விட்டர் பாலோயர்களை வைத்திருப்பவர் நடிகர் தனுஷ்.

கிட்டதட்ட 36 லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை ட்விட்டரில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இவரும் இவரது கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்… யோசியுங்கள்… என பதிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால் அவரது ரசிகர்களோ அது என்னவாக இருக்கும் என தீராத குழப்பத்தில் உள்ளனர்.

விரைவில் இதற்கான விடையை அவரே ட்விட்டரில் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

announcement soon. Guess what.

மூன்றெழுத்து மந்திரத்தை உடைத்த ‘சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் காலகட்டங்களை டாப் ஹீரோக்களை வைத்து பிரித்துவிடலாம்.

என்.எஸ்.கே காலம் தொட்டு இதுவே நடைமுறையாக இருந்து வருகிறது.

அவருக்கு பிறகு எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் என்று சொல்லலாம்.

இந்த ஹீரோக்களின் பெயர்கள் பெரிதாக இருந்தாலும் பெரும்பாலும் இவர்களின் பெயர்கள் மூன்றெழுத்தில் அடங்கிவிடுகிறது.

அதன்பின்னர் இதுவே தொடர்கதையாகி விடுகிறது.

ரஜினி-கமல் என்று ஆரம்பித்து விஜய்-அஜித்-சூர்யா என தொடர்ந்து, அதன்பின்னர் தனுஷ்-சிம்பு என்று நீள்கிறது.

கிட்டதட்ட கடந்த 60 வருட தமிழ் சினிமாவுக்கு இந்து மூன்றெழுத்து ஹீரோக்கள் தானாகவே அமைந்தனர்.

ஆனால் தற்போது வளர்ந்து வரும் கலைஞர்களான சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி இருவரும் இதனை உடைந்து தெறிந்துள்ளனர் எனலாம்.

நீண்ட பெயர்களை இவர்கள் வைத்திருந்தாலும் தற்போது டாப் ஹீரோக்களின் வரிசையில் இவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

இனி இந்த பெயர் வரிசையில் தமிழ் சினிமாவின் காலகட்டம் அமைக்கப்படுமா? அல்லது மறுபடியும் மூன்றெழுத்து மந்திரம் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நிஜமாலுமே ‘கெத்து’ காட்டும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற நவம்பர் 10ஆம் தேதியுடன் அஜித் நடித்த வேதாளம் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது.

இதற்காக ரோகினி திரையரங்கில் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முதலில் ஒரு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர் ரசிகர்கள் பேராதரவு பெருக பெருக தற்போது நான்கு காட்சிகள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜிகே சினிமாஸிலும் சிறப்பு காட்சிக்கு (மாலை 7.05 மணிக்கு) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் எத்தனை காட்சிக்கு ஏற்பாடு செய்யப்போகிறார்களோ…?

More Articles
Follows