கார்த்தியை அடுத்து மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, சிரஞ்சீவியின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான ராம்சரண்தேஜா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம் மணிரத்னம்.

‘காற்று வெளியிடை’ படத்தை முடித்துவிட்டு, இப்படத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு பக்கா கமர்ஷியல் மாஸாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி போஸ்டர்கள் கிழிப்பு; வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் காவேரி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், வழக்கம்போல் ரஜினியின் பெயரும் இதில் அடிபடுகிறது.

இதனால் கர்நாடகாவில் பல இடங்களில் ஒட்டியிருந்த கபாலி போஸ்டர்களை கன்னடர்கள் கிழித்து வருகின்றனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகளை தீயிட்டு கொளுத்திவிட்டனர்.

இதனால் கர்நாடகாவில் பதட்டம் நிலவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அஜித் அளவு உயராத ஜெய் இப்படி செய்யலாமா.? சிவா பரபரப்பான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு தயாரித்து இயக்கியுள்ள சென்னை 28 இன்னிங்ஸ் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இதில் வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி, மிர்ச்சி சிவா, வைபவ், விஜயலெட்சுமி, மகேஸ்வரி, மகத் உள்ளிட்ட படக்குழுவினருடன் படத்தில் நடித்துள்ள தயாரிப்பாளர் டி.சிவாவும் கலந்துகொண்டார்.

அப்போது படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜெய் இவ்விழாவுக்கு வராதது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து டி.சிவா பேசியதாவது…

“நடிகர் அஜித் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்து விட்டார்.

பொதுவிழாக்களில் கலந்துகொள்ளாமல் ஒரு டிரெண்டை கிரியேட் செய்தார் அஜித்.

ஆனால் வளரும் நடிகரான ஜெய், இவ்விழாவுக்கு வராமல் இருந்தது சரியல்ல.

அவர் இன்று நடிகராக உயர இந்த சென்னை 28 படத்தின் முதல் பாகம்தான் காரணம்.”

என்று பரபரப்பாக பேசினார்.

பைரவா பைட்; அஞ்சு வருஷத்துக்கு பிறகும் அதே ஸ்டைல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் இருவேடம் ஏற்று விஜய் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

இதில் முக்கியமான சமூக பிரச்சனைகளை பற்றி அலசி இருக்கிறார்களாம்.

இதற்கு முன்பு வெளியான வேலாயுதம், கத்தி ஆகிய படங்களில் இதே பாணியை விஜய் பின்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பைரவா படத்தின் ஒரு சண்டை காட்சியில், சட்டையில்லாமல் வில்லன்களுடன் மோதுகிறாராம்.

கடந்த 2011 ஆண்டில் வெளியான வேலாயுதம் படத்தின் க்ளைமேக்ஸில் இப்படியொரு சண்டைக்காட்சி இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சரத்குமார்-ராதாரவி-சந்திரசேகர் நீக்கம்; நடிகர் சங்கம் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர் பதவி வகித்து வருகிறார்.

இவர் தலைமையிலான அணி பதவியேற்றது முதல் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செயற்குழு கூட்டப்பட்டு, சில நடவடிக்கைகள் அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் தற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளர்.

இது அவர்களை பழிவாங்கும் எண்ணம் இல்லையென்றும், சங்க சொத்து வாங்கல் விற்றலில் நடந்துள்ள முறைகேடுகளுக்கான நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற முடிவுக்கு பிறகு தொடர் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்கு தர்மசங்கடம்; காவிரி பிரச்சினை பற்றி பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிஷோர், லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடிகார மனிதர்கள்.

வைகறை பாலன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பேசியதாவது…

“காவிரி பிரச்சனை பற்றி பேசினாலும் பிரச்சினை. பேசாமல் இருந்தாலும் பிரச்சினை. கன்னட நடிகர்கள் ஏதோதோ பேசுகிறார்கள்.

அதை கேட்கும் நமக்கே இப்படி இருக்கிறது என்றாலும் கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ்நாட்டிற்கு வந்து, சூப்பர் ஸ்டாரா இருக்கும் ரஜினிக்கு எப்படியான தர்மசங்கடம் ஏற்பட்டு இருக்கும்.

இந்த காவிரி நீர் பிரச்சனையை அமைதியாக பேசித் தீர்த்துக் கொள்வதுதான் சரியான வழி.” என்றார்.

More Articles
Follows