தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது இவரின் பாடல்கள் இல்லாத படமே தமிழில இல்லை என்னுமளவுக்கு நிறைய பாடல்கள் எழுதியுள்ளார்.
புரியாத வார்த்தை, புதுப்புது வார்த்தை என்று செல்கின்ற தமிழ் சினிமாவை தன் அழகான தமிழ் சொற்களால் கட்டி போட்டு வைத்திருப்பவர் இவர்.
ஆனால் மரணம் இவரை இன்று காலை கட்டிக் கொண்டு அழைத்துச் சென்று விட்டது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் இன்று இயற்கை எய்தினார்.
இச்சம்பவம் கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கமீன், சைவம் படங்களின் பாடல்களுக்காக தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார்.
இவரது மனைவி பெயர் தீபலக்ஷ்மி (37) மகன் ஆதவன் (9) மகள் யோகலக்ஷ்மி 8 மாதம்
சினிமாவில் அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பாடல்களை எழுதியவர் இவர். கடந்த 15 வருடங்களில் 1,500 பாடல்களை இவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
