பாடலாசிரியர் நா. முத்துக்குமார் திடீரென மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீமானின் வீர நடை திரைப்படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானவர் நா. முத்துக்குமார்.

தற்போது இவரின் பாடல்கள் இல்லாத படமே தமிழில இல்லை என்னுமளவுக்கு நிறைய பாடல்கள் எழுதியுள்ளார்.

புரியாத வார்த்தை, புதுப்புது வார்த்தை என்று செல்கின்ற தமிழ் சினிமாவை தன் அழகான தமிழ் சொற்களால் கட்டி போட்டு வைத்திருப்பவர் இவர்.

ஆனால் மரணம் இவரை இன்று காலை கட்டிக் கொண்டு அழைத்துச் சென்று விட்டது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் இன்று இயற்கை எய்தினார்.

இச்சம்பவம் கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கமீன், சைவம் படங்களின் பாடல்களுக்காக தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார்.

இவரது மனைவி பெயர் தீபலக்‌ஷ்மி (37) மகன் ஆதவன் (9) மகள் யோகலக்‌ஷ்மி 8 மாதம்

சினிமாவில் அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பாடல்களை எழுதியவர் இவர். கடந்த 15 வருடங்களில் 1,500 பாடல்களை இவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கபாலியுடன் என்னை இணைத்த தாணு சாருக்கு நன்றி’ – சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செந்தில்குமார் இயக்கத்தில் சாந்தனு, கே.பாக்யராஜ், கவுண்டமணி, தியாகராஜன், பூர்ணிமா பாக்யராஜ், மனோஜ், பிருத்வி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வாய்மை.

இப்படத்தின் பிரஸ்மீட் சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் எஸ்.தாணு, கபாலி டைரக்டர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் சாந்தனு பேசியதாவது…

“வாய்மை பட இயக்குனர் செந்தில்குமார் இப்படக் கதையை என்னிடம் முழுவதுமாக சொல்லவில்லை.

ஏதோ தோராயமாகத்தான் சொன்னார். ஆனால் நான் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டர் என்பதால் ஓகே செய்தேன்.

முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்தார்.

இதில் ஒரு அழகான சோசியல் மெசேஜை சொல்ல வரும் படம். இதுபோன்ற கருத்துள்ள படத்தை நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

நான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமாணம் படத்தின் டீசரை கபாலி படத்துடன் வெளியிட்டுள்ளார் தாணு.

அவர் செய்துள்ள இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன்” என்றார்.

சிவகார்த்திகேயனின் நல்ல மனசு யாருக்கு வரும்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், மோகன் ராஜா இயக்கவுள்ள படத்திற்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிவகார்த்திகேயனை தங்கள் பட விழாக்களுக்கு அழைக்காத பிரபலங்கள் இல்லை என்னுமளவுக்கு பிஸியாகி வருகிறார்.

  • கடந்த ஜீலை 20 முடிஞ்சா இவன புடி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இசை குறுந்தகடை பெற்றார்.
  • அதன்பின்னர் ஆகஸ்ட் 2 இருமுகன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
  • அன்றைய தினமே நட்ராஜ் நடித்துள்ள போகன் படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்டார்
  • அதன்பின்னர் ஆகஸ்ட் 8 யானும் தீயவன் ட்ரைலரை வெளியிட்டார்
  • ஆகஸ்ட் 11 சகா படத்தில் இடம்பெற்ற யாவும் என்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டார்.

மேலும் ட்விட்டரிலும் யூடிப்பிலும் மற்ற படங்களை புரோமோட் செய்கிறார்.

என்னதான் பிஸியாக இருந்தாலும் மற்ற படங்களில் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தும் சிவகார்த்திகேயன் நல்ல மனசுக்கு யாரும் வரும் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

‘தளபதி 60’ படத்தின் தலைப்பு பற்றிய முக்கிய தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஸ்ரீமன், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தளபதி 60.

விஜயா புரொடெக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக இந்த பெயரை அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட்டான “எங்கள் வீட்டு பிள்ளை“ என பெயரிடப்படலாம் என பல செய்திகள் வந்தன.

மேலும் இத்தலைப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து இப்படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“எங்கள் வீட்டு பிள்ளை “ என்னும் தலைப்பை சூட்டும் எண்ணம் இல்லை.
தலைப்பு வைப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்.” என தெரிவித்துள்ளனர்.

கபாலி சாதனையை நெருங்குமா இருமுகன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி, பிரம்மாண்டத்தை விட பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

எனவே இப்படத்தின் சென்னை உரிமையை பெற்ற ஜாஸ் சினிமாஸ் அதிக லாபத்தை ஈட்டியது.

மூன்றே வாரத்தில் சென்னையில் மட்டும் ரூ.12 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளார் கபாலி.

தற்போது இந்நிறுவனம் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தின் சென்னை உரிமையை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

எனவே ‘கபாலி’ படத்தின் சாதனைகளை ‘இருமுகன்’ நெருங்குமா? என்பதை இரண்டு வாரங்கள் காத்திருந்து பார்ப்போம்.

ஒரே நாளில் விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்களுக்கு ஜெயா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) இந்திய நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

இதற்காக சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு வாகா, ஜோக்கர் உள்ளிட்ட படங்கள் நேற்று வெளியாகவுள்ளன.

ஆனால் முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் விஜய், அஜித், சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஜெயா டிவி அவர்களின் சூப்பர் ஹிட் படங்களை ஒளிப்பரப்புகிறது.

காலை 9 மணிக்கு சூர்யா நடித்த மாயாவி, மாலை 3 மணிக்கு விஜய் நடித்த வேலாயுதம் மற்றும் மாலை 6 மணிக்கு அஜித் நடித்த என்னை அறிந்தால் படங்கள் நாளை (ஞாயிறு) ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒளிப்பரப்பப்படுகிறது.

More Articles
Follows