‘ரெமோ’-வில் செகன்ட் ஹீரோயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பேசிய ஒரு சிலர், கீர்த்தி சுரேஷ் படத்தின் இரண்டாவது நாயகி என்றனர்.

அதற்கு காரணம்… இதில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப் (பெண் வேடம்) இடுவதால், சிவா கீர்த்தியை விட அழகாக இருப்பதாகவும் எனவே சிவகார்த்திகேயன் தான் முதல் நாயகி என்றனர்.

இதனால்தான் கீர்த்தி சுரேஷை செகன்ட் ஹீரோயின் என்றார்களாம்.

ரஜினியை தொடர்ந்து கமல் பாடலை தலைப்பாக்கிய படக்குழு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஹிட் அடித்த படங்களையோ அல்லது பாடல்களையோ புதுப்படத்திற்கு தலைப்பாக வைப்பது பேஷன் ஆகிவிட்டது.

ரஜினி படத்தலைப்புகள் மற்றும் பன்ச் டயலாக்குகளை தலைப்பாக வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன.

இவ்வழியில் தற்போது கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் பாடலான விஸ்வரூபம் படத்தின் ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ என்ற பாடலை தலைப்பாக்கியுள்ளனர்.

இதில் விஷ்ணு நாயகனாக நடிக்க வர்ஷா, இஷ்ரா நாயகிகளாக நடிக்கின்றனர்.

சுரேஷ்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

Own Company சார்பாக அசோக்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நாளை மறுநாள் (ஜீன் 26ஆம் தேதி) வெளியாகிறது.

ஸ்ரீதேவி-அசின்-த்ரிஷா வரிசையில் மிர்துளா முரளி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவை தங்கள் நடிப்பால் கவர்ந்த ஸ்ரீதேவி, அசின் மற்றும் திரிஷா ஆகியோர் பாலிவுட்டுக்கும் சென்று கலக்கியிருந்தனர்.

தற்போது அவர்களின் வரிசையில் இணையவிருக்கிறார் கேரளத்து நடிகை மிர்துளா முரளி.

இவர் சூப்பர் ஹிட்டான ‘ஐயாள் நானல்ல’ மற்றும் ‘ஷிகாமணி’ ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார்.

தற்போது திக்மான்ஷு துளியா இயக்கவுள்ள ‘ராஃக் தேஷ்’ படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

ஹிந்தி சினிமாவில் பலத்தரப்பு மக்களின் பாராட்டுகளை பெற்ற ‘பான் சிங் டோமர்’ மற்றும் ‘சாஹேப், பீவி ஆர் கேங்ஸ்டர்’ படங்களை இயக்கியவர் திக்மான்ஷு என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பிரபல ஹிந்தி நடிகை சோனம் கபூரின் சகோதரர் மோஹித் மார்வா நாயகனாக நடிக்கிறார்.

இந்திய ராணுவ விசாரணையை மையமாக கொண்டு இப்படம் உருவாகவிருக்கிறது.

இப்படத்திற்கு தற்போது நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் ஆரம்பமாகிறது.

சிவகார்த்திகேயன்-கீர்த்தி-அனிருத் பற்றி ஷங்கர் ருசிகர தகவல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி இணைந்து நடித்துள்ள ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் பேசியதாவது…

“ரஜினிமுருகன் படம் பார்த்தேன். ஒரு மாஸ் ஹீரோவுக்கான அனைத்தையும் அதில் செய்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அவர் நினைத்திருந்தால் இன்னும் ஐந்து, பத்து வருடங்களுக்கு அதுபோன்ற கமர்ஷியல் படங்களை செய்திருக்கலாம்.

ஆனால் ரெமோ படம் மூலம் வேறு ஒரு கட்டத்திற்கு அவரை எடுத்துக் செல்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

அதில் நடித்த கீர்த்தி சுரேஷையும் பார்த்தேன். ரொம்ப க்யூட் அவர். அழகான நடிப்பு. சினிமாவுக்கே உள்ள முகவெட்டு அவரிடம் உள்ளது. நிச்சயம் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இப்போது அனிருத்தை சந்தித்த போது, ‘என்ன சார் பிஸியா இருக்கீங்களா? எனக் கேட்டேன்.

இல்ல சார்.. படங்களை குறைச்சிட்டேன். நிறைய படங்களை கமிட் செய்துவிட்டால் ஒரு மெஷின் போல பாடல்களை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது.

என்ஜாய் பண்ண முடியல அப்படின்னு சொன்னார். நல்ல ஆரோக்கியமான முடிவு எடுத்திருக்கிறார் அனிருத். பாராட்டுக்கள்.”

இவ்வாறு ஷங்கர் பேசினார்.

ஆடி மாசம் முன்பே அஜித்தின் ‘தல-57’ ஆரம்பம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் தல-57’ படத்தை சிவா இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார் என்ற தகவல்களை பலமுறை பார்த்துவிட்டோம்.

இப்படத்தை தயாரிக்கவுள்ள சத்யஜோதி நிறுவனம் இதற்கான முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் லொக்கேசன் தேர்வு, கலைஞர்கள் தேர்வு உள்ளிட்ட இதர பணிகளுக்காக வெளியில் சென்றிருந்த படக்குழு தற்போது சென்னை திரும்பிவிட்டதாம்.

எனவே விரைவில் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.

ஆடி மாதம் தொடங்குவதற்குள் அதாவது ஜீலை 16ஆம் தேதிக்குள் இதை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.

‘ரெமோ’வை நான் தயாரிக்கல, நான் தயாரிச்சிருந்தா…’ சிவகார்த்திகேயன்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர். டி ராஜாவின் 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களது முதல் படைப்பாக ரெமோ படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா நடைப்பெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் பேசும்போது…

இப்படத்தை நான்தான் தயாரிப்பதாக நிறைய பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

ஆர் டி ராஜாவை எனக்கு மெரினா படத்தின் போதே தெரியும். அவர்தான் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

நான் முதலில் தயாரிக்க நினைத்தேன் என்பது உண்மைதான்.

ஒருவேளை நான் தயாரித்திருந்தால், ஒரு எஃப் எம் ஸ்டேஷனில் நானும் அனிருத்தும் சேர்ந்து இந்த டைட்டில் ட்ராக்கை வெளியிட்டு இருப்போம்.

நிச்சயமாக இவ்வளவு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து இருக்க மாட்டேன்.

அதுபோல் ராஜா நினைத்திருந்தால் இப்படத்தை ரூ. 10 கோடியில் தயாரித்து, 20 கோடியில் விற்பனை செய்திருக்கலாம்.

ரஜினிமுருகனுக்கு பிறகு அப்படி ஒரு வியாபாரம் கிடைத்திருக்கும்.

ஆனால் அவர் எப்போதும் இயக்குனர் ஷங்கரை போல மிகப்பிரம்மாண்டமாக செய்ய ஆசைப்படுபவர். அவரது எண்ணம்போல் எல்லாம் அமையும்.” என்றார்.

More Articles
Follows