தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜீலை 13ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதனை முன்னிட்டு தனது ரசிகர்களுடன் பேஸ்புக் பக்கத்தில் கலந்துரையாடினார் கார்த்தி.
ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் இதோ…
மீண்டும் போலீஸ் படத்தில் நடிப்பீர்களா?
நல்ல கதை அமைந்தால் மீண்டும் போலீசாக நடிப்பேன்.
சிறந்த நடிகர்?
அண்ணா சூர்யாவும், அண்ணி ஜோதிகாவும் தான் எனக்கு சிறந்த நடிகர்கள்.
நேரடி தெலுங்கு படம் எப்போது?
கதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் நடிப்பேன்.
சூர்யாவுடன் எப்போது நடிப்பீர்கள்?
நானும் அண்ணாவும் சேர்ந்து நடித்தால் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள்.
பாண்டிராஜ் கூட கதை உருவாக்குகிறேன் என சொல்லியிருக்கிறார். நல்ல கதை அமைந்தால் நிச்சயம் நடிப்போம்.
விஜய் பற்றி?
தலைக்கனம் இல்லாத நல்ல மனிதர் அவர். பருத்தி வீரன் படத்தை பார்த்து விஜய் என்னை பாராட்டியது மறக்க முடியாது.
பிடித்த நடிகர்?
நிறைய பேர் இருக்கிறார்கள். ரஜினி, கமல் சாரை பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம். அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Kadaikutty Singam Karthi talks about Rajini Kamal Vijay and Suriya