தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் ஜனகராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷின் பாட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஸ்ரீவிஜய் ஜி இயக்கிள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள காசி திரையரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை கௌதமி, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் சிநேகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது வழக்கம்போல ஜாக்குவார் தங்கம் தமிழன் தமிழன் என்று முழங்கிக் கொண்டிருந்தார்.
தமிழ் சினிமாவில் தமிழன்தான் இயக்குனராக வேண்டும். தமிழ் சினிமாவில் தமிழன்தான் நாயகனாக நடிக்க வேண்டும்… இப்படியாக தமிழன் மட்டும்தான் தமிழ் சினிமாவில் இருக்க வேண்டும் என்பது போல ஆவேசமாக பேசினார்.
இறுதியாக தமிழன் வென்றே தீருவான் என தொண்டை கிழியும் வகையில் உரக்கமாக பேசினார்.
அவருடைய தமிழ் உணர்வை நிச்சயம் பாராட்ட வேண்டும்தான். ஆனால் இப்படி தமிழன் மட்டுமே தமிழ் சினிமாவில் இருக்க வேண்டும் என்றால் இவர் எதற்காக மற்ற மொழி படங்களில் பணி புரிந்தார்.
ஜாக்குவார் தங்கம் அவர்கள் இதுவரை 1000க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்துள்ளார்.
அதில் 500 படங்கள் மட்டுமே தமிழ் படங்கள். மற்ற அனைத்தும் மற்ற மொழி படங்களே.
அப்படி என்றால் இந்த தமிழ் உணர்வு இவருக்கு இந்த 60 வயதில்தான் வந்ததா? அல்லது இனி சினிமாவில் நாம் பணி புரிய போவதில்லை என நினைத்து பேசுகிறாரா?
மொழி மதம் அனைத்தையும் கடந்ததுதான் கலை என்பார்கள். ஆனால் இவர் இப்படி மேடைக்கு மேடை பேசுவது எந்த விதத்தில் நியாயம் சாரே..?
Jaguar Thangam may act work in Many languages But he will not allow others to work in Tamil