இந்தியன் 2 விபத்து.; நாளை ஆஜராக கமலுக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த பிப். 19- ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

கமல்ஹாசன், காஜல் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகிய மூவரும் நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

இயக்குநர் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில், இப்போது, கமல்ஹாசனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சம்மனை ஏற்று, கமல் நாளை மார்ச் 3 – ம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என கூறப்படுகிறது.

Indian 2 accident issue Police to summon Actor Kamal

திருநங்கைகளுக்கு வீடு கட்டும் லாரன்ஸ்; அக்‌ஷய்குமார் 1.5 கோடி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக கொண்டர் ராகவா லாரன்ஸ்.

இவையில்லாமல் எண்ணற்ற ஆதரவற்றவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, பண வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி வசதிகள் செய்தி தருவது உள்ளிட்ட சமூகநலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.

அந்த அறக்கட்டளை தற்போது 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த நிலையில் திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் பணியை தொடங்கியிருக்கிறாராம்.

இதற்காக நடிகர் அக்‌ஷய்குமாரிடம் தனது முயற்சியை தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.

லாரன்ஸ் இயக்கிய முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா.

இதன் இந்தி ரீமேக் லக்‌ஷ்மி பாம் என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தையும் லாரன்ஸ் இயக்கி வருகிறார்.

அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

Akshay Kumar donates One and half crores for Lawrance Trust

ஸ்டாலினுக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்திலும் உள்குத்து..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் தன் பிறந்த நாளை கொண்டாடினார்.

திமுக தொண்டர்கள் பலரும் இதனை பண்டிகை போல கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அவரின் வாழ்த்தில்…

அன்பு சகோதரர் திரு. @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட “என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி நெட்டிசன்கள் பலரும் பல விதமான கமெண்ட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியன் 2 விபத்து.; நாளை ஆஜராக கமலுக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

2021 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என ஸ்டாலின் கூறிவருகிறார். ஒருவேளை அவர் சொல்வது போல வந்துவிட்டால் தன் ஆட்சியிலேயே அநீதி இருக்கிறது என அவர் சொல்ல போவதில்லை.

இப்போது கமல் சொல்வதை பார்த்தால்… அப்படியானால் ஆட்சியில் வேறு ஒருவர் இருப்பார். நீங்கள் அப்போதும் அநீதிக்கு எதிராக மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருங்கள் என்கிறாரா? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

மேலும் கமலும் தானே ஆட்சி அமைக்க போராடி வருகிறார். ஒரு வேளை இவர் ஆட்சி அமைத்தால் அதில் அநீதி நடக்குமா? அல்லது இவர் ஆட்சிக்கு வரமாட்டார் என்பதை முன்பே கணித்துவிட்டாரா? எனவும் குழம்பியுள்ளனர்.

ஆக… கமல் வழக்கம்போல அனைவரையும் குழப்பியுள்ளார் என்றே தெரிகிறது. உலகநாயகனுக்கே உண்மை தெரியும். ஆகட்டும் ஆண்டவரே…

Kamal Birthday wishes to MK Stalin with twist tweet

BREAKING என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயார்.. – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று காலை இஸ்லாமிய மதகுருமார்களை நடிகர் ரஜினிகாந்த சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ரஜினி தன் ட்விட்டரில் இன்று இரவு 10.47 மணிக்கு பதிவிட்டுள்ளதாவ…

இன்று மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் தரப்பு ஆலோசனை கேட்டு அறிந்தேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் – ரஜினிகாந்த்

எப்போதும் அன்பும் ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்.

என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

 

Rajinis reaction Meeting with Muslim Clerics about CAA

 

Official ஞானவேல் ராஜாவுக்காக ‘அருவா’ எடுக்கும் சூர்யா & ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று அவரின் 38வது படமாகும்.

இதனையடுத்து ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது. அதை சிவா இயக்குவார் எனவும் படக்குழு அறிவித்தது.

ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்தை சிவா இயக்க சென்றுவிட்டதால் சூர்யா மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் 39-வது படத்தை ஹரி இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது ஸ்டுடியோ கிரீன்.

இப்படத்திற்கு ‘அருவா’ என டைட்டில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பொதுவாகவே ஹரி படங்களில் சுமோ மற்றும் அருவா இல்லாமல் இருக்காது. இப்போது டைட்டிலேயே அருவா உள்ளது. எனவே அதன் வீச்சு பலமாக இருக்கும் என நம்பலாம்.

இது நடிகர் சூர்யா, இயக்குநர் ஹரி இணையும் 6-வது படம்.

இயக்குநர் ஹரியின் 16-வது படம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Actor Suriya teams up with director Hari for Aruvaa

2K1 KIDS எதிர்காலம்?; மாண்புமிகு ஆத்விக்கு போஸ்டர்; அஜித் கண்டிப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு அனோஷ்கா (பிறந்த வருடம் 2008) ஆத்விக் (பிறந்த வருடம் 2015) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதில் ஆத்விக்கின் பிறந்த நாள் மார்ச் 2 நாளை கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி அஜித்தின் ரசிகர்கள் இணையத்தளங்களில் டிரெண்டிங் செய்ய தொடங்கியுள்ளனர்.

மேலும் தமிழகத்தின் சில இடங்களில் விழா ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.

Aadvik Ajith latest photos

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த போஸ்டரில் 2.1K Kids in எதிர்காலமே..! மாண்புமிகு திரு. ஆத்விக் அஜித்குமார்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடித்துள்ளனர்.

இந்த வாசகத்தின் பின்னால் தமிழக சட்டசபை மற்றும் பாராளுமன்ற படங்களும் இடம் பெற்றுள்ளது.

ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடலாம். அவரின் குடும்பத்தாரின் பிறந்தநாளை கூட கொண்டாடலாம் தவறில்லை.

ஆனால் 5 வயதே ஆகும் ஒரு சின்ன குழந்தையை மாண்புமிகு என்பதும் எத்தகைய தவறான செயலாகும்.

மாண்புமிகு என்ற சொல் அரசு பதவிகளில் அமர்ந்திருக்கும் நபர்களுக்கு பயன்படுத்தப்படும் சொல்லாகும். அதை ஒரு குழந்தைக்கு பயன்படுத்துவதால் அதுபோன்ற செயல்களில் பலரும் நாளை ஈடுபடக்கூடும்.

மேலும் மதுரை ரசிகர்களை தொடர்ந்து அவர்களுக்கு போட்டியாக மற்றொரு பிரிவினர் இந்தியாவின் முதல் குடிமகனே… பாராளுமன்றத்தின் பலமே… என்ற சொற்களை பயன்படுத்த கூடும்.

தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் அஜித். ஆனால் அவரின் ரசிகர்களின் செயல்களால் அவருக்கும் அவப்பெயர் வர வாய்ப்புண்டு.

அஜித் ஜோடியாக காலா நாயகி; வில்லனாக தெலுங்கு நடிகர்!

இதற்கு முன்பே தினம் தினம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மிகவும் கீழ்த்தரமான வாக்கியங்களை பயன்படுத்தி டிரெண்ட் வருகின்றனர்.

இதை அஜித்தோ விஜய்யோ கண்டிப்பதில்லை. இவர்கள் மௌனமாக இருப்பதால் இது தினம் தொடர்கிறது.

அஜித் போஸ்டர் வந்தால் விஜய் ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். அதுபோல் விஜய்க்கும் நடக்கிறது.

அண்மையில் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போதும் அஜித் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்தனர். அதற்கு எதிராக இவர்களும் டிரெண்ட் செய்தனர்.

தல தளபதி இருவரும் வாய் திறந்தால் அல்லது அறிக்கை விட்டால் தான் இதற்கு முடிவு உண்டாகும். அப்போது தான் ரசிகர்கள் நிச்சயம் அமைதி காப்பார்கள்.

தான் சம்பந்தப்பட்ட பட விழாவுக்கே வராத அஜித் இதை கண்டிப்பாரா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் அமைதியாக இருப்பதால் ஒருவேளை அவர்கள் இதுபோன்ற செயல்களை ஆதரிக்கிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது.

நாளை சமுதாயம் ஒரு தவறான பாதைக்கு சென்ற விடக்கூடாது என்ற ஆதங்கமே இந்த பதிவு.

Ajith son Aadvik birth day poster made controversy

 

More Articles
Follows