பெரும்பாலானோரால் எதிர்பாக்கப்பட்ட ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் நட்பே துணை படத்தின் ட்ரைலர் நாளை (பிப்.28) வெளியாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியானத்திலிருந்தே அனைவரின் கவனத்தையும் பெருமளவில் ஈர்த்தது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி இசை உலகிலும், இணையதளங்களிலும் மக்களைத் தன் வசப்படுத்தியது. இப்போது ட்ரைலரும் மகிழ்விக்க வருகிறது. இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் காதலியாக அனகா நடிக்கிறார். இப்படம் அடிப்படையாகக் கொண்டு உருவானாலும் குடும்பம், நட்பு, காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருக்கிறது.
விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ புகழ் விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், புட் சட்னி (Put Chutney) புகழ் ராஜ்மோகன், பிஜிலி ரமேஷ் மற்றும் அஸ்வின் ஜெரோமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் – ஒளிப்பதிவு – டிமாண்டி காலனி மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் புகழ் அரவிந்த் சிங், படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை – பொன்ராஜ், நடனம் – சந்தோஷ் மற்றும் சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ், தயாரிப்பு – சுந்தர்.சி -ன் அவ்னி மூவிஸ்.
தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகிறதா தளபதி 63.?; விஜய் ரசிகர்கள் குழப்பம்
வருகிற மார்ச் 1ம் தேதி கிட்டதட்ட 7 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளன.
அவை பற்றிய சிறு தகவல்கள்…
சேரன் இயக்கி நடித்துள்ள திருமணம், அருண்விஜய் நடித்துள்ள தடம், சிம்பு இசையில் ஓவியா நடித்துள்ள 90 எம்எல், சாருஹாசன் நடித்துள்ள தாதா 87 உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகவுள்ளது.
பொன்விலங்கு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித்.
அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் இவர்.
சில மாதங்களுக்கு முன்னர் பா.ம.க., கட்சியில் இணையவே அவருக்கு அந்த கட்சியின் மாநில கட்சியின் துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சற்றுமுன் பா.ம., கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஞ்சித்.
அவர் கூறுகையில்…
பாமக மாநில துணை தலைவர் பதவியில் இருந்தும், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்.
அதிமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கூறிவிட்டு, இப்படி கூட்டணி வைக்கலாமா.? மதுவுக்கு எதிராக போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல.
கூட்டணி தொடர்பாக பாமக தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.
கூட்டணிக்காக 10 அம்ச கோரிக்கை என பா.ம.க., வைத்திருப்பது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை.
நாலு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. பாமக ஏமாற்றிவிட்டது. இக்கட்சியில் இணைந்ததற்கு வேதனைப்படுகிறேன்.” என கூறினார் ரஞ்சித்.
Actor Ranjith quits from PMK and slams ADMK alliance for election
பாக். தீவிரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்; ரஜினி-கமல் பாராட்டு
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இந்தியாவின் கருப்பு நாள் எனலாம். அன்றைய தினம் 44 ராணுவ வீரர்களை கொன்று குவித்தான் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஒரு தீவிரவாதி.
இந்த புல்வாமா தாக்குதலை அடுத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது. 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், 350 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டுள்ளது.
விமானப்படைக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், “புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 41 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமான மசூத் அஸார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு தூதரக ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஐநா அமைப்பால் தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு ஏற்கனவே இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 3 பகுதிகளில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இயக்கத்தின் தீவிரவாதிகள், பயிற்றுனர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப்படையினர் அழிக்கப்பட்டுள்ளனர். மசூத் அஸாரின் உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியா வலியுறுத்தியும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மற்றொரு தீவிரவாத தாக்குதலை தடுக்கவே, விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை அதிரடியாக கொடுத்த பதிலடியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இந்திய விமானப்படையை பாராட்டியுள்ளனர்.
பின் குறிப்பு : புல்வாமாவில் தாக்குதல் நடத்திய உடனேயே பதிலடி இருக்கும் என்று ஜெய் ஷே முகமது எதிர்பார்ததது. அதனால் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் இருந்த முகாம்களை 100 கிலோ மீட்டர் உள்ளே, அதாவது பாகிஸ்தான் எல்லைக்குள் மாற்றியது.
அது பத்திரமான மலைப்பகுதி.எவ்வளவு பத்திரமானது என்றால் அமெரிக்காவிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு ஒசாமா பின் லேடன் ஒளிந்திருந்த இடம் அது. அது 5 நட்சத்திர ஓட்டலின் வசதிகளோடு கூடிய இடம்.
தீவிரவாதிகள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பாகிஸ்தானில் இருக்கிறது. இந்தியா எல்லை தாண்டி வந்து தாக்காது என்று நினைத்தது. ஏனென்றால் 1971க்குப் பிறகு, 48வருடங்களாக இந்தியா எல்லை தாண்டி சென்று தாக்கியதில்லை
Rajini and Kamal lauds Surgical Strike 2 on Pakistan