“எரும சாணி” புகழ் விஜய்யுடன் இணைந்த நடிகர் அருள்நிதி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன்மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் மீட்சியாக இணைய உலகில் “எரும சாணி” மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் MNM Films சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது….

இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக்கதையை கூறியபோதே அதில் பல உற்சாகமிகு தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது. இந்தப்படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள் முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான பரிட்சார்த்த முயற்சிகளுக்கு செவி சாய்ப்பவர் அவர். “ஆறாது சினம், டிமாண்டி காலனி,இரவுக்கு ஆயிரம் கண்கள், K13” , தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் உருவாகி வெளிவர உள்ள பெயரிடப்படாத புதிய படம் என ஐந்து படங்கள் அவருடன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்ததில் அவரது கதைத்தேர்வு, திரைத்துறையில் தெளிந்த பார்வை மீது பெரும் மரியாதை உண்டானது. எனவே அவர் தான் இப்படத்திற்கு சரியானவர் என அவரை அணுகினோம். அவரும் விஜய் கூறிய திரைக்கதையில் உற்சாகமாகி உடனடியாக ஒப்புக்கொண்டார். இணைய உலகில் “எரும சாணி” மூலம் புகழ் பெற்ற விஜய் ராஜேந்திரன் சினிமாவில் அறிமுகமாகி நடிகர்கள் இயக்குநர்களின் முதல்தர தேர்வாக, காமிக்கல் காமெடி செல்லமாக மாறியிருக்கிறார். அவர் பெரிய திரையில் இயக்குநராக தனது பயணத்தை எனது தயாரிப்பில் தொடங்குவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.

விஜய் குமார் ராஜேந்திரன் பெரிய திரையில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் வெற்றி பெற்ற “நட்பே துணை” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் அருள்நிதி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் R B சௌத்திரி தயாரிப்பில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களின் 5ஸ்டார் நிறுவனத்தில் புதுமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் நடித்துள்ள பெயரிடப்படாத புதிய படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது அருள்நிதி, விஜய் குமார் ராஜேந்திரன் இணையும் இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

பாலிவுட் பறக்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

ஏர்டெக்கான் நிறுவனர் கோபி நாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

சூர்யாவுடன் அபர்ணா முரளி, ஊர்வசி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏப்ரல் 9-ந்தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட உள்ளனர்.

தெலுங்கில் ஆகாசம் நீ ஹதுரா என்ற பெயரில் வெளியிடுகின்றனர்.

இதே வேளையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் குனீத் மோங்கா இதற்கான வேலையை துவங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Suriyas Soorarai Pottru hindi remake updates

‘வலிமை’ படத்தில் அஜித்துடன் இணைந்த புது மாப்பிள்ளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கும் வலிமை படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் அஜித்.

போனிகபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

அஜித்துடன் நடிப்பது யார்? யார்? என்பதை இதுவரை படக்குவினர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், அண்மையில் திருமணம் செய்துக் கொண்டு யோகிபாபு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஏற்கெனவே அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

Yogi Babu to work with Ajith again in Valimai

விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் சசிகலா கேரக்டரில் இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அவரின் வாழ்க்கையை திரைப்படமாக்க எடுக்க பலரும் முயன்று வருகின்றனர்.

கௌதம் மேனன் அவர்கள் குயின் என்ற பெயரில் வெப் சீரிஸ் ஆக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் விஜய் ’தலைவி’ என்ற பெயரில் எடுத்து வருகிறார்.

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இதில் கங்கனாவின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது

இந்த நிலையில் ஜெயாவின் நெருங்கிய தோழி கேரக்டரில் பூர்ணா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எம்ஜிஆரின் மனைவி ஜானகி வேடத்தில் மதுபாலா நடிக்கிறாராம்.

Vijays Thalaivi Ropes in Poorna to Play Sasikala role

மாஸ்டருக்கு அனுமதி மறுப்பு; கோவப்பட்டு கோவை செல்லும் விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்து வரும் படம் ‘மாஸ்டர்’.

இந்த படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி,
சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ், கவுரி கிஷான், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

அண்மையில் விஜய் பாடிய குட்டி கதை பாடல் வெளியான நலையில் விரைவில் இசை வெளியீட்டு விழாவை நடத்தவுள்ளனர்.

சமீபகாலமாக இசை விழாக்களில் விஜய்யின் பேச்சுக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. அதே சமயத்தில் அது அரசியல் உலகில் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் சென்னையில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே கோவையில் நடத்த ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்துவதுபோல் சாந்தனுவும், “மாஸ்டர் குழுவினருடன் விரைவில் கோவைக்கு வருவோம். ரெடியா இருங்கள்” என்று கூறியுள்ளார்.

விஜய்யின் மெர்சல், சர்கார், பிகில் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில்தான் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays Master audio launch venue updates

‘கன்னி மாடம்’ டிக்கெட்டுடன் நாலு வரி பேச்சு போதும்; தங்கம் உங்களுக்குத்தான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட்.

இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவித்து இருக்கிறார் பட தயாரிப்பாளர் ஹசீர்.

கன்னிமாடம் படம் பார்க்கிறவர்களுக்கு தங்கம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஆணவ கொலைகளுக்கு எதிராகவும், சாதி வெறிக்கு எதிராகவும் காட்சிகள், வசனங்கள் மூலமாக இயக்குனர் போஸ் வெங்கட் சாட்டையை வீசியிருப்பார்.

இந்த படம் பார்க்கிற பெண்களை மகிழ்ச்சி படுதும் விதமாக இந்த தங்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னிமாடம் படம் பார்க்கும் பெண்கள் தாங்கள் படம் பார்த்த டிக்கெட்டுடன், படம் குறித்து அவர்களின் கருத்தை சில நிமிட வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யவேண்டும்.

அதில் தேர்வாகும் சிறந்த கருத்துக்கு முதல் பரிசாக அரை சவரன் தங்கம் பரிசாக வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் தங்கம் வழங்கப்படும் என தயாரிப்பாளர் ஹசீர் அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.

படம் பார்த்தால் தங்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Watch Kanni Maadam movie and win gold gift from Producer

More Articles
Follows