‘கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்…’ ஜிப்ரான் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வெளிவரவுள்ள படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’.

இப்படத்தின் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு பாடலையும் ஒவ்பொரு நாட்டில் வெளியிட உள்ளனர்.

அதாவது சென்னையில் ஆரம்பித்து பூட்டான், மியான்மார், தாய்லாந்து, மலேசியா வழியாக சிங்கப்பூர் செல்கின்றனர் இப்படக்குழுவினர்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை சூர்யா கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இவ்விழாவில் இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான், கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன், எம்சி ஜீஸ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷபீர் ஆகியோர் பங்குபெற்றனர்.

இதுகுறித்து ஜிப்ரான் கூறுகையில்….

ஆறு நாடுகளை கடந்து செல்லவிருக்கிறோம். இது ரிஸ்க்கான பயணம் என்பதை அறிந்தாலும் ஒரு புது முயற்சியாக செய்கிறோம்.

எங்கள் பயணம் இனிமையாக அமைய எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் நீங்கள் கடவுளை வேண்டுங்கள்” என கேட்டுக்கொண்டார்.

நீயா நானா நிகழ்ச்சியில் தன் வெற்றி, தோல்வியை சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நீயா நானா சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ரஜினி சினிமாவுக்கு வந்து 41 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, அவரின் வெற்றி, தோல்வி அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறாராம்.

விரைவில்… சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து ரெமோ படத்தில் இடம்பெற்ற செஞ்சிட்டாளே பாடல் பெரும் ஹிட்டடித்துள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், இதில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான சிரிக்காதே என்ற பாடலை விரைவில் வெளியிட இருக்கிறார்களாம்.

படத்தின் மற்ற பாடல்களை இம்மாத இறுதியில் வெளியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சங்க கட்டிடத்தில் திருமண நாள் குறித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு சினிமா நட்சத்திரம் என்றாலும் தங்கள் காதலை முதலில் ஓப்பனாக சொல்வதில்லை.

அதுவாக மீடியா வழியாக வந்து, அதிகளவில் பேசப்பட்ட பின்னரே ஆமாம். நாங்கள் காதலிக்கிறோம் என்று தெரிவிப்பார்கள்.

அந்த வரிசையில் இப்போது விஷாலும் இணைந்துவிட்டார்.

வரலெட்சுமியும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறிவந்த நிலையில், தற்போது வரலட்சுமியுடன் திருமணம் என தெரிவித்துள்ளார்.

“வரு என் பள்ளித் தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி 14, பொங்கல் சமயத்தில் நடக்கும்.

கார்த்தியிடம் சொல்லி, திருமண நாளும் குறிச்சாச்சு” என்று அறிவித்திருக்கிறார்.

ஆமா இதுக்கு சரத்குமார் ரியாக்‌ஷன்..?

அஜித் இருக்குமிடத்தில் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஆகியோர் நடிக்கும் கத்தி சண்டை படம் தீபாவளி ரிலீஸ் என அறிவித்துவிட்டனர்.

எனவே மீதமுள்ள காட்சிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 18ஆம் தேதி ஜார்ஜியா நாட்டிற்கு செல்லவிருக்கின்றனர்.

இங்குதான் பல்கேரியா நாட்டில் படத்தை முடித்துவிட்டு அஜித்தின் தல 57 படக்குவினர் வரவுள்ளனர்.

இங்கு படகாட்சிகளை படமாக்கிவிட்டு கத்தி குழுவினர் தமிழகம் திரும்ப உள்ளனர்.

இதனையடுத்து ப்ளாஷ்பேக் காட்சிகளை மதுரையில் படமாக்கிவிட்டு மொத்த படத்தையும் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

‘ரஜினி அந்த படத்தை பார்க்க வேண்டும்…’ அக்சய்குமார் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியை ட்விட்டரில் லட்சக்கணக்கான பேர் பின்தொடர்கிறார்கள்.

ஆனால் இதுவரை அவர் 29 ட்வீட்டுகளே பதிவிட்டு இருந்தார்.

தன்னுடைய 30வது ட்வீட்டாக பஞ்சு அருணாச்சலத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

இவருடைய 31வது ட்வீட்டாக ஷங்கரின் 2..0 படத்தில் நடித்து வரும் அக்சய்குமாருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அக்சய் நடித்து வெளியாகவுள்ள ரஸ்டம் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த அக்சய்குமார், நன்றி கூறிவிட்டு அப்படத்தை பார்க்க ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More Articles
Follows