தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருனாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள படம் ‘எனிமி’.
இந்த படம் நவம்பர் 4ல் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்தனர்.
ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வர இருப்பதால், எனிமி படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் சிலர் தடுக்கிறார்கள் என அப்பட தயாரிப்பாளர் வினோத் குமார் வேதனையுடன் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில்…
“எனிமி படத்தை தயாரித்துள்ள வினோத் நான். எங்க படத்தை நவ.,4ல் ரிலீஸ் செய்ய உள்ளோம்.
ஆனால் பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெரிய படம் (அண்ணாத்த) வர இருப்பதால் அனைவருமே அந்தப் படத்தைத்தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தகவல்.
‘‘இறங்கி விடலாம்தான். ஆனால்..; ‘அண்ணாத்த’ உடன் மோதலில் இருந்து விலகியது ‘மாநாடு’’
அது உண்மையாக இருந்தால் என் சங்கத்திடம் நான் ஆதரவு கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 900 தியேட்டர்களிலும் ஒரே படத்தையே (அண்ணாத்த) திரையிட்டால் எப்படி?.
அப்படியே எல்லா தியேட்டர்களிலும் ஒரு படத்தை வெளியிட்டாலும் எதிர்பார்க்கும் வசூல் வர வாய்ப்பில்லை.
என் படம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கேட்பது வெறும் 250 தியேட்டர்கள் தான். அது கிடைத்தாலே போதும்.
நல்ல விலைக்கு ஓடிடி நிறுவனங்கள் ஆபர் தந்தும் நாங்கள் தான் தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை.
எனவே தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்டவைகள் ரிலீஸில் எந்தவொரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
‘எனிமி’ படம் தீபாவளிக்கு வெளிவராமல் போனால் நீதி கிடைக்க என்ன போராட்டம் வேண்டுமானாலும் செய்ய தயார்.
இவ்வாறு வினோத் அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.
(ஆனால் இது உண்மையா? என தெரியவில்லை என்றே தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.)
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தை தயாரித்துள்ள நிறுவனம் சன் பிக்சர்ஸ்.
இந்த நிறுவனம் திமுக அரசுக்கு உறவினர் முறை.
மேலும் ‘அண்ணாத்த’ படத்தை முதல்வரின் மகனும், நடிகருமான உதயநிதி MLAவின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது படத்திற்கு போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால்தான் சிம்புவின் ‘மாநாடு’ ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Enemy producer requests TFPC to help him get 250 screens!