மாரி2 படத்தில் தனுஷின் ஹீரோயின் பற்றிய தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய்யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்த மாரி படம் சூப்பர் ஹிட்டானது.

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க உள்ளனர்.

முதல் பாகத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய்யேசுதாஸ் வில்லனாக நடித்திருந்தார்.

இரண்டாம் பாகத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தமாஸ் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் நாயகி யார்? என்பதை அறிவிக்க இருக்கிறார்களாம்.

இதன் சூட்டிங்கை தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்தனியாக எடுக்க இருக்கிறார்களாம்.

மேலும் படத்தின் மியூசிக் டைரக்டர் யார்? என்பதையும் இதுபோல் அறிவிப்பார்கள் என நம்பலாம்.

அநேகமாக தனுஷின் ஆஸ்தான ஷான் ரோல்டான் இசையமைப்பார் என எதிர்பார்க்கலாம்.

விரைவில் மாரி2 படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

Dhanush will announce his Maari2 heroine 6pm Today

விஜய்சேதுபதியின் ஜுங்கா; இப்பவே சேல்ஸ் ஆகிடுச்சி நல்லா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருடத்திற்கு அரை டஜன் படங்களை நடித்து கொடுப்பது மட்டுமில்லாமல், அவற்றை தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக கொடுத்து வருபவர் விஜய்சேதுபதி.

எனவே இவரது மார்கெட் வேல்யூம் படத்துக்கு படம் அதிகரித்து வருகிறது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா’ படத்தினை படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இதுகுறித்து படக்குழுவினர் கூறியதாவது…

‘விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தற்போதே இதன் வியாபாரம் முடிவடைந்துவிட்டது.

ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றுள்ளனர்.

இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் ’ என்றனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல்.

இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியின் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மற்றும் கார்த்தியின் காஷ்மோரா படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Arun Pandiyans AandP group bought theatrical rights of Vijay Sethupathi movie Junga

தசாவதாரம் பாணியில் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தை எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார்.

இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி.

தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமாய் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாலா.

பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையை இன்னும் பலப்படுத்துகிறது.

இறுதியில் கார்த்திகேயன் தனது காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது அத்தனை சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஆயுதபூஜை ஸ்பெஷலாக வரும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் வெற்றிப் வெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் உருவாக்கி வருகிறார் அதே இயக்குனர் சித்திக்.

இதில் அரவிந்த் சாமி, அமலா பால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்க முக்கிய வேடத்தில் மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர்.

மற்றொரு முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் நடித்துள்ளார்.

அம்ரிஷ் இசையமைக்க, விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இதன் டீசரை ஆயுதபூஜை விருந்தாக செப்டம்பர் 29ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு மொழி பேசப்போகும் குரங்கு பொம்மை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் நித்திலன் இயக்கிய குரங்கு பொம்மை மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதில் வித்தார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், குமரவேல், பிஎல்.தேனப்பன் கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்க,
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.

இதன் தெலுங்கு உரிமையை எஸ் போக்கஸ் நிறுவனம் சார்பில் சரவணன் கைப்பற்றியிருக்கிறார்.

இதுகுறித்து சரவணன் கூறியதாவது…

”திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம்.

இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. ‘குரங்கு பொம்மை’ படம் ஒரு அற்புத படைப்பு.

நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு ரசிகர்களும் இப்படத்திற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

வித்தியாசமான படங்களில் விஜய் நடிக்க கமல் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனியர் நடிகரான கமல் மற்ற நடிகர்களை பாராட்டுவதிலும் அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டுவதிலும் தவறுவதில்லை.

இந்நிலையில் கமல் ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியின் போது விஜய்யின் படங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அவர் கூறியதாவது…

ரஜினி சார், விஜய் சார் படங்கள் பார்ப்பேன். ரஜினியின் முள்ளும் மலரும் படம் எனக்கு பிடிக்கும். அவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

விஜய் படங்களையும் நிறைய பார்த்து இருக்கிறேன். அவர் தற்போது வெற்றிப் பெற்ற நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

அவரும் வித்தியாசமான படங்கள் செய்ய வேண்டும். இந்தியில் பல வெற்றி பெற்ற நடிகர்கள் நல்ல தரமான படங்களை செய்கின்றனர்.

நான் சகலகலா வல்லவன் படத்தை செய்தேன். அது கமர்சியல் படம்தான் நல்ல பெயர் கிடைத்தது.

அதுபோல் மூன்றாம் பிறை படத்தில் நடித்தேன். அதுவும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.” என்றார் உலகநாயகன்.

More Articles
Follows