மாரி2 பட ‘ரௌடி பேபி’ பாடல் ரிலீஸ்; யுவன்-அனிருத் ரசிகர்கள் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து நடித்துள்ள மாரி படத்தின் 2ஆம் பாகம் தற்போது தயாராகவுள்ளது.

இந்த இரண்டு படங்களையும் பாலாஜி மோகனே இயக்கியுள்ளார். ஆனால் முதல் பாகத்திற்கு அனிருத் இசையமைக்க, 2ஆம் பாகத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

மாரி படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டு அடித்திருந்தது.

இந்நிலையில் ‘மாரி 2’ படத்தின் ‘ரௌடி பேபி’ நேற்று வெளியானது.

ஆனால் இந்த பாடல் ‘டானு… டானு’ பாடல் அளவுக்கு இல்லை என அனிருத் ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டனர்.

இதற்கு யுவன் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து ‘ரௌடி பேபி’ பாட்டு சூப்பராக இருக்கிறது என பதிலடி கொடுத்தனர்.

இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் உருவானது.

விஸ்வாசம் அப்டேட்ஸ்..: மதுரை ஸ்லாங்கும் அஜித் பாடி லாங்குவேஜும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வருகிற 2019ல் பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளனர்.

இப்படத்தில் அஜித்தின் கேரக்டர் மற்றும் படக் கதை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் தான் கதை நடக்கிறதாம்.

இதில் தூக்கு துரை என்ற கிராமத்து இளைஞனாக அஜித் நடித்துள்ளார். மேலும் முதன் முறையாக மதுரை ஸ்லாங்கும் பேசி அதற்காக தன் பாடி லாங்குவேஜ்ஜையும் மாற்றியிருக்கிறாராம்.

நாம் ஒருவருக்கொருவர் அன்பாய் இருப்பதை விட விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்பதுதான் படத்தின் ஒன் லைன் கதையாம்.

காலா படத்திற்கு வசனம் எழுதிய மணிகண்டன், இரும்புத்திரை படத்திற்கு வசனம் எழுதிய பாக்யராஜ், சபரி உள்ளிட்டோர் விஸ்வாசம் படத்திற்கு வசனம் எழுதி உள்ளனர்.

அஜித்தின் ஜோடியாக நிரஞ்சனா என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார்.

அஜித்தின் தாய் மாமனாக தம்பி ராமைய்யா நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கேரக்டரில் விவேக் மற்றும் யோகி பாபுவும் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை என கூறப்படுகிறது. படத்தில் 5 பாடல்கள் உள்ளதாம். விவேகா, அருண்பாரதி, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர்.

ரஜினியின் 2.0 படத்திலேயே 3.0 படத்தை காட்டிய ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவான 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இதில் வசீகரன், சிட்டி ரோபோ, 2.0 ரோபோ உள்ளிட்ட 3 கேரக்டர்களில் ரஜினி நடித்திருந்தார் என்பது பலருக்கு தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் 4வது ஒரு கேரக்டர் உள்ளது என ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தார் ஷங்கர்.

இந்நிலையில் ‘ரோபோ சிட்டி கம்ப்ரெஸ்டு வெர்ஷன் 3.0’ என்ற கேரக்டரும் தற்போது தெரிய வந்துள்ளது.

ரஜினி ஓகே சொன்னால் 3.0 படத்தை இயக்குவேன் என ஷங்கர் சொல்லியிருந்தார்.

தற்போது 3.0 கேரக்டர் இதில் தெரிய வந்துள்ளதால் அதன் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் 3.0 படத்திற்கு ரஜினி ஓகே சொல்வாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

விஜய் படத்தலைப்புடன் 2.0 படத்தை முடித்த டைரக்டர் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் பல கேரக்டர்களில் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தை முழுக்க முழுக்க 3டியில் படமாக்கியிருந்தார் ஷங்கர்.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு எந்த அளவிலும் சளைத்ததில்லை என தன் திறமையை காட்டியுள்ளார் ஷங்கர்.

படத்தின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படம் முடியும் தருவாயில் ஷங்கர் பெயர் இடம் பெறும். அதனை அடுத்து இந்திரலோகத்து சுந்தரியே என்ற பாடல் காட்சி இருக்கும்.

அப்போது சிட்டி ரஜினி, நிலா எமி இருவருக்கும் டூயட் பாடல் இருக்கும்.

அதற்கு ஒரு சில நொடிகளுக்கு முன்பு காதலுக்கு மரியாதை? என எமி கேட்பது ஒரு டயலாக் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் 2.0 படம் பார்க்க விடுமுறையும் டிக்கெட்டும் கொடுத்த கம்பெனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், ஷங்கர், ஏஆர். ரஹ்மான் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

பிரபல லைகா நிறுவனம் இப்படத்தை ரூ. 543 கோடியில் உருவாக்கியுள்ளது.

இதை முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கியுள்ளார் ஷங்கர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கோவையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்று தன் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

கூடவே படத்தை கண்டுகளிக்க டிக்கெட் கட்டணத்தையும் தாங்களே செலவு செய்வதாக அறிவித்துள்ளது.

2.0 படம் உலக சாதனைகள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெறவேண்டும் எனவும், ரஜினிகாந்த், ஷங்கர், அக்‌ஷய் குமார் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்நிறுவனம் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நாளை முழு தினமும் 2.0 கொண்டாட்டம் தான் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Coimbatore Pvt Company declared leave for 2pointO release

தயாரிப்பாளருக்கு ராயல்டி இல்லையா? இளையராஜாவிடம் கே.ராஜன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையால் தமிழ் சினிமாவை நிரப்பிக்கொண்டிருக்கும் இசைஞானி அவர்களுக்கும்… மற்ற இசைக்கலைஞர்களுக்கும். வணக்கம்!

தமிழ் சினிமாவின் நலிந்த, போட்ட பணத்தை திரும்ப மீட்டெடுக்க முடியாது தினம் தினம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சார்பாக இந்தக் கடிதம்.

உங்கள் மீதும்… தங்களின் இசையின் மீதும் மிகப்பெரும் பற்று கொண்டவன். பல நேர உணவாகவும்.. இறந்து போகாமல் காத்து வைத்திருக்கும் மருந்தாகவும் தங்களின் இசையை மதிக்கிறோம்.

ஆதலின் இனி நான் வைக்கப் போகும் கோரிக்கைகளினால் உம் இசையின் அருமை தெரியாதவன் என்றோ … மரியாதை அற்றவனென்றோ எண்ணிவிட வேண்டாம்.

இது உரிமைப் பிரச்சனை. அப்பன் பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்லுவாங்களேஅந்த மாதிரி ஒரு சொத்துத் தகராறுன்னு வச்சுக்கங்களேன்..

ஒரு படத்தின் இசை உரிமை (ராயல்டி) என்பது யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.

ஒரு உயிர் உருவாக தந்தையும் தாயும் காரணம் போல் இங்கு ஒரு சினிமாவின் பாடல் உருவாக இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் காரணம் இல்லையா?

இசையமைப்பாளர் தாயாக இருந்தால் அந்த பாடல் உருவாக பணம் தந்து உருவாக்கியவர் தந்தையல்லவா??

அதெப்படி ஒரு பாடலின் ராயல்டி என்பது இசையமைப்பாளரை மட்டும் சென்றடைகிறது?

தயாரிப்பாளருக்கும் கிடைத்திருக்க வேண்டுமே?

இத்தனை நாள் எங்கே போனீர்கள்?? நான் வழக்கு தொடுத்து போராடிப் பெற்ற பின் பங்கு பிரிக்க வந்து நிற்கிறீர்களா? என்ற கேள்வி உங்கள் பக்கமிருந்து வீசப்படக்கூடும்.

ஆம். உண்மைதான். இந்த அப்பாவித் தயாரிப்பாளர்களுக்கு வெறுமனே பணம் போட மட்டும் தெரிகிறது.

எங்கெங்கு என்னென்ன ரைட்ஸ் இருக்கு? அதன் விலை என்ன? எப்படி அதை காசாக்குவது எனத் தெரியாமல் எல்லாவற்றையும் போட்டுவிட்டு தோற்றால் வெறுங்கையோடு ஊருக்குத் திரும்ப மட்டுமே தெரிந்திருக்கிறது…

ஆனால் இசைஞானி நீங்கள் உங்கள் உரிமையைப் போராடி பெற்றுள்ளீர்கள். மற்றவர்கள் போல் காசாசையினால் இதைச் செய்தீர்கள் என்று சொல்ல நான் முட்டாள் அல்ல.

இது உரிமை. நம் உழைப்பை எவனோ சுரண்டி காசாக்கும் ஊழலுக்கான முடிவு. ஆனால் இதில் தயாரிப்பாளர்களுக்கும் உரிமை உள்ளதே.

அந்தக் தொகையை யாரிடம் எப்படி பெறுவது?

இசையமைப்பாளர் ராயல்டி பெற்று தயாரிப்பாளருக்குத் தரவேண்டுமா?? அல்லது தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக ராயல்டி பெறும் வசதி இருக்கிறதா?? இல்லை… இசையமைப்பாளர்களுக்கு மட்டும்தானா??

எப்படி இந்த ராயல்டி முறை வகுக்கப்பட்டுள்ளது?? ஏன் இது தயாரிப்பாளர்களுக்கு வருவதில்லை? என்ற கேள்விகளை கேட்க வேண்டும்… யாரிடம் கேட்பது எனத் தெரியாததால் உங்களிடம் கேட்கிறேன்…

எங்களுக்கும் சேர வேண்டிய ராயல்டியை நீங்கள் தனியாகப் பெற்றிருப்பதால் உங்களிடம் கேட்கிறேன்…

ஒரு பாடல்.. பின்னணி இசை இப்படி எல்லாம் உருவாகக் காரணமான பணத்தை முழுமையாக நாங்கள் செலுத்துகிறோம்.

உணவு.. போக்குவரத்து செலவு… பாடகர்கள்… தங்கும் செலவு.. இசையமைக்க ஆகும் செலவு… தண்ணீர் பாட்டில் முதற்கொண்டு தயாரிப்பாளர்கள் நாங்கள் செலவு செய்கிறோமே… எங்களுக்கு ஏன் அந்த ராயல்டி உரிமை இல்லை??

இசை உங்கள் சிந்தனையால் நெய்யப்பட்ட ஒன்று என்றாலும்… அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் எல்லா தளத்தையும் நாங்கள்தானே உருவாக்கித் தந்தோம்?? பின் எப்படி எங்களுக்கு இதில் உரிமையில்லை…?

நீங்கள் தனிப்பட்ட முறையில் செய்துகொள்ளும் ஆல்பங்களுக்கு… பக்திப் பாடல்களுக்கு நாங்கள் கேட்கவில்லை… எங்கள் தயாரிப்பில் உருவான படத்தில் உள்ள பாடல்களுக்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது??

அய்யா.. இதில் நீங்கள் எனச் சொன்னது தனிப்பட்ட இசைஞானியை சொல்லவில்லை… ஒட்டுமொத்த இசையமைப்பாளர்களையும் குறித்தது அது.

ஆனால் நீங்கள் உங்களுக்கான உரிமையைப் பெறும் அதேசமயத்தில் தயாரிப்பாளர்களுக்கான உரிமையையும் சுட்டிக்காட்டி பெற்றிருக்கலாமே அய்யா.

தயாரிப்பாளர்களுக்கும் ராயல்டி உண்டு என்ற சட்டத் தீர்வை பெற்றுத் தந்திருந்தால் நீங்கள் பெறப்போகும் ராயல்டியால் எங்கள் மனமும் வயிறும் குளிர்ந்திருக்குமே.

இப்போதாவது எங்களுக்கு அந்த உரிமையை பங்கிட்டுத்தர வாதாடுங்கள்.. நாங்களும் உடன் சேர்கிறோம். அல்லது எப்படிப் பெறுவது என்ற வழிகாட்டலையாவது முன்னின்று செய்யலாமே??

அல்லது தாங்கள் பெறும் ராயல்டியில் குறிப்பிட்ட சதவீதம் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு என் மூலம் தரப்படும்… அல்லது அந்தந்த இசையமைப்பாளர்கள் தருவார்கள் என அறிவிக்கலாமே??

இதில் ஏதாவதொன்றை இசைஞானியிடமிருந்து பதிலாகப் பெற காத்திருக்கிறேன்.

நலிந்த தயாரிப்பாளர்களின் நலத்தை நீங்களும் விரும்புவீர்கள் என்ற ஆசையில்….

இவண்
கே. ராஜன்
தலைவர்,
தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் குழு

Will You give Song Royalty to producer K Rajan asks Ilayaraja

More Articles
Follows