சாய்பல்லவி-யின் கரு படத்திற்கு இடைக்காலத் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JS ஸ்க்ரீன்ஸ் என்னும் நிறுவனத்தின் சார்பில் மணிமாறன் என்பவர் “கரு” என்ற பெயரில் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கெனவே ‘கரு’ படத்திற்கு ட்ரைலருக்கு சென்சார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2.0 படத்தை தயாரித்து வரும் பிரபல நிறுவனமான லைக்காவும் “கரு” எனும் பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளது.

விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் சாய்பல்லவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான கரு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான மணிமாறன் லைக்கா நிறவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் ஆவணங்களை சரிபார்த்ததில் JS ஸ்க்ரீன்ஸ் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கரு படத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

Court interm ban for Sai Pallavis Karu movie release

ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகனுடன் இணையும் ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில படங்களை மட்டுமே அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

அப்படி உருவாகி அனைவராலும் பாராட்டுப் பெற்று தேசிய விருதை பெற்ற படம் ஜோக்கர்.

இப்படத்தை இயக்கிவர் ராஜுமுருகன்.

இதனையடுத்து அவர் இயக்கவுள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்த நிலையில், நடிகர் ஜீவாவை அவர் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு இன்று நள்ளிரவு (பிப்ரவரி 6) வெளியிடப்படும்.

மேலும் இந்த இன்றைய நாட்பு நடப்புக்கு ஏற்ற, தலைப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Jiiva teams up with Joker fame director Raju Murugan

நண்பர்களுடன் இணைந்து புது பிஸினஸ் தொடங்கிய அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளமை பருவத்திலேயே உலகம் முழுவதும் உள்ள இசை பிரியர்களின் கவனம் ஈர்த்தவர் அனிருத்.

இவர் இசையமைத்த கொலவெறி பாடலை கேட்காதவர்களே இல்லை எனலாம்.

இந்நிலையில் இவர் இசைப்பயணத்தை தொடர்ந்து புதிய தொழில் ஒன்றிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

தன் நண்பர்களுடன் இணைந்து சென்னை, தேனாம்பேட்டையில் ஒரு ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார்.

இந்த ஹோட்டலுக்கு The Summer House Eatery என பெயரிட்டுள்ளனர்.

இந்த தகவலை புகைப்படங்களுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிருத்.

Anirudh Ravichander‏Verified account @anirudhofficial

A lil eatery which I have ventured into with friends.. The #SummerHouseEatery..Opens at 12 everyday.. Check it out

மீண்டும் விஜய்-அஜித்தை இணைக்க முயற்சி; இயக்குனரின் கனவு பலிக்குமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி-கமலுக்கு அடுத்த லெவலில் அஜித், விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் தற்போதைய இரு துருவங்களாக திகழ்கின்றனர்.

இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் அஜித் சில காட்சிகளிலே மட்டுமே வருவார்.

இந்நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் இணைக்க ஒரு இயக்குனர் முயற்சித்து வருகிறாராம்.

அவர் வேறு யாருமல்ல. தனி ஒருவன் பட இயக்குனர் மோகன்ராஜா தான்.

இவர்களுக்கான கதையை தேர்வு செய்துவிட்டதாகவும் விரைவில் அவர்களை சந்தித்து அந்த கதை குறித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை அவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் அது நிச்சயம் ரசிகர்களுக்கு செம மாஸ் விருந்தாக அமையும் என நம்பலாம்.

சிம்பு-விஜய்சேதுபதி கூட்டணியிலிருந்து நடிகர் விலகல்; நடிகை இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, பகத்பாசில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் மலையாள நடிகரான ஃபகத் ஃபாசில் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

கால்ஷீட்க்கு தேதிகள் ஒத்துவராததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு பதிலாக வேறு யார் நடிக்கப்போகிறார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது மற்றொரு நாயகியாக காற்று வெளியிடை பட நாயகி அதிதிராவ் இப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aditi Rao collaborate with Mani Ratnam again

காதலர் தினத்தில் கோலி சோடா 2 பட டிரைலர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலமான ஒளிப்பதிவாளர்கள் தற்போது இயக்குனர்களாகவும் வலம் வருகின்றனர்.

அதில் ஒருசிலரே வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களில் முக்கியமானவர் எஸ்.டி.விஜய் மில்டன்.

‘கோலிசோடா’, ‘கடுகு’ படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இவர்.

தற்போது ஹாட்ரிக் வெற்றியை நோக்கி கோலிசோடா இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதில் சமுத்திரக்கனி முக்கியக் கேரக்டரில் நடித்து வருகிறார். அவருடன் கௌதம் வாசுதேவ் மேனனையும் நடிகராக்கியிருக்கிறார் விஜய் மில்டன்.

சுபிக்ஷா இதில் நாயகியாக நடிக்க, விஜய்மில்டனின் சொந்த நிறுவனமான ‘ரஃப் நோட்’ தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இதன் டிரைலரை பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

அன்றைக்கு என்ன ஸ்பெஷல் தெரியும்தானே.? காதலர் தினம் என்பதையும் நாங்கள்தான் சொல்ல வேண்டுமா?

Goli Soda 2 trailer will be released on 14th Feb Valentines Day

More Articles
Follows