பாரதிராஜாவுடன் கைகோர்க்கும் மம்மூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் இமயம் என ரசிகர்களால் அழைக்கப்படும் பாரதிராஜா, நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் நிதிலன் இயக்கி வரும் ‘குரங்கு பொம்மை’ படத்தில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்க, இவருடன் விதார்த் நடிக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக்கை மலையாள நடிகர் மம்மூட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார்.

காவிரி பிரச்சினை தொடர்பான முழு அடைப்புக்கு திரையுலகம் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்திற்கு ஆளுங்கட்சியை தவிற ஏனைய அரசியல் அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும், பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையுலகை சேர்ந்த நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், பெப்சி, பி.ஆர்.ஓ யூனியன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன்படி இன்று தமிழகத்தில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், எவ்விதமான படப்பிடிப்புகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

நானும் ஹீரோதான் ‘மீசையை முறுக்கு’ம் ஹிப்ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் ஒரு துறையில் இருக்கும் பிரபலமானவர் மற்றொரு துறையில் நுழைவது வழக்கமான ஒன்றுதான்.

பிரபல இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தற்போது முன்னணி ஹீரோ வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

தற்போது இவர்களுடன் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் இணைந்துள்ளார்.

பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வந்த இவர், விஷால் நடித்த ‘ஆம்பள’ படம் மூலம் திரையுலகில் நழைந்தார்.

தற்போதும் படங்களுக்கும் இசையமைத்து வரும் நிலையில், ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கபாலி-தெறி புரொடியூசருடன் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தை தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தையும் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா.

இதனையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் பொன்ராம் இணைய உள்ள படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படங்களை முடித்துவிட்டு கபாலி, தெறி என அதிரடி ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற செய்திகள் வலம் வருகின்றன.

மேலும் இதுகுறித்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக இரவு நேரத்திலும் வரலாம் என சொல்லப்படுகிறது.

அஜீத்தை மீட் பண்ணியே ஆகணும்; அடம் பிடிக்கும் கிரிக்கெட் வீர்ர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களைத் தாண்டி அஜித்துக்கு திரையுலகிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது கிரிக்கெட் துறையிலும் ஒரு தீவிர ரசிகர் உருவாகி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீர்ர் பிரெட்லீ.

இவர் இசைத் துறையிலும் அதிக ஆர்வமாக உள்ளவர்.

சமீபத்தில் இவர் கலந்துக் கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியில் அஜித்தின் ஆளுமா டோலுமா பாடல் ஒலிப்பரப்ப பட்டுள்ளது.

இந்த தாளத்திற்கு அங்குள்ள அனைவரும் ஆரவாரம் செய்து ஆடிபாடியுள்ளனர்.

அதன்பின்னர் இப்பாடல் விவரங்களையும் அஜித்தையும் கேட்டு அறிந்திருக்கிறார் பிரெட்லீ.

எனவே, தற்போது ஒரு தடவையாவது அஜித்தை மீட் பண்ணியே ஆகணும் என்று அடம் பிடிக்கிறாராம்.

‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…’ என்பதை செய்து காட்டுவாரா ரஜினி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவேரி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே போராட்டங்கள் நடைபெறுவதால் பதட்டம் நிலவி வருகிறது.

தன்னுடைய ஆரம்ப காலங்களில் ரஜினிகாந்த், கர்நாடகாவில் இருந்தார் என்பதற்காக ஒவ்வொரு முறையும் இப்பிரச்சினை வரும்போதெல்லாம் ரஜினியின் பெயர் அடிப்படும்.

இந்நிலையில் 25 வருடங்களுக்கு முன்பு ரஜினி கூறியதாக கூறப்படும் பேட்டி இணையங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில்…”தமிழக மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். காவிரி பிரச்சினை தொடர்பாக தயவு செய்து யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்.

அப்படி ஈடுபட்டால், அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஒருவேளை இது தொடருமானால் எனது ரசிகர் படையுடன் நான் கர்நாடகா செல்வேன்” என்று தெரிவித்திருந்திராம்.

கபாலி படத்தில் நான் 25 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன் சொல்லு என்று ரஜினிகாந்த் பன்ச் டயலாக் பேசி நடித்திருப்பார்.

தற்போது இதுபோன்று செய்து காட்டுவாரா? என கேட்கின்றனர்.

More Articles
Follows