பாக்யராஜுடன் கைகோர்க்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுராஜ் இயக்கிய ‘கத்தி சண்டை’யை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் விஷால்.

கத்தி சண்டையை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர்.

மிஷ்கின் இயக்கவுள்ள ‘துப்பறிவாளன்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

அரோல் குராலி இசையமைக்க, தன் விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் தயாரிக்கிறார்.

ஜிவி பிரகாஷுடன் தாணு; தெறிக்க விடுவான் குமாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அம்மா கிரியேசன்ஸ் சிவா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கியுள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு.

இப்படத்திற்கு இசையமைத்து நாயகனாக நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இப்படத்தின் விதவிதமான டீசர்கள் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து, இப்படத்திற்கு பெரும் எதிர்பாரப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் திருச்சி வெளியீட்டு உரிமையை முருகானந்தம் மினிமம் கியாரண்டி அடிப்படையில் பெரும் தொகைக்கு பெற்று இருக்கிறார்.

கோவை உரிமையை சக்திவேல் பிலிம்ஸ் வேல்முருகன் பெற்றிருக்கிறார்.

சென்னை மற்றும் செங்கல்பட்டு உரிமையை பெரும் தொகைக்கு தெறி தயாரிப்பாளர் தாணு பெற்று இருக்கிறாராம்.

இப்படம் 2016 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

கார்த்தியுடன் திருமணம்; சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாட்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார் சட்னா டைட்டஸ்.

இப்படத்தை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டு அதிரடியான லாபம் பார்த்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்நிறுவனத்தை சேர்ந்த கார்த்தி என்பவரும் நாயகி சாட்னாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் வெளியானது.

தற்போது இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

வரும் 2017 ஜனவரியில் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெறும்” என தெரிவித்துள்ளனர்.

 

சந்தானத்துக்கு ஹிட் கொடுத்தவருடன் இணையும் ஜிவிபிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ மற்றும் ‘ப்ரூஸ்லீ’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இதனையடுத்து, ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம், சசி இயக்கத்தில் ஒரு படம், சரத்குமாருடன் ‘அடங்காதே’ என்றொரு படம் என பிஸியாக இருக்கிறார் ஜிவி.

இதனைத் தொடர்ந்து லொள்ளு சபா புகழ் ராம்பாலா இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவர் சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ என்ற சூப்பர் ஹிட்டு படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபன் இப்படத்தை தயாரிக்கிறார்.

‘கொடி’ நிலைமை என்ன..? ட்விட்டரில் தனுஷ் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இவரது அடுத்த படமான கொடி பற்றிய தகவல்களை சற்றுமுன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் அனைத்து பாடல்களும் தயார் நிலையில் உள்ளது.

அனைத்து பாடல்களையும் கேட்டேன்.

தொடரி ரிலீஸை தொடர்ந்து கொடி பட பாடல்கள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் செப்டம்பர் இறுதியில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்வின் விவாகரத்து பற்றி சௌந்தர்யா ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு வேத் என்ற ஆண் குழந்தை உள்ளது.

தற்போது கருத்து வேறுபாடு இருவரும் விவாகரத்து பெற உள்ளனர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில், இதுகுறித்து சௌந்தர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“என் விவாகரத்து பற்றி வரும் செய்திகள் உண்மையே. நான் ஒரு வருடமாக கணவரை பிரிந்துதான் வாழ்கிறேன்.

விவகாரத்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

 

பின்குறிப்பு : தமிழகத்தை சேர்ந்த பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் கணவரின் பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வார்கள்.

ஆனால் சௌந்தர்யா தனது திருமணத்திற்கும் பிறகும் தன் அப்பாவின் பெயரை சேர்த்து சௌந்தர்யா ரஜினிகாந்த் என்றே குறிப்பிட்டு வந்தார்.

இது தொடர்பான கேள்விகளுக்கு ‘நான் என்றுமே ரஜினியின் மகள் என்று சொல்வதையே விரும்புகிறேன்’ என்று சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

More Articles
Follows