பெண்களின் சேலையிலும் பளபளக்கும் பாகுபலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சினிமா தரத்திற்கு ஈடாக இந்திய சினிமாவின் தரம் எப்போது உயரும்? என்ற கேள்வி சில ரசிக வல்லுனர்களிடையே இருக்கும்.

அதற்கு விடை பாகுபலி தான் என்று சொல்லுமளவிற்கு ஓர் அற்புத காவியத்தை உருவாக்கியுள்ளார் ராஜமவுலி.

இளைஞர்கள் மட்டுமல்லாது குழந்தைகள், பெண்கள் ஆகியோரிடையே இப்படத்திற்கு ஆதரவு எழுந்துள்ளது.

இதனை நிரூபிக்கும் வகையில், பாகுபலி படத்தில் இடம்பெற்ற பிரபராஸ் மற்றும் அனுஷ்காவின் போட்டோ டிசைனை தங்கள் சேலைகளில் வடிவமைத்து பெண்கள் அணிந்து வருகின்றனர்.

Baahubali 2 saree designs on sales

ரூ. 200 கோடியை நெருங்கிய பாகுபலி2 முதல் நாள் வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவே எதிர்பார்த்த ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

எதிர்பார்ப்பை விட பல மடங்கு ரசிகர்களின் ஆதரவை இப்படம் பெற்று வருகிறது.

தமிழகத்தில் சில பிரச்சினைகளால் இதன் காலை காட்சி மட்டும் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் மட்டும் ரூ. 146 கோடியை இப்படம் வசூலித்துள்ளதாம்.

தமிழகத்தில் ரூ. 11 கோடியையும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 58 கோடியையும் கர்நாடாகவில் ரூ. 20 கோடியையும், கேரளாவிலும் ரூ. 7 கோடியையும் மேலும் இந்தியில் ரூ. 50 கோடியையும் வசூலித்துள்ளது.

இந்தியா தவிர வெளிநாடுகளில், ரூ. 70 கோடி அளவில் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெளியான முதல் நாளிலேயே ரூ 200 கோடியை வசூலித்துள்ள பாகுபலி இன்னும் எத்தனை சாதனைகளை படைக்கப் போகிறதோ…?

Baahubali 2 aka Bahubali 2 movie first day box office collection

விஜய்-விக்ரம்-பிரபுதேவாவை ஷங்கர் அழைக்க காரணம் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கிவரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ரூ. 400 கோடியில் தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.

இதனிடைல் ரஷ்டம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் அக்ஷய் குமார்.

எனவே அவருக்கு ஒரு பார்ட்டி வைக்க நினைத்த ஷங்கர் தன் நண்பர்களையும் அழைத்துள்ளார்.

அப்போது தன்னோடு பணிபுரிந்த டாப் ஹீரோக்கள் விஜய் (நண்பன்) விக்ரம் (அந்நியன், ஐ) மற்றும் பிரபுதேவா (காதலன்) ஆகியோரையும் அழைத்துள்ளார்.

இந்த பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது.

அதில் லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீ மகாலிங்கம், அக்சய்குமார், விஜய், விக்ரம், பிரபுதேவா ஆகியோர் இருந்தனர்.

இதுகுறித்து கேட்கப்பட்ட போது.. இது நட்பு ரிதீயிலான சந்திப்புதான். புதிய படம் குறித்த எந்த வித பேச்சும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Vikram Prabhu Deva joins in party with Shankar and Akshaykumar

அஜித் ரசிகர்களை அசத்த வரிந்து கட்டும் நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற மே 1ஆம் தேதி அஜித் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

அன்றைய தினத்தில் சிவா இயக்கியுள்ள விவேகம் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

மேலும் அவரது ரசிகர்களை மகிழ்விக்க தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள் சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.

சென்னையில் ரோகினி உள்ளிட்ட தியேட்டர்களில் ஏற்கெனவே முன்பதிவு ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ஜெயா டிவியும் அஜித் ரசிகர்களுக்காக சூப்பர் ஹிட் படங்களை ஒளிப்பரப்ப உள்ளது.

ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆகிய தினங்களில் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய 3 படங்களை ஒளிப்பரப்ப உள்ளனர்.

Jaya TV and famous Theatres have special programs on Ajith Birthday

ரசிகர்களை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்த இளைய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மை காலமாக விஜய் பட சூட்டிங்கின் போதே சில படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்து வருகிறது.

மேலும் அவரும் திடீரென ரசிகர்கள் முன் தோன்றி அவர்களுடன் படம் எடுத்து கொள்கிறார்.

இந்நிலையில் இன்று சென்னை ஈசிஆர் சாலையில் பனையூர் என்ற பகுதியில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் விஜய் வந்திருந்தார்.

அப்போது வெள்ளை வேஷ்டி அணிருந்தார்.

மேலும் சில ரசிகர்கள் அவருடன் புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது.

Vijays surprise meet with his fans

லைக்கா தயாரிப்பில் இணையும் விஜய்-சாய் பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த கத்தி படத்தை பிரபல நிறுவனமான லைக்கா தயாரித்தது.

தற்போது ரஜினி நடிக்கும் 2.0, கமல் நடித்து இயக்கும் சபாஷ் நாயுடு ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் புதியதாக ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறதாம்.

வனமகன் படத்தை முடித்துவிட்ட, இயக்குனர் விஜய் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

கரு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரேமம் மலர் டீச்சர் புகழ் சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார்.

இவர் நேரிடையான தமிழ் படத்தில் இதுவரை நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை முடித்துவிட்டு, சார்லி படத்தின் ரீமேக்கை விஜய் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Director Vijay and Sai Pallavi teams up with Lyca Productions

More Articles
Follows