தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை விட நடிகர் ஜி.வி. பிரகாஷ் பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் இவர் நடித்துள்ள புரூஸ் லி படத்தை பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசரை இன்று 5 மணியளவில் அட்லி வெளியிடவிருக்கிறாராம்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்த இருமுகன் நேற்று வெளியானது.
நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரமின் படம் வருவதாலும், இரு வேடங்களில் அவர் நடித்துள்ளதாலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் விக்ரமின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் முதல் நாளில் மட்டும் சென்னையில் 60 லட்சத்தை வசூலித்துள்ளதாம்.
செங்கல்பட்டில் ரூ.1.22 கோடியும், கோவையில் சுமார் 80 லட்சமும் வசூல் செய்துள்ளது.
தமிழக அளவில் ரூ 5.2 கோடியை வசூலித்துள்ளது.
மேலும் நேற்று (செப்டம்பர் 8ஆம் தேதி) விடுமுறை நாள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் அடிக்கடி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்.
இந்நிலையில் தற்போது தீடீரென ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து இருக்கிறாராம்.
அப்போது பி.வாசு இயக்கத்தில் தான் நடித்து வரும் சிவலிங்கா படம் பற்றி தெரிவித்து, அதற்கான வாழ்த்தையும் பெற்றாராம்.
இவை தவிர்த்து, தன்னை பெற்ற தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டும் பணியை பற்றியும் பேசியுள்ளார் என தெரியவந்துள்ளது.
விஜய் நடித்து வரும் படங்களை போலவே, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சுந்தர் சி இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, விஜய் நடிக்கவுள்ள ஒரு படத்தை இந்நிறுவனம் தயாரிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது.
மேலும் இப்படத்தை தெறி இயக்குனர் அட்லி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
இது உறுதியாகும் பட்சத்தில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.
பெரும்பாலும் நமக்கு அறிமுகமான நடிகர், நடிகைகளை வைத்தே படம் எடுப்பவர் பாலா.
தற்போது முதன்முறையாக புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.
இப்படத்தில் ஹீரோவாக சாட்டை படத்தில் நடித்த யுவன் நடிக்கிறார்.
ஹீரோயினாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரகதி நடிக்கவுள்ளார்.
பாலாவின் இந்த தேர்வு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை கவந்து வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவரிடம் பேசும்போது எவராயிருந்தாலும் கொஞ்சம் பார்த்துதான் பேச வேண்டும்.
கவுண்டர் மேல் கவுண்டர் கொடுத்து நம்மை சிக்கலில் மாட்டிவிடுவார்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் நடந்த கேம் ஷோவில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.
அதில் ஒரு உதவிக்காக சிவகார்த்திகேயனுக்கு போன் செய்துள்ளார்.
அப்போது அந்த தொகுப்பாளர் கீர்த்தி நன்றாக விளையாடுகிறார் என கூறினார்.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ‘அந்த பொண்ணு நல்லா விளையாட்றதே ஆச்சரியம்தான்’ என கூறி கலாய்த்தார்.