கமல்-சிம்பு நாயகியை வளைத்துக் கொண்ட சித்தார்த்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜில் ஜங் ஜக்’ படத்தை தொடர்ந்து அதிரடியாக நான்கு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சித்தார்த்.இதில் சசி இயக்கத்தில் ஜிவி. பிரகாஷுடன் ஒரு படம்.

இதனையடுத்து, ‘கப்பல்’ இயக்குனர் கார்த்திக் ஜி.க்ரிஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு ‘சைத்தான் கி பச்சா’ என இந்தியில் பெயரிட்டுள்ளனர். (பப்ளிகுட்டிக்கா?)

இதனைத் தொடர்ந்து முதன் முறையாக ‘கம்மராசம்பவம்’ என்ற மலையாள படத்தில் திலீப்புடன் இணைந்து நடிக்கிறார்.இந்த இரு படங்களை தொடர்ந்து, ஒரு படத்திற்கு ‘The House Next Door’ என்ற தலைப்பிட்டுள்ளனர்.இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.

Viacom18 மற்றும் Etaki Entertainment இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை மிலண்ட் ராவ் இயக்கவுள்ளார்.இதில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.

கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் சிம்புவுடன் இது நம்ம ஆளு ஆகிய படங்களில் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.ஏற்கெனவே ‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு வேண்டாம் என தமிழ் மொழி அல்லாத வார்த்தைகளில் பெயரிட்டார் சித்தார்த்.

தற்போதும் அவரது படங்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை 28 இரண்டாம் பாகமும்… சூர்யாவின் சிக்ஸர் விளக்கமும்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா மற்றும் வெங்கட் பிரபு இணைந்த மாசு என்கிற மாசிலாமணி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தனக்கு பேர் வாங்கி கொடுத்த ‘சென்னை 600028’  படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்து சிக்ஸர் அடிக்க இருக்கிறார் வெங்கட் பிரபு.

முதல் பாகத்தில் நடித்த நிறைய நட்சத்திரங்கள் இதிலும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக சில தினங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“சென்னை 28 படத்தில் எந்த கேரக்டரிலும் சூர்யா நடிக்கவில்லை. அது தொடர்பாக யாரும் அவரை அணுகவில்லை” என தெரிவித்துள்ளனர்.

‘தனுஷுக்கு சப் போர்ட்; ஆனந்திக்கு அப்பா…’ கலக்கும் சின்னி ஜெயந்த்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிறைய வருடங்களாக காலேஜ் பையனாக வந்து காமெடி செய்தவர் சின்னி ஜெயந்த். அதனை தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், பிரபுசாலமன் இயக்கியுள்ள தொடரி படத்தில் நடித்துள்ளார்.

இதில் ரயில்வே கண்ட்ரோல் ரூம் ஆபிசராக வருகிறாராம்.

னுஷ்-கீர்த்தியின் லவ்வுக்கு வழக்கம்போல் போல் சப்போர்ட் செய்யும்  கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இதனையடுத்து, பிரபுசாலமன் தயாரிப்பில் அன்பழகன் இயக்கி வரும் ரூபாய்படத்திலும் நடித்திருக்கிறார்.

இதில் பணத்திற்கு அடிமையாகும் இருக்கும் ஒரு வயதான கேரக்டரில் நடித்துள்ளார்.

அமிதாப்பின் ‘பிக்குபடத்தின் பாதிப்பை இதில் பிரதிபலித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார் சின்னிஜெயந்த்.

இவரின் மகளாக ‘கயல்ஆனந்தி இப்படத்தில் நடித்துள்ளார் என்பதுதான் ஹைலைட்.

கபாலி பாடல்கள் லீக்…. சந்தோஷ் நாராயணன் ரியாக்ஷன் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜுன் 12ம் தேதி ரஜினியின் கபாலி பாடல்கள் வெளியாகவிருந்த நிலையில், நேற்றே சில பாடல் வரிகளும் ரஜினியின் பன்ச் வசனங்களும் வெளியாகிவிட்டன.

இது ரஞ்சித் உள்ளிட்ட ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

இந்த நிலை தொடருமானால் படத்தின் நிலை என்னவாகும் என தீவிர ஆலோசனையில் உள்ளதாம் படக்குழு,

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இதுகுறித்து தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது….

மிகப்பெரிய நடிகரின் படத்தின் பாடல்கள் லீக் ஆகியுள்ளது. அவர் மீது நாங்கள் வைத்துள்ள அன்பும் எதிர்ப்பார்ப்பும் என்றும் மாறாது.

அமைதியாக இருப்போம். கபாலியை நேசிப்போம் என்று பதிவுட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சின்சியர் ‘ரஜினிமுருகன்’ ரசிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களை போற்றும் வகையில் நடிகர்கள் அவ்வப்போது தங்கள் படங்களில் காட்சிகளை வைப்பது உண்டு.அதுபோல் நடிகர்களை போற்றும் வகையில் நடிகரின் பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ரசிகர்கள்.

ரஜினி, கமல் பெயரில் தொடங்கும் நிறைய ரசிகர்களின் பெயர்களை நாம் பார்த்திருக்கிறோம்.இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கும் இப்படி ஒரு ரசிகர் கிடைத்துள்ளாராம்.

இவரது ரசிகரான ரஜினிவேல்முருகன் என்பவர் தேனியில் ரஜினிமுருகன் என்ற பெயரில் ஒரு டீக்கடையை திறந்துள்ளார்.அந்த கடையில் போர்டில் ரஜினிமுருகன் பெயரும் ரஜினி படமும் இடம்பெற்றுள்ளது.

இக்கடையின் அருகே சிவகார்த்திகேயனின் பேனர் ஒன்றையும் பெரிய அளவில் வைத்துள்ளாராம்.இதனையறிந்த சிவகார்த்திகேயனின் சிலிர்த்து போய் விட்டாராம்.

எனவே, அந்த சின்சியர் ரசிகருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஜய் 60 படத்தில் கீர்த்தியின் தாய்மாமனாக தேசிய விருது நடிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

பரதன் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஸ்ரீமன், டேனியல் பாலாஜி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் தாய்மாமனாக தம்பி ராமைய்யா நடிக்கிறாராம்.

இவர் மைனா படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows