பிட்டு படம் எடுத்திருக்கியா என வீட்டில் கேட்டார்கள்..? ‘மெட்ரோ’ இயக்குனர் ஆதங்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விதார்த்த் நடித்த ஆள் என்ற படத்தை இயக்கியவர் ஆனந்த் கிருஷ்ணன்.

இவர் தற்போது பாபி சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மெட்ரோ படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நாயகனாக ஸ்ரீரிஷ் நடிக்க, மாயா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சென்ட்ராயனும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் பேசியதாவது….

மெட்ரோ சிட்டியில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் மையக்கரு. சென்சாரில் இப்படத்திற்கு அதிகபட்சமாக ஏ சர்ட்டிபிகேட் கிடைக்கும் என நினைத்தேன்.

ஆனால் இப்படத்தை வெளியிடவே கூடாது என கூறிவிட்டார்கள்.

கிட்டதட்ட இரண்டு மாத போராட்டதிற்கு பிறகு படத்தை பார்த்த கங்கை அமரன் ஏ சான்றிதழுடன் வெளியிடலாம் என்று சென்சாரில் பேசி அனுமதி பெற்று தந்தார்.

ஏ சான்றிதழ் படம் என்றால் எல்லாரும் பிட்டு படமா? என கேட்கிறார்கள். என் வீட்டிலும் கேட்கிறார்கள்.

வன்முறை நிறைந்த படங்களுக்கும் ஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள் என்பதே பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது.

அதுமாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை சென்சார் ஏற்படுத்த வேண்டும்”

என்று பேசினார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன்.

சிம்பு இல்லன்னா ஆர்யா… அமீர்-யுவன் கூட்டணியில் புதிய படம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படத்திற்கு பிறகு அமீர் இயக்கத்தில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதன்பின்னர் சிம்பு நடிக்கவுள்ள ஒரு படத்தை விரைவில் இயக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் அந்த அறிவிப்புக்கு பின்னர் அது பற்றிய தகவல்கள் இல்லை.

இந்நிலையில் ஆர்யா நடிக்கவுள்ள ஒரு படத்தை அமீர் இயக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறாராம்.

தெறி ரீமேக்கில் விஜய் வேடத்தில் ஷாரூக்கான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் மாறுபட்ட வேடத்தில் விஜய் நடித்த படம் தெறி.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் மாபெரும் ஹிட்டடித்து ரூ. 100 கோடி க்ளப்பில் இப்படம் இணைந்தது.

தற்போது இப்படத்தின் ரீமேக் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இதன் ஹிந்தி ரீமேக்கில் ஷாரூக்கான் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் இப்படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ளதாக தகவல்களும் வந்தன.

இதுகுறித்து ரோஹித் ஷெட்டி கூறியதாவது…

“எந்த படத்தையும் நான் ரீமேக் செய்யவில்லை. மேலும் அதில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக வரும் செய்திகளிலும் உண்மையில்லை” என தெரிவித்துள்ளார்.

ரஜினி-ஷங்கர் இணைந்துள்ள ‘2.0’ பர்ஸ்ட் லுக், பட ரீலீஸ் எப்போது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘2.0’.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்தியாவின் மிகப்பிரம்மாண்டமான படமாக ரூ. 350 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் இதன் படப்பிடிப்பை பலத்த பாதுகாப்புடன் நடத்தி வருகிறார் ஷங்கர்.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு துவங்கி 100 நாட்கள் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார் இயக்குனர்.

அதில் க்ளைமாக்ஸ் உள்ளிட்ட இரண்டு சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கிறாராம்.

இந்தாண்டு செப்டம்பரில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர்.

அடுத்த வரும் 2017 கோடை விடுமுறைக்கு 2.ஓ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருட்டு டிவிடி வாங்குபவர்களை தண்டிக்கும் லைகா நிறுவனம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி இணைந்துள்ள படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.

சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படம் நாளை (ஜூன் 17) ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு திருட்டு டிவிடி வெளியாகும் பட்சத்தில், அதனை தடுக்கும் வகையில் ஒரு புதிய யுக்தியை எடுத்திருக்கிறது லைகா.

இதுகுறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது…

“இப்படத்திற்கு வர்த்தக ரீதியான டிரேட்மார்க் பதிவு ஒப்புதல் எண்ணை அறிவுசார் காப்புரிமை மையத்திலிருந்து பெற்றுள்ளோம். அந்த எண்: O-0000780028.

இந்த எண் பதிவு செய்யப்பட்டதன் மூலம் சட்டவிரோதமாக இப்படத்தின் டிவிடி விற்கப்பட்டாலோ, டிவிடி பார்த்தாலோ, டவுன்லோட் செய்தாலோ அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

மேலும் அவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தர முடியும்” என தெரிவித்துள்ளது.

‘கபாலி 22 மில்லியன்; ரஜினி 3 மில்லியன்…; அதிசயிக்கும் திரையுலகம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே மாதம் 1ஆம் காலை 11 மணியளவில் கபாலி டீசர் வெளியானது.

இதுநாள் வரை இதை டியூடிப் தளத்தில் 22 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இன்று வரை 22,084,018 பேர் பார்வையிட்டுள்ளனர்.

ஒரு தமிழ் படத்திற்கு இப்படியொரு பெருமை கிடைத்துள்ளதை திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் ட்விட்டரில் தன் கணக்கை தொடங்கினார் ரஜினி.

தற்போது இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 மில்லியனை தொட்டுள்ளது.

எனவே, இவை இரண்டையும் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

More Articles
Follows