மீண்டும் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகள் பிரபலமாக சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் அது இது எது நிகழ்ச்சியும் ஒன்று.

இந்நிலையில், சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன், இன்று இந்த நிகழ்ச்சி வாயிலாக விஜய் டிவியில் தோன்றினார்.

அதில், ரெமோ படத்தை மையமாக வைத்து ஒரு எபிசோடு ஒளிபரப்பானது.

அப்போது அந்த நர்ஸ் கெட்டப்புக்கு தான் மேற்கொண்ட சிரமங்களை எடுத்து கூறினார்.

அதன்பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் திறமையான கலைஞர்களை தனது படங்களில் பயன்படுத்திக் கொள்வதாக உறுதி அளித்தார்.

சௌந்தர்யா ரஜினி படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோச்சடையான் படத்தை தொடர்ந்து, செளந்தர்யா ரஜினிகாந்த் தனது இரண்டாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன்  படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை பார்த்தோம்.

இதில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நாயகி சோனம் கபூரும் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் ஏற்கனவே ரஞ்சனா படத்தில் தனுஷுடன் நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் இதில்  மோகன்லால் மகன் பிரணவ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘விஜய் சொல்லிட்டாரு; ரஜினி என்ன சொல்லுவாரோ?’ ரெமோ வெயிட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை பார்த்த நடிகர் விஜய்யும் சிவகார்த்திகேயனை பெரிதும் பாராட்டி இருக்கிறார்.

அப்போது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த கேரக்டரை பண்ணியிருக்கிறீர்கள் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், ரஜினிக்கு ரெமோ படத்தை திரையிட்டு காட்டப் போகிறார்களாம்.

ரஜினியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன் என்பதால் ரஜினி என்ன சொல்வாரோ? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.

விஜய்க்கு ‘தேவி’யால் நேற்று வலி…. இன்று குஷி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் தேவி.

பிரபுதேவா, தமன்னா, ஆர். ஜே. பாலாஜி நடித்துள்ள இப்படம் நேற்று முன்தினம் வெளியானது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இரண்டு நாட்களில் மட்டும் ரூ 3 கோடி வரை படம் இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் ஒரே நாளில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது.

எனவே, பிரபுதேவா மூன்று மொழிகளிலும் டப்பிங் கொடுத்தாராம்.

ஆனால் மற்ற நடிகர்களோ ஒரு மொழியிலே பேசி இருக்கிறார்கள்.

எனவே இப்படத்தை முடிப்பதற்குள் விஜய்க்கு பெரும் பாடாகிவிட்டதாம்.

ஆனால் தற்போது பாசிட்டிவ் ரிசல்ட் வருவதால் அந்த வலி பறந்து போய் விட்டதாக உணர்கிறாராம்.

மீண்டும் ‘ரெமோ’ இயக்குனருடன் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

எனவே இதுபோன்று காமெடியுடன் கூடிய தனக்கு பேர் வாங்கித் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுக்க உள்ளாராம்.

ரெமோ படத்தை தொடர்ந்து, மோகன்ராஜா இயக்கும் ஒரு படத்திலும், பொன்ராம் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களையும் ரெமோவை தயாரித்த, 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து, மீண்டும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

‘தல பெயரை பயன்படுத்த மாட்டேன்…’ அஜித் ரசிகர்களிடம் சிக்கிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களே எதையும் வெளிப்படையாக பேசுவார்கள்.

இதனால் சிலர் பொது இடங்களில் பேசுவதையே நிறுத்திவிட்டனர். ஆனால் சிம்பு இன்றுவரை தைரியமாக பேசி வருகிறார்.

இந்நிலையில் இன்று பேஸ்புக் பக்கத்தில் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சிம்பு.

அப்போது இனி வரும் படங்களில் அஜித் பெயரை பயன்படுத்தும் காட்சி ஏதாவது உள்ளதா? என்று ஒரு ரசிகர் கேட்டார்.

இனி அவர் பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது போல கூறியிருந்தார்.

சிம்பு அளித்த இந்த பதில் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதுகுறித்து சிம்பு ஒரு வீடியோ பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

“என்னுடைய ‘மன்மதன், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களில் அஜித் பெயரை பயன்படுத்தி இருப்பேன்.

அப்போது என்னை யாருமே கேள்விக் கேட்கவில்லை.

இப்போது அஜித் சார் பெரிய இடத்துக்குச் சென்றவுடன், நீங்கள் ஏன் அவருடைய பெயரை உபயோக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

நான் சொன்னதை தவறாக புரிந்துக் கொண்டீர்கள்.

அவரை ‘தல’ என்று தூக்கி வைத்துக் கொண்டாடாத காலக் கட்டத்திலேயே அவருடைய பெயரை முதலில் நான் சொல்ல வேண்டும் என நினைத்துச் சொன்னவன் நான்.

நான் ரஜினி சாருடைய தீவிர ரசிகன். என்னுடைய தலைமுறையில் அடுத்து அஜித் சாரை ரொம்ப பிடிக்கும்.

அஜித் சாரை தூக்கிவிட நான் யார்? அவருடைய கடின உழைப்பு தான் அவரை இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது.

அது எனக்கு முன்பே தெரிந்திருந்ததால் மட்டுமே, முன்பே எனது படங்களில் அவருடைய கட்-அவுட்டை வைத்து கத்தினேன்.

அவருடைய பெயரை வைத்து நான் இன்று பெரிய ஆளாக நினைப்பதாக சொல்வது காமெடியாக இருக்கிறது.

இன்று பலரும் அவருடைய பெயரை உபயோகிக்கும் அளவுக்கு அவர் வளர்ந்துவிட்டார்.

அதனால் நான் அவருடைய பெயரை உபயோகிக்க மாட்டேன் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள்.

ஏன் அஜித் சார் பெயரை உபயோக்கிறீர்கள் என்று கேட்ட போது கூட “சார்.. எனக்கு பிடித்த விஷயத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்பது போன்று இருக்கிறது” என்று பதிலளித்தேன்.

3 வருடங்களாக எனக்கு படங்கள் வரவில்லை. அனைத்து நாயகர்களை விட கீழே கேவலமான நாயகனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

படங்கள் வராத போது என்னுடன் நின்று என்னை தூக்கிவிட்டவர்கள் என்னுடைய ரசிகர்கள். அதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். யாருடைய உறுதுணையும் எதிர்பார்த்து நான் திரையுலகுக்கு வரவில்லை.

மற்ற நாயகர்களோடு ஒப்பிடும் போது நான் அந்த இடத்தில் இல்லையென்றால் கூட எனக்கு கவலையில்லை.

மேலே இருக்கும் போது கீழே விழுந்துவிடக்கூடாதே என்று பயப்பட வேண்டும். கீழே இருக்கும் போது வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை”

இவ்வாறு அந்த பதிவில் சிம்பு பேசியுள்ளார்.

Don’t try to spoil my releationship with #Thala ur wasting ur time . #RealThalaFans will never let me down and I will never let him down .

— STR (@iam_str) October 9, 2016

More Articles
Follows