சிவகார்த்திகேயன் வரிசையில் பூர்ணா; மேடையில் ஏன் அழுதார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன், ரெமோ படத்தின் நன்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் அழுதது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று சற்றுமுன் சவரக்கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் இயக்குனர்கள் மிஷ்கின், ராம், நடிகை பூர்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை பூர்ணா பேசும்போது… “நான் முதலில் டான்ஸராக தான் இருந்தேன்.

பின்னர் பரத்துடன் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்தேன்.

அதன்பின்னர் சில படங்களில் நடித்தாலும் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

எனவே மீண்டும் டான்ஸராக இருக்கலாம் என முடிவெடுத்தேன்.

ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அருமையாக கேரக்டரை இப்படத்தில் கொடுத்த, மிஷ்கின் மற்றும் ராம் ஆகியோருக்கு நன்றி.

ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் என்னை பெரிய திரையில் பார்க்கும் போது என் அம்மா அழுதே விட்டார்”

இவ்வாறு பூர்ணா பேசும்போது அவரும் அழுது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

காக்க வைத்த தனுஷ்; கார்த்திக் சுப்புராஜீக்கு கைகொடுத்த பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த இறைவி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்த போதிலும், தயாரிப்பாளர்களை அவமதிக்கும் படியான காட்சிகள் இருந்ததால், இயக்குனருக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

எனவே கார்த்திக் சுப்புராஜுடன் தனுஷ் இணையும் படம் தாமதம் ஆவதாக கூறப்பட்டது.

அதற்குள் வடசென்னை, பவர் பாண்டி, சௌந்தர்யா ரஜினியின் படம் ஆகிய படங்களில் தனுஷ் பிஸியாகி விட்டார்.

இந்நிலையில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டதாம்.

எனவே, இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தீபாவளி தினத்தில் ரசிகர்களுக்கு ‘கபாலி’ தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நூறாண்டு கண்ட இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திற்கு விளம்பரங்களும் எதிர்பார்ப்புகளும் உருவானது.

படமும் வெளியாகி உலகளவில் பெரும் வசூலை அள்ளியது.

இப்படம் வெளியாகி 100 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், மீண்டும் இப்படத்தை ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு வந்துள்ளது.

இப்படத்தை தீபாவளி அன்று கேரளாவை சேர்ந்த ஆசியாநெட் டிவியில் ஒளிப்பரப்பாக்க இருக்கிறார்களாம்.

ஆனால், இது தமிழ் பதிப்பு. மலையாள பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

‘தல புகழ்’ பாடும் பாட்டு; வைரலாக்கும் அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எவர்கிரீன் இன்டர் நேஷனல் சார்பில் வி. ஏ. துரை தயாரித்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள படம் ‘காகித கப்பல்’.

இதில் நாயகனாக சிவபாலன் (எ) அப்புக்குட்டி நடிக்கஇ நாயகியாக தில்லிஜா அறிமுகமாகிறார். பவர் ஸ்டார்’சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பரோட்டா முருகேசன், எலி ராஜன், ரமேஷ் மாணிக்கம், சுஜாதா, பூனை சூப் பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

இசையை பிரசன்னா கவனிக்க, வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, சிவராமன்.எஸ் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் அஜித்தின் புகழை பரப்புவதாக அமைந்துள்ளது.

அம்மா அப்பா குடும்பத்த பாரு… அப்புறம்தானே சினிமா ஸ்டாரு…
அப்படி சொன்னது யாரு.. நம்ம தல தானே…

மன்றம் அமைக்கும் செலவு எல்லாம் எதுக்கு… அன்பு இருந்தா அது போதும் எனக்கு…. சொன்னது யாரு.. நம்ம தல தானே… என்று அப்பாடல் தொடங்குகிறது.

கானா வினோத் மற்றும் கானா குணா இருவரும் இப்பாடலை பாடியுள்ளனர்.

தற்போது இப்பாடல் இணையத்தில் அஜித் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

2015ல் ஆர்யா-சூர்யா-விஜய் இருந்தாங்க… ஆனா 2016ல் அஜித் மட்டும்தான்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று கோலிவுட் நட்சத்திரங்கள் பற்றிய Most Sensational Celebrities 2016 ஆய்வு ஒன்றை நடத்தியது.

இதில் நிக்கி கல்ராணி, நயன்தாரா, மடோனா, பார்வதி ஆகிய 4 நடிகைகள் இடம் பெற்றுள்ளனர்.

5வது இடத்தில் நடிகர் அஜித் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

கடந்த 2015 ஆண்டில் நடைபெற்ற ஆய்வின் போது, அமலா பால், ஆர்யா, சூர்யா, விஜய் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் வரிசையாக இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தப்ப சரிகட்ட நினைக்கிறவன மன்னிக்கவே மாட்டேன்…’ விஷால் பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கத்தி சண்டை.

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படம் நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை சற்றுமுன் வெளியிட்டனர்.

அதில்…. தப்பு பண்றவங்கள கூட மன்னிச்சுடுவேன். ஆனா செஞ்ச தப்ப சரி கட்டும்னு நினைக்கிறவன மன்னிக்கவே மாட்டேன் என பன்ச் டயலாக் பேசியுள்ளார்.

இறுதியாக இந்த டீசரில் ஐயம் பேக் என்றபடி வடிவேலு வருகிறார்.

More Articles
Follows