தன் வருங்கால மனைவி அனிஷாவை அறிமுகம் செய்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அவர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் உருவாகவுள்ள மண்டபத்தில் தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

இதனால் விஷாலின் மணக்கப் போகும் பெண் யார்? என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது.

இதனையடுத்து என் திருமணம் பற்றி நான் விரைவில் முறையாக அறிவிப்பேன் என தெரிவித்தார்.

தற்போது அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

அனிஷா அல்லா ரெட்டி என்ற பெண்ணின் புகைப்படங்களை வெளியிட்டு இவர்தான் நான் மணக்கப் போகும் பெண் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

திருமண நிச்சயதார்த்தம் வருகிற ஃபிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்யப் போகும் பெண் அனிஷா, ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vishal to get engaged to Arjun Reddy actor Anisha Alla

ரஜினியின் அடுத்த ப(இ)டம் நாற்காலி.? ஏஆர் முருகதாஸ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘பேட்ட’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை அடுத்து விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியானது.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் இப்படத்தின் தலைப்பு ‘நாற்காலி’தான் என தகவல்கள் வந்தன.

இதற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ‘என்னுடைய அடுத்த படத்தலைப்பு ‘நாற்காலி’ இல்லை என்றும், தேவையில்லாமல் தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அவர் ரஜினி படத்தை இயக்குகிறாரா? என்பது குறித்தும் அதில் சொல்லவில்லை.

AR Murugadoss clarifies Naarkkali is not movie title for his next

Breaking இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் *தமிழரசன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கியவர் விஜய் ஆண்டனி.

இவர் நடிக்கும் படங்களுக்கும் இவரே இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நாயகனாக நடித்த பல படங்களை இவரே தயாரித்தும் வந்தார்.

அண்மைக்காலமாக மற்ற தயாரிப்பு படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் பாபு யோகேஸ்வரன் இயக்கவுள்ள தமிழரசன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, கௌசல்யா ராணி தயாரிக்கிறார்.

நாளை முதல் இப்பட படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவித்து பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Vijay Antonys next venture titled Tamizharasan Music by Ilayaraja

மணிரத்னம் படத்தில் ஜிவி.பிரகாஷின் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த தனசேகரன் இயக்கும் படத்தில் ஜிவி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதி மணிரத்னம் தயாரிக்கிறார்.

‘96’பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிப்பவர்கள் யார் என்ற விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

GV Prakash and Aishwarya Rajesh team up for Maniratnam

கட் அவுட் வேண்டாம்; பெற்றோருக்கு டிரெஸ் வாங்கி கொடுங்க.. : சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

சிம்பு உடன் மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, மஹத், ரோபோ சங்கர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்க, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

வருகிற பிப்ரவரி 1-ந்தேதி படம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் ஒரு வீடியோ பதிவில் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார் நடிகர் சிம்பு.

அதில், “வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.

பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதை கொடுத்து படத்தை பார்த்தால் போதும்.

அதுபோல் கட்-அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்ய வேண்டாம். அது முக்கியம் கிடையாது.

அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும். அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும். ” என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிம்புவின் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Gift new dress to your parents instead of my cut outs says Simbu

விஸ்வாசமான ட்ராக்கர்களை அண்டர்வேரோடு ஓட விட்ட *பேட்ட*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜனவரி 10ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்பில் 2 படங்கள் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.

இதில் ரஜினியின் பேட்ட வசூலை அஜித்தின் விஸ்வாசம் முந்தி விட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டது. இதனை சில ரசிகர்கள் மற்றும் ஊடங்கள் நம்பி செய்தியாக வெளியிட்டனர்.

இதனையடுத்து ‘பேட்ட’ தரப்பில் அப்படத்தின் பிஆர்ஓ ரியாஸ் அவர்கள் “தமிழ்நாட்டில் 600க்கும் அதிகமான தியேட்டர்கள் ‘பேட்ட’ படத்திற்கு உள்ளது.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழ்நாடு வினியோகஸ்தர் கேஜேஆர் ஸ்டுடியோஸ், “தமிழ்நாடு மக்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் உண்மை தெரியும். ஏன் நீங்கள் தேவையில்லாத போட்டியையும், சண்டையைம் உருவாக்குகிறீர்கள்.

தமிழ்நாடு பாக்ஸ்ஆபிஸ் வசூல் என்ன என்பதைப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்,” என கருத்து தெரிவித்தார்கள்.

இதனால் ஒரு சர்ச்சை உருவானது. இதனிடையில் விஸ்வாசமான சில ட்ராக்கர்கள் விஸ்வாசம் தான் முன்னிலை என வரிந்துக் கொண்டு ட்வீட் போட்டார்கள்.

இதனால் கடுப்பான ‘பேட்ட’ தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் தரப்பில், “டிராக்கர்ஸ் என்று அழைக்கப்படுபவர்களே, தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான ‘பேட்ட’ படத்தின் வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக எங்களுக்கே இன்னும் வராத நிலையில் நீங்கள் எப்படி உறுதியாக வசூல் விவரங்களைத் தெரிவிக்கிறீர்கள்.

ரசிகர்களே, இரண்டு படங்களுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள். தவறான பரப்புரையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்,” என டுவிட் செய்தனர்.

அதன் பின்னரே சில விஸ்வாசிகள் தங்கள் தவறை உணர்ந்துள்ளனர். ஆனாலும் ஒரு சிலர் தங்கள் தவறை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Rajinis Petta team slams Ajiths Viswasam paid trackers

More Articles
Follows