ஜல்லிக்கட்டு பார்வையாளர் மரணம்; அவரது மகளை தத்தெடுத்தார் அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேடு கிராமத்தில் கடந்த ஜன-15 மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடந்தது.

இந்த நிகழ்வின்போது அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஆவேசமாக சீறிப் பாய்ந்த ஒரு காளை முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து(19) என்பவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார்.

இறுதி சடங்கிற்கு ஆதரவு தரவேண்டிய ஜல்லிக்கட்டு பேரவையோ விழா கமிட்டியோ அல்லது லட்சகணக்கில் கார் பைக் தங்க வெள்ளி நாணயங்களை பரிசாக தந்த உபயதார்களோ அவரது உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை கூடு செய்து தர முன்வரவில்லை என்பதுதான் கொடுமை.

இந்தநிலையில் உடலை போஸ்ட்மாடர்ம் செய்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு சில அரசு மருத்துவ ஊழியர்கள் லஞ்சம் கேட்ட அவலமும் நடந்தது.

இந்தநிலையில் அதே தினம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை கொண்டாடிக்கொண்டு இருந்த நடிகர் அபிசரவணன் இந்த செய்தியை கேள்விப்பட்டு உடனடி காளிமுத்துவின் இறுதிச்சடங்கிற்கான உதவியாக ஜந்தாயிரம் ருபாயை நேரில் சென்று தந்துவிட்டு, மறைந்த காளிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார்.

மேலும் தனது அண்ணனை இழந்து படிப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியான நிலையில் உள்ள காளிமுத்துவின் தங்கை பத்து வயது சிறுமிக்கு இனி அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அவளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டு படிப்பை தொடர உதவுவேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அபிசரவணன்.

இதற்குமுன் விவசாயிகள் போராட்டத்தின்போது டெல்லியிலேயே தங்கி அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் அபிசரவணன், தற்கொலை செய்துகொண்ட சில விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்ததுடன், மற்ற சில நல்ல உள்ளங்களிடமும் இருந்து அவர்களது வாழ்வாதாரத்திற்கான நிதி உதவியையும் பெற்று தந்துள்ளார்

தொடர்ந்து இதுபோன்று தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்துவரும் வளர்ந்து வரும் நடிகரான அபிசரவணனின் மனிதாபிமானம் போற்றுதலுக்குரியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Actor Abi Saravanan adopted 10 year girl as his sister

அதர்வாவின் பூமராங் பட டைட்டில் லுக்கை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர் கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் – ஷரதா ஸ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இவன் தந்திரன்’.
இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ஆர்.கண்ணன் ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்கவிருக்கிறார்.

இதில் நாயகனாக அதர்வா நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மேலும் வில்லனாக ஹிந்தி நடிகர் உபேன் படேல் நடிக்கிறார்.

ரதன் இசையமைக்கவுள்ள இதற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படத்திற்கு ‘பூமராங்’ என தலைப்பிட்டுள்ளனர். இப்பட டைட்டில் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்

குடியரசு தினத்திலிருந்து தள்ளிப் போனது டிக் டிக் டிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் டிக் டிக் டிக்.

இது இமான் இசையில் உருவாகியுள்ள 100வது படமாகும்.

இந்திய சினிமாவில் முதன்முறையாக தயாராகியுள்ள விண்வெளி படம் இது என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் பாடல்கள், டீசர் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் ஜனவரி 26ஆம் தேதி படத்தை திரையிட நினைத்திருந்தனர்.

ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் சௌந்தரராஜா-தமன்னா திருமண நிச்சயத்தார்த்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தரபாண்டியன்’ படம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா.

இதனையடுத்து `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, `ஜிகர்தண்டா’, `எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, `தங்கரதம்’, `தர்மதுரை’, `ஒரு கனவு போல’, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமா தவிர பல சமூக சேவைகளிலும் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்“ நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் தமன்னாவுக்கும் – சவுந்தர்ராஜாவுக்கும் திருமணம் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றுள்ளது.

வருகிற மே மாதம் மதுரையில் திருமணம் நடைபெற உள்ளது.

actor Soundararaja engagement with Tamanna

நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கடுமையாக கண்டித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவைத் தாண்டியும் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றவர் சூர்யா.

பொது இடங்களிலும் அமைதியான அனுகுமுறையை இவர் கடைப்பிடிப்பவர்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்றிருந்த இவர் அங்குள்ள ரசிகர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்ட வீடியோ இணையங்களில் வைராகியுள்ளது.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து நள்ளிரவு சூர்யா காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

இதனையறிந்த ரசிகர்கள் அவரை படு வேகத்தில் பைக்கில் தொடர்ந்து சென்றுள்ளனர்.

எனவே அங்கு தன் காரை நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளார். இப்படி படு வேகமாக வண்டி ஓட்டினால் என்னாவது? வேகம் ஆபத்து என பேசியுள்ளார்.

இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

ஞானவேல்ராஜா-சிவகார்த்திகேயன்-விக்னேஷ் சிவன் புதிய கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலைக்காரன் படத்தை முடித்துவிட்டு பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகயேன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தையும் அவரின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஏஆர். ரஹ்மானுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு ஸ்டூடீயோ கிரீன் தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.

இனி வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுப்பேன் என சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows