செம ஷார்ப்… துப்பாக்கி முனை திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விக்ரம் பிரபு, ஹன்சிகா, மாரிமுத்து மற்றும் பலர்
இயக்கம் – தினேஷ் செல்வராஜ்
இசை – எல்வி. முத்துகணேஷ்
ஒளிப்பதிவு – ராசாமதி
தயாரிப்பாளர் – கலைப்புலி எஸ் தானு
பிஆர்ஓ – டைமண்ட் பாபு

கதைக்களம்…

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிசராக விக்ரம் பிரபு. படத்தில் இவரது கேரக்டர் பெயர் பிர்லா போஸ்.

போஸ் என்ற கேரக்டருக்கு போஸ் கொடுத்தப்படியே தன் கதையை ஆரம்பிக்கிறார்.

என்கௌண்டர் என்பதால் யாரையும் பொருட்படுத்தாமல் போட்டுத் தள்ளுகிறார். இதனால் அம்மா, காதலி என அனைவரது அன்பையும் இழக்கிறார்.

இந்நிலையில் பாலியல் குற்றத்திற்காக ஒருவனை என்கௌண்டர் செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். ஆனால் அந்த நேரத்தில்தான் அந்த நபர் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.

எனவே அவனை குற்றமற்றவர் என்பதை கோர்ட்டில் நிரூபிக்க போராடுகிறார். இதில் அந்த நபரை போட்டுத் தள்ள ஒரு ரவுடி கும்பல் விரைகிறது.

இந்த சூழ்நிலையில் விக்ரம் பிரபு என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

படம் முழுவதும் சீரியசான என்கௌண்டன்ராக விக்ரம் பிரபு ஜொலிக்கிறார். கம்பீரம் தோற்றத்துடன் பிர்லா போஸ்ஸாக மனதில் நிறைக்கிறார்.

ஹன்சிகாவுக்கு படத்தில் அதிக வேலையில்லை.

மற்றொரு நாயகன் போல எம்எஸ். பாஸ்கர். க்ளைமாக்ஸில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். துப்பாக்கி முனையை விட இவர் பேசும் வசனங்கள் செம ஷார்ப்.

பாலியல் குற்றத்தை குறைக்க அடிப்படையிலேயே மாற்ற வேண்டும். விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் இந்த குற்றத்தை குறைக்கலாம் என்பதை ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.

அதுபோல் விக்ரம் பிரபுவின் அம்மா பேசும் வசனங்களும் செம. எப்போ பார்த்தாலும் காந்தி, காமராஜரை பற்றியே பேசுகிறோம். அதன்பின்னர் ஏன் யாரும் உருவாகவில்லை. உருவாக்கவில்லை என்பதும் நச் கேள்வி.

கைதியாக வரும் அந்த ஆசாத் நிச்சயம் ரசிகர்களை கவருவார். வேல ராமூர்த்தி மிரட்டல் வில்லனாக ஜொலிக்கிறார்.

இவரின் மகன் மற்றும் அவரின் நண்பர்களும் நல்ல தேர்வு.

எம்எஸ் பாஸ்கரின் மகளாக வரும் அந்த நாயகி நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

முத்துகணேஷின் இசையில் மகள் பாடல் நம்மை ஈர்க்கிறது. பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.

ராசாமதியின் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் காட்சிகள் சிறப்பு.

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் ஒரு ஆக்சன் கதையை அதிரடியாக கொடுத்துள்ளார். க்ளைமாக்ஸ் வசனங்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

மொத்தத்தில் துப்பாக்கி முனை… செம ஷார்ப்

மச்சக்காரன்… இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விமல் (ஹரி), ஆஷ்னா சவேரி (சுரேகா), ஆனந்தராஜ் (அண்ணாச்சி) சிங்கம்புலி (கிரி) மன்சூரலிகான் (செங்கல்வராயன்), பூர்ணா (கீதா), மியாராய் (கன்பைட் காஞ்சனா) லோகேஷ், வெற்றி வேல்ராஜ்.
இயக்கம் – AR.முகேஷ்
இசை – நடராஜன் சங்கரன்
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
தயாரிப்பாளர் – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்
பிஆர்ஓ – மௌனம் ரவி

கதைக்களம்…

‘அடல்ட் காமெடி’ படங்கள் நிறைய தமிழில் வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள அடுத்த படம் இது.

ஹரியும் (விமல்) கிரியும் (சிங்கம் புலி) இருவரும் ஒரு மருந்துக் கடையில் வேலை செய்கிறார்கள்.

ஹரி திருமணமாகாதவர். இதனால் பல பெண்களை வளைத்து போட்டு வச்சு செய்கிறார். ஹீரோயின் ஒரு புறம் என்றாலும் அவரின் அக்காவுக்கும் ரூட்டுக்கு விடுகிறார்.

ஆனால் கிரிக்கு திருமணம் ஆகிவிட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி வேறொருவருடன் ஓடி விடுகிறார்.

இவர்கள் இருவருக்கும் சம்பளம் பத்தவில்லை என்பதால் சின்ன சின்ன திருட்டுக்களை செய்கின்றனர். அதாவது வீடுகளில் புகுந்து சோப் டப்பா முதல் விளையாட்டு பொம்மை வரை திருடுகின்றனர்.

ஒருமுறை திருடும்போது போலீஸ் வீட்டிலேயே ஆளுக்கு ஒரு 5 லட்சம் திருடுகின்றனர்.

அதன் பின்னர் என்ன ஆனது? போலீஸ் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

விமலுக்கு இதுவொரு வித்தியாசமான படம். ப்ளேபாய் கேரக்டர் என்றாலும் திருட்டுப்பயலாகவும் வாழ்ந்திருக்கிறார்.

அதுவும் சன்னி லியோன் தங்கை மியா ராயுடன் மாட்டிக் கொண்டு இவர் விழிப்பது காம நெடி.

கொஞ்சம் உடை, நிறைய கவர்ச்சி என தாராளமாக வந்துள்ளார் ஆஷ்னா சாவேரி. இவரது ஆடை போலவே இவருக்கு வசனங்களும் குறைவு.

காம நெடி டயலாக்குகளை ஆங்காங்கே சிதற விட்டுள்ளார் சிங்கம் புலி. செக்ஸ் புத்தகம் படிக்கும் போது இவர் செய்யும் முகபாவனைகளுக்கு தியேட்டரில் சிரிப்பலை தான்.

ஆனந்த ராஜ் அசத்தல் ராஜ். வில்லனாக விஸ்வரூபம் எடுத்தவர், இதில் டபுள் மீனிங் டயலாக்கிலும் அசத்தியிருக்கிறார்.

கம்பீரமான  காவல் துறை அதிகாரியாக விமல். மன்சூர் அலிகான் நடிப்பிலும் கச்சிதம்.

வ்வ்வ்வ்வா என விமலை காமத்துடன் அழைக்கும் மியாராய்க்கு இனி நிறைறைறைய வாய்ப்புகள் வரும். கன் பைட் காஞ்சனா செம ஷாட்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சங்கர நாராயணன் நடராஜனின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் நம்மை கவர்கின்றன. அதுவும் கவர்ச்சியான காட்சிகள் இளைஞர்களை சூடேற்றும்.

இப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முகேஷ். இளைஞர்களை குறி வைத்து அடல்ட் காமெடி படத்தை தந்துள்ளார்.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு… மச்சக்காரன்

Evanukku Engeyo Matcham Irukku review rating

காதல் கிறுக்கன்… சீமத்துரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கீதன், வர்ஷா, விஜி சந்திரசேகர், மகேந்திரன், கயல் விண்செண்ட், மாமா காசிராஜன், ஊமையன் நிரஞ்சன், வில்லன் ஆதேஷ் பாலா மற்றும் பலர்.
இயக்கம் – சந்தோஷ் தியாகராஜன்
இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின்
ஒளிப்பதிவு – திருஞானசம்பந்தம்
தயாரிப்பாளர் – சுஜய் கிருஷ்ணா
பிஆர்ஓ – குமரேசன்

கதைக்களம்…

ஹீரோ கீதன் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட். இவரின் அம்மா விஜி சந்திரசேகர். மீன் விற்கும் தொழிலை செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் நாயகி வர்ஷாவை சந்திக்கிறார் கீதன். பார்த்த உடனே காதலும் கொள்கிறார். ஆனால் வர்ஷா இவரின் காதல் வழிக்கு வர முதலில் மறுக்கிறார்.

இந்த பிரச்சினை வீட்டுக்கு தெரிய வர வர்ஷாவின் தாய்மாமன் பெண் கேட்கிறார். ஆனால் வர்ஷாவின் அப்பா இவரை செருப்பால் அடித்துவிடுகிறார்.

நாளடைவில் நாயகன் கீதன் மீது வர்ஷாவுக்கு காதல் வருகிறது. அதன்பின்னர் என்ன நடந்தது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் கீதன், நாயகி வர்ஷா, விஜி சந்திரசேகர் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

ஹைட் வெயிட் என அழகாக வருகிறார் கீதன். ஆனால் நடிப்பில் இன்னும் முதிர்ச்சியில்லை.

கிராமத்து மண் வாசனை, கனகாம்பரம் பூ, பாவாடை தாவணி என பளிச்சென வருகிறார் நாயகி வர்ஷா. அருமையான நடிப்பையும் வெளியிப்படுத்தியுள்ளார்.

96 படத்தில் ஒரு காட்சியில் தன் கண்களாலேயே த்ரிஷாவிடம் பேசுவார் வர்ஷா. இதில் படம் முழுக்க தன் கண்களால் தன் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கருவாடு மீன் விற்கும் பெண்ணாக விஜி சந்திரசேகர். பக்கா கிராமத்து அம்மாவாக அசத்தியிருக்கிறார்.

இவர்களுடன் காசிராஜன், ஆதேஷ் பாலா ஆகியோரும் சிறப்பான தேர்வு. ஊமையன் கேரக்டரில் நடித்துள்ள நிரஞ்சன் நம் நெஞ்சங்களில் நிறைகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கிராமத்து வீடு, அந்த பகுதி மனிதர்கள் என இயற்கையோடு கொஞ்சி விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருஞானசம்பந்தம்.

இசையமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்க முடிகிறது.

ஒளிப்பதிவும் பாடல்களும் நன்றாக உள்ளதால் படத்தை ரசிக்க முடிகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று. அதுபோல் வில்லன் கேரக்டரும் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

ஹீரோ ஆரம்பக் காட்சிகளில் அவரை ரவுடித்தனம் பன்னும் மாணவனாக காட்டி விட்டு, இறுதியில் அடி வாங்கிக் கொண்டே இருப்பதாக காட்டியது சரியாக பொருந்தவில்லை.

சீமத்துரை என்று டைட்டில் வைத்துவிட்டு கோழையாக ஹீரோ இருப்பது சரியா டைரக்டர் சாரோ?

வழக்கமான கிராமத்து காதலை அழகாக சொல்ல முயற்சித்துள்ளார். அதில் யூகிக்க முடியாத ட்விஸ்ட்டுகளை சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனால் படம் எந்த காலத்தில் எடுக்கப்பட்டது என்பது பெரும் குழப்பமாக உள்ளது.?

காரணம் நிறைய வீடுகளில் டேப் ரிக்கார்ட்டர் இருக்கிறது. அதில் 1990களில் வந்த பாடல்களே ஒலிக்கிறது. ஆனால் அண்மையில் வெளியான வீரம், கயல் பட போஸ்டர்களும் இருக்கிறது.

ஒரு வேளை இது இந்த காலமாக இருக்குமோ? என்று எண்ணினால் ஒருவரிடம் கூட செல்போன் இல்லை.

ஒருவர் இறந்து கிடக்கிறார் என்றால் ஓடிப்போய் தான் தகவல் சொல்கிறார்.

பிரஸ் ஷோ முடிந்தவுடன் இந்த குழப்பத்தை நாம் நேரில் கேட்டுவிட்டோம். செல்போன் இல்லாத கிராமங்கள் இருக்கிறது. இன்னும் டேப் ரிக்கார்ட்டர் இளையராஜா பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிற கிராமங்களும் இருக்கிறது என பதிலளித்தார் டைரக்டர்.

அவர் சொன்னது சரியாக இருந்தாலும் எல்லா ரசிகர்களுக்கும் இது புரியுமா? என்பது சந்தேகம்தான்.

சீமத்துரை.. காதல் கிறுக்கன்

First on Net ஹாலிவுட்டுக்கு சவால்… 2.0 திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் மற்றும் பலர்.
இயக்கம் – ஷங்கர்
இசை – ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
படத்தொகுப்பு – ஆண்டனி
பாடல்கள் – பாஸ்கர் பத்லா, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார்,
கலை – டி.முத்துராஜ்
சண்டைபயிற்சி – ஸ்டண்ட் சில்வா
ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி
தயாரிப்பு – சுபாஷ்கரன் லைகா நிறுவனம்
பிஆர்ஓ.. – டைமண்ட் பாபு, ரியாஸ் அஹ்மது, நிகில் முருகன்

கதைக்களம்…

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமில்லை. அனைத்து உயிரினங்களும் சொந்தமானது. ஆனால் 6 அறிவு படைத்த மனிதன் மட்டும் தன் ஆதிக்கத்தால் அனைத்து உயிரினங்களையும் அழித்து இந்த உலகத்தை ஆட்சி செய்து வருகிறான்.

மனிதனை மிஞ்ச எந்த சக்தி இங்கில்லை. எனவே அவன் ஆணவத்தோடு அலைகிறான். பெரிய பெரிய விலங்குகள் இருந்தாலும் அதனை அழிக்க ஆயுதங்களையும் வைத்துள்ளான்.

மேலும் தொழில்நுட்ப என்ற பெயரில் நாட்டின் இயற்கை வளங்களையும் அழித்து வருகிறான். கம்ப்யூட்டர், ரோபோட் முதல் செல்போன்களை வரையும் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான்.

செல்போன் கதிர் வீச்சுக்களால் பல்லாயிரக்கணக்கான பறவை இனமும் அழிந்து வருகிறது.

ஒரு நாள் மனிதனை மிஞ்சும் ஒரு ராட்சச பறவை வந்தால் என்னாகும்? அது மனிதர்களை எப்படி அழிக்கும்.

ஒருவேளை அதற்கும் மனிதன் எதையாவது கண்டு பிடித்து அதை அழித்தால் என்னாகும்?

மனிதனுக்கும் அந்த ராட்ச பறவைக்கும் நடக்கும் யுத்தமே 2.0 படத்தின் மையக்கரு.

கதைக்களம்…

நாம் நடந்து செல்ல, பயணம் செல்ல சாலைகளில் வழிகாட்டிகள் இருப்பதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஆகாயத்தில் பறக்கும் பறவைகளுக்கு எந்த வழிகாட்டலும் இல்லை. ஆனாலும் அவை சரியாகவே பயணிக்கிறது.

தற்போது நவீன தொழில்நுட்பத்தாலும் செல்போன் டவர்களாலும் அதில் எழும் ரேடியசன்ஸால் பறவைகளின் திசை மாறி பறக்கிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

சிட்டுக் குருவி இனமே அழிந்து போகிறது.

எனவே பறவை இனத்தை காக்க ஐந்தாம் திசை பூமிக்கு வருகிறது. (நெகட்டிவ் வைப்ரேசன்ஸ்)

இதனால் சிட்டி ரோபோவை மீண்டும் கொண்டு வருகிறார் சயின்டிஸ்ட் வசீகரன். அந்த பயங்கர சக்தியை அழிக்க முயற்சிக்கிறார்கள்.

அதன் பின்னர் 2 சக்திகளுக்கும் பனிப்போர் நடக்கிறது.

செல்போன்களிடமிருந்து அந்த ராட்ச்ச பறவை தன் இனத்தை எப்படி காக்கிறது..? மனிதர்கள் என்ன செய்தார்கள்? மனிதர்களுக்கு ரோபோ எப்படி உதவியது..? இதுவே 2.0 படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்….

ஒரு ரஜினி என்றாலே நம் மகிழ்ச்சிக்கு அளவு இருக்காது. இதில் குறிப்பிட்டு 4 ரஜினிகள் உள்ளனர்.

இது தவிர எத்தனை ரோபோ ரஜினிக்கள் என கணக்கிட முடியாது.

ஒவ்வொரு ரஜினியும் ஒவ்வொரு வகை. ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார் ரஜினி. குக்கூ என்று இவர் சொன்னால் அதுவே தனி ரகம்தான்.

ரெட் சிப் சிட்டி ரோபோ வந்த பிறகு படம் வேற லெவலில் எகிறுகிறது. பறவை மாதிரி பறக்கும் ஸ்டைலை ரோபோ காட்டும் அழகே தனி அழகுதான்.

அக்‌ஷய்குமார் கேரக்டர் தான் படத்தின் ஆணிவேர். பறவை இனத்துக்காக இவர் படும் பாடு நம்மை அழ வைக்கும்.

நம்மை அறியாமல் நாம் பறவை இனத்துக்கு எப்படி எல்லாம் தீங்கு இழைக்கிறோம் என்பதை உணர வைத்துள்ளார். இவரே வில்லனாக மாறி மாறி வரும்போது அதை காண ஆயிரம் கண் வேண்டும்.

ப்யூட்டிப்புல் ரோபோ எமி ஜாக்சன். நிலா கேரக்டரில் நெஞ்சில் நிறைகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஏஆர். ரஹ்மானின் இசையில் ராஜாளி பாடல் அதிரடி. இந்திரலோகத்து சுந்தரி என்ஜாய் ரகம். புல்லிநங்கால் பாடல் பூரிப்பு.

பின்னணி இசையில் மிரள வைத்துள்ளார். ரோபோக்கள் & பக்‌ஷி சண்டை காட்சிகள் பட்டைய கிளப்பும்.

இந்திய சினிமாவுக்கு தமிழ் சினிமா தந்த பொக்கிஷம் ஷங்கர்.

செல்போன்கள் மாயமாவது முதல் தன் அதிரடியை அரங்கேற்றியுள்ளார். இது அக்மார்க் ஷங்கர் படம்.

கிராபிக்ஸ் கிங் என்பதை நிரூபித்து உள்ளார் ஷங்கர்.

2.0 ஹாலிவுட்டுக்கு சவால்

2pointO movie review and rating

செயல் மிகக்குறைவு… செய் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: நகுல், நாசர், பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய், ஞ்சால் முஞ்சால் மற்றும் பலர்.
இயக்கம் – ராஜ்பாபு
இசை – நிக்ஸ் லோபஸ்
ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன்
தயாரிப்பு – ட்ரிப்பி டர்ட்டில்
பிஆர்ஓ. – யுவராஜ்

கதைக்களம்…

படத்தின் ஆரம்பத்தில் ஒரு மனநல காப்பகம் தீப்பற்றி எரிகிறது. இந்த தீ விபத்துக்கு அமைச்சர் தலைவாசல் விஜய் தான் காரணம் என அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர்.

அமைச்சரின் உதவியாளரும் பத்திரிகையாளருமான அஸ்கர் அலியிடம் இது தொடர்பாக ஒரு வீடியோ ஆதாரம் இருக்கிறது.

வீடியோ ஆதாரத்தை கைப்பற்றும் முயற்சியில் இருவரையும் வில்லன் கும்பல் கொலை செய்துவிடுகிறது.

இது ஒரு புறம் இருக்க. மற்றொரு சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு அலைகிறார் நகுல். விளம்பரங்கள் செய்து தன்னை அந்த ஏரியாவில் பில்டப் ஆசாமியாக காட்டிக் கொள்கிறார்.

இவரின் குறும்பு தனத்தால் இவரை நாயகி ஆஞ்சல் முஞ்சால் காதலிக்க ஆரம்பிக்கிறார். இதனால் ஒழுங்கா வேலை போக சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் மனநல காப்பக தீ விபத்துக்கும் நகுலுக்கும் ஒரு கனெக்சன் ஏற்படுகிறது. அது என்ன?

அந்த வீடியோ ஆதாரத்தை நகுல் என்ன செய்தார்? அவர் செஞ்சி முடிச்சாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வழக்கமாக தன்னை துறுதுறு காட்டிக் கொள்ளும் நகுல் இதிலும் அதையே செய்துள்ளார். ஆனால் இதில் கொஞ்சம் ஓவராகவே காட்டிக் கொண்டுள்ளார்.

ஆம்புலன்சில் ஒரு பிணம் இருக்கும்போது அவர் செய்யும் ஓவர் ஆக்டிங் எல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை. எந்தவொரு மனிதனாக இருந்தாலும் அந்த நேரத்தில் அப்படி எல்லாம் நடந்துக் கொள்ள மாட்டார்கள்.

நாசர் படத்தில் என்ன வேலை என்றே தெரியவில்லை. லாரியில் அடிப்பட்டு சாகிறார். அவரின் கேரக்டரை நாசம் செய்து விட்டார் டைரக்டர்.

பிரகாஷ்ராஜ் படத்தில் சின்ன வேடத்தில் வந்துவிட்டார். அவரின் கேரக்டரிலும் வலுவில்லை. பயங்கர பில்டப் இன்ட்ரோ வேற அவருக்கு.

நாயகி ஆஞ்சல் முஞ்சால் நம்மை கவரை முயற்சித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்றி, பின்னர் வேகம் குறைத்து, இண்டர்வெல்லில் வேகம் ஏற்றி, பின்னர் வேகம் குறைத்து நம்மை சோதித்து விட்டார் இயக்குனர் ராஜ் பாபு.

உடல் உறுப்பு தானத்தையும் அதன் பின்னணியில் நடைபெறும் கடத்தலையும் அருமையாக சொல்ல முயற்சித்துள்ளார். அதற்காக மனநல காப்பகத்தையும் அவர் பயன்படுத்தியுள்ள விதம் அருமை. ஆனால் அதை திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி சொல்லிருந்தால் இன்னும் செமயாய் செஞ்சி முடிச்சிருக்கலாம்.

நிக்ஸ் லோபஸின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளது. தேவையில்லாத பாடல்கள் நிச்சயம் ரசிகர்களை சோதிக்கும்.

விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு காட்சிகள் ரசிக்கும் ரகமே.

செய்.. செயல் மிகக்குறைவு

உத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: உதயா, பிரபு, ஸ்ரீமன், கோவை சரளா, குட்டி பத்மினி, எம்எஸ். பாஸ்கர், ஆடம்ஸ் மற்றும் பலர்.
இயக்கம் – ஆஷிப் குரேஷி
இசை – நரேன் பாலகுமார்
ஒளிப்பதிவு – பாலாஜி ரங்கா
தயாரிப்பு – உதயா
பிஆர்ஓ. – நிகில் முருகன்

கதைக்களம்…

சிறுவயது முதலே கோட் சூட் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர் உதயா. ஆனால் இவருடைய ஏழ்மையால் அது கிடைக்காமல் போகிறது.

எனவே நிறைய சம்பாதித்து கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து மிகப்பெரிய கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்துக் கொண்டே வளர்கிறார்.

இவர் அடிக்கடி இவரை பற்றி பில்டப் கொடுப்பதால் இவரை நண்பர்கள் கூட நம்புவது கிடையாது. ஆனால் இவரை ஒரு நாயகி சின்சியராக காதலிக்கிறார்.

ஒரு நாள் இவர் ஓவர் மப்பில் எங்கோ சென்று படுத்து உறங்கி விடுகிறார். இவர் ஒரு நாள் மட்டும் எங்கோ சென்றதாக நினைக்கிறார். ஆனால் இவரின் நண்பர்கள் 30 நாட்கள் இவரை காணாமல் தேடுகின்றனர்.

அப்படியிருந்தால் தான் 30 நாட்கள் வரை எங்கிருந்தேன்.? தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது புரியாமல் குழம்பி போகிறார்.

இவரை அறியாமல் இவருக்குள் ஒரு ஓசை கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த கட்டளைகளை இவர் செய்யவிட்டால் இவரை டார்ச்சர் செய்கிறது.

அதன்படி இவர் உத்தரவு மகாராஜா… உத்தரவு மகாராஜா என செய்துக் கொண்டே இருக்கிறார்.

அப்படியென்றால் தன் மூளைக்குள் என்ன நடக்கிறது? என்ன ஆனது? என்பதை புரியாமல் தவிக்கிறார்.

ஒரு மருத்துவ பரிசோதனையில் அதில் ஒரு மைக்ரோ சிப் இருப்பது தெரிய வருகிறது, அப்படி என்றால் இவரை இயக்குவது யார்? அவரின் நோக்கம் என்ன? இதனால் அவர் அடையும் லாபம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் முதல் பாதிவரை நமக்கே பைத்தியம் பிடித்துவிடும் என்கிற அளவுக்கு ஒரு குழப்பக்காரனாய் உதயா அசத்தியுள்ளார்.

சில காட்சிகள் அது ஓவராய் தெரிந்தாலும் அந்த கேரக்டருக்கு அப்படியான ஒரு நடிப்பு தேவை என்பதை 2ஆம் பாதியில் உணர்த்தியுள்ளார் டைரக்டர்.

இப்படத்தை உதயாவே தயாரித்து நடித்துள்ளார். இதுநாள் வரை வெறுமனே வந்து செல்லும் கேரக்டர்களில் வந்திருந்தாலும் அதை எல்லாம் சேர்த்து வைத்து இதில் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

உதயாவுக்கு ஒரு கேரக்டர்தான் என்றாலும் 3 கட்டங்களில் வருவதால் 3 நாயகிகள் உள்ளனர். ஒரு நாயகியின் கேரக்டர் இவருக்கு தொடர்பு இல்லாமல் பிரபு உடன் பயணிக்கிறது.

விண்வெளிக்கு செல்ல ஆசைப்படும் அந்த ப்ரெண்ட் கேரக்டர் நாயகி நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். டிரைவர் ப்ளாக்பேக்கில் வரும் ஹீரோயினும் நல்ல தேர்வு.

இதில் 2வது ஹீரோ ரேஞ்சுக்கு நடித்திருக்கிறார் பிரபு. டாக்டராகவும் போட்டோகிராபராகவும் என கச்சிதம்.

ஆனால் அந்த இளம் பெண் உடன் நட்பில் அழுத்தம் இல்லாத காரணத்தால் ப்ளாஷ்பேக் காட்சிகள் சுவாரஸ்யம் இல்லை.

நடிகர் சங்கத்தில் தனக்கு நன்கு பரிட்சயமான நடிகர்களை இதில் அதிகளவில் நடிக்க வைத்துள்ளார் உதயா.
காவல்துறை அதிகாரிகளாக கோவை சரளா, ஸ்ரீமன் நடித்துள்ளனர். காமெடிதான் எடுபடவில்லை.

எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி நல்ல தேர்வு. குட்டி பத்மினிக்கு அந்த லோக்கல் குரல் கொடுத்தவர் யாரோ? இவருக்கு பொருத்தமாக இல்லை.

நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல்.

பிரபு பாடும் அந்த பாடல் நன்றாக இருந்தாலும் அந்த நாயகி மீது பிரபு கொண்ட நட்பு நம்பும் படியாக இல்லை. குறுகிய காலத்தில் அப்படியொரு நட்பில் அழுத்தம் இல்லை. பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

உதயா பைத்தியம் பிடித்து ஓடும் காட்சிகளில் பின்னால் வரும் குதிரைகள் கிராபிக்ஸ் ரசிக்கும்படி உள்ளது.

முதல் பாதியில் கதை கடுப்பாக ஆனாலும் 2ஆம் பாதியில் அதை சரி செய்து நமக்கு புரிய வைத்துள்ளார் டைரக்டர் ஆஷிப் குரேஷி.

தாம் பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு தவறு செய்தால், அதன் விளைவு நம்மை என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு வழியில்பாதிக்கும் என ஆணித்தரமாக சொன்ன குரேஷிக்கு ஒரு பொக்கே கொடுக்கலாம்.

வித்தியாசமான கதைக்களம் இருந்தும் ஒரு வலுவில்லாத நட்புக்காக இந்த பழிவாங்கல் இந்த கதை பயணிப்பதுதான் நம்பும் படியாக இல்லை.

கோடீஸ்வரான இருக்கும் உதயா உடையில் கூட கஞ்சத்தனம் செய்வது ஏன்? கோடீஸ்வரனாக அவரை காட்டியிருக்கலாமே. அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு அவர் என்ஜாய் கூட செய்யவில்லையே.

உத்தமராஜா… உத்தரவு மகாராஜா

Utharavu Maharaja review

More Articles
Follows