தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்..
10 வயது சிறுமி செம்பி கற்பழிக்கப்பட குற்றவாளிகளுக்கு போக்சோ சட்டத்தில் தண்டனை கிடைக்க போராடும் ஒரு பாட்டியின் கதை.
கதைக்களம்…
கொடைக்கானலில் உள்ள புலியூர் என்ற காட்டுப்பகுதியில் 10 வயது சிறுமி செம்பி வசிக்கிறாள்.. தாய் தந்தையை இழந்த இவளுக்கு பாட்டி கோவை சரளாதான் உலகமே.
ஒரு நாள் மலைத்தேன் எடுத்துக் கொண்டு காட்டுப்பகுதியில் செம்பி செல்ல அங்கு 3 பணக்கார இளைஞர்களால் கற்பழிக்கப்படுகிறார்.
இதனால் காவல்துறையில் புகாரளித்து குற்றவாளிகளை கைது செய்ய சொல்கிறார் கோவை சரளா.
ஆனால் காவல்துறையோ அந்த கயவர்களுக்கு துணை போகிறது. இதனால் காவலரை அடித்து துவம்சம் செய்துவிட்டு ஒரு பஸ்ஸில் தன் பேத்தி செம்பியுடன் தப்பித்து செல்கிறார் கோவை சரளா.
அந்த பஸ்ஸில் சகப் பயணிகளில் ஒருவராக வழக்கறிஞர் அஸ்வின் மற்றும் கண்டக்டர் தம்பி ராமையா பயணிக்கின்றனர்.
காவல் அதிகாரியை அடித்த குற்றத்திற்காக கோவை சரளாவை போலீஸ் தேடுகிறது.
ஒரு கட்டத்தில் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு கோவை சரளா யார் என்ற பின்னணி தெரிகிறது.
அதன் பிறகு என்ன ஆனது? மக்கள் யார் பக்கம்? செம்பியை கற்பழித்தவர்களுக்கு துணை போனார்களா.? அராஜக போலீசை அடித்த கோவை சரளாவுக்கு துணை நின்றார்களா.? நீதி யார் பக்கம் நின்றது என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
கேரக்டர்கள்…
ஒட்டு மொத்த படத்தையும் ஒரே ஆளாக தோளில் சுமந்திருக்கிறார் கோவை சரளா. பேத்தி மீது பாசம் காட்டுவதாகட்டும்.. நீதிக்கு போராடி போலீசை எதிர்த்துப் பேசுவதாகட்டும்.. கற்பழிப்பை கண்ணீர் கதற சொல்லும் காட்சி ஆகட்டும் என ஒவ்வொரு பிரேமிலும் கோவை சரளா தன் நடிப்பில் மிரள வைத்துள்ளார்.
இந்த படத்திற்கு சரளாவுக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
செம்பியாக நடித்துள்ள 10 வயது சிறுமி செல்ல குழந்தை. பாதிக்கப்பட்ட பின் அவரை பார்க்கும் போது நம் கண்களில் கண்ணீர் வரும்.
பஸ்ஸில் பயணத்தின் போது ஒரு வயதான பெண்மணி கற்பழிப்பு சம்பவத்தை எதிர்த்து போராடும் போராளிகளுக்காக உணவு சமைப்பதாக சொல்லும் காட்சிகள் நிச்சயம் கண்கலங்க வைக்கும்.
அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அஸ்வின் குமார்.. சில நேரம் காமெடி செய்து சில நேரம் கடுப்பேத்துகிறார் தம்பி ராமையா.
இவர்களுடன் பணக்கார திமிர் பிடித்த இளைஞர்கள் மூணு பேர்
& நாஞ்சில் சம்பத் ஆகியோரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
முக்கியமாக போலீஸ் அதிகாரிகள் & நாஞ்சில் சம்பத் வழக்கறிஞரும் கவனிக்க வைக்கிறார்.
பஸ்ஸில் பயணிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.. அது நம் மக்களின் மனநிலையை காட்டுகிறது..
டெக்னீசியன்கள்…
செம்பி படத்தை செழிப்பாக காட்டி கண்களுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜீவன்.
மலைப்பகுதி காட்சிகளை ஜீவனாக காட்டி ரசிக்க வைக்கிறார். குடுவையில் தேன் ஒழுகும் காட்சிகள் கூட சிறப்பு.
தான் கற்பழிக்கப்பட்டோம் என்பதை கூட உணராமல் குடுவை உடைந்து விட்டது என்ற சிறுமி செம்பி கூறும் போது கோவை சரளாவுடன் சேர்ந்து நமக்கும் கண்ணீர்..
காட்டுக்குள் கோவை சரளா ஓடிச் செல்லும் காட்சிகள் நம்மை பதைபதைக்க வைக்கிறது. படத்தின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை பாராட்டும்படியாக உள்ளது.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.. எடிட்டிங் பணிகளை புவன் மேற்கொண்டுள்ளார்.
வழக்கமான பிரபு சாலமன் பட பாணிதான்… ஆனால் இதில் சிறுமி கற்பழிப்பு.. போக்சோ சட்டம் விழிப்புணர்வு.. மக்கள் அரண் என வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் அந்த காட்டுப் பகுதியை விட்டு என்றுதான் நாட்டிற்கு வருவாரோ பிரபு சாலமன் தெரியவில்லை.?
முக்கியமாக பஸ் பயணக் காட்சிகள் நமக்கு மைனா படத்தையே நினைவுப்படுத்துகின்றன.
ரவீந்திரன் படத்தை தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.. இந்த படம் நாளை டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது..
ஆக இந்த செம்பி… செது(சிதை)க்கப்பட்டவள்..
Sembi movie review and rating in tamil