மெட்ரோ (2016) விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிரிஷ், பாபி சிம்ஹா, மாயா, சென்ட்ராயன், துளசி, யோகி பாபு மற்றும் பலர்.
இசை : ஜோஹன்
ஒளிப்பதிவு : என் எஸ் உதயகுமார்
படத்தொகுப்பு : எம். ரமேஷ் பாரதி
இயக்கம் : ஆனந்த கிருஷ்ணன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : E5 Entertainments, Metro Productions

கதைக்களம்…

மெட்ரோ சிட்டியில் வாழும் சத்யா ஒரு காலேஜ் ஸ்டூடண்ட். இவருடன் படிக்கும் ஒரு மாணவியை காதலிக்கிறார்.

ஒரு சூழ்நிலையில், தன் நினைத்ததை எல்லாம் அடைய, தன் பேராசையால் செயின் பறிப்பில் ஈடுப்படுகிறார்.

அதன்பின்னர் அவரது குடும்பம் என்ன ஆனது? பேராசை அவரை நிம்மதியாக வாழவிட்டதா? என்பதே இந்த மெட்ரோ.

கதாபாத்திரங்கள்..

அண்ணன் சிரிஷ்தான் படத்தின் நாயகன். படு ஸ்மார்ட். அம்மாவை கொலை செய்தவர்களையும், செயின் திருடர்களையும் ஒவ்வொருவராக தேடி பிடிப்பதும், கொல்வதும் செம.

படம் சீரியஸ் படம் என்பதால் கடைசி நிமிடம் வரை அப்படிதான் இருக்கிறார். அழகான காதலி மாயா இருந்தும் இவர் மயங்கவில்லை.

சிரிஷின் தம்பியா சத்யா. திருடன் என்றே சொல்லமுடியாத அளவிற்கு அப்பாவியான முகம். பொருத்தமான தேர்வு.

இவரின் பேராசையால் வில்லன் பாபி சிம்ஹாவுக்கே ஆப்பு அடிப்பது காட்சிகள் சூப்பர்.
அதுவும் இடைவேளை காட்சியில் போலீஸையும் விட்டு வைக்காமல் கொள்ளை அடிப்பது அப்ளாஸை அள்ளுகிறது.

ஹீரோவானாலும் இன்னும் அந்த வில்லத்தனம் பாபி சிம்ஹாவிடம் பாக்கியிருக்கிறது.

திருடுவதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது நிஜத்திருடர்களுக்கு ஒரு பாடம். நமக்கும் ஒரு எச்சரிக்கைதான்.

இதில் ஹீரோயின் மாயாவுக்கு வேலையில்லை. சென்ட்ராயன் நல்லவனாக நடித்து, நமக்கு புதுவிதமான அனுபவம் கொடுத்துள்ளார்.

யோகிபாபு வரும் அந்த ஒரு காட்சியிலேயே கேரி ஆன் ப்ரோ. என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

சிரிஷின் பெற்றோர்கள் நல்ல தேர்வு. துளசி கடைசியில் அழவைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களை விட ஜோஹனின் பின்னணி இசை படத்திற்கு பலம்.
என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவில் செயின் பறிக்கும் காட்சிகள் நம் மனதையும் பறிக்கிறது.
எங்கும் சலிப்பு தட்டாத ரமேஷ் பாரதியின் அருமையான எடிட்டிங்.

படத்தின் ப்ளஸ்…

  • ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பு.
  • பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு

படத்தின் மைனஸ்…

  • அம்மாவை இழந்த பின் சிரிஷ் சீரியஸ் ஆக இருக்கலாம். ஆனால் ஜாலியான குடும்பம் என்று கூறும் இவர் படு சீரியஸாகவே வருகிறார்.
  • துளசியை கொலை செய்தவர்களின் ரேகையை போலீஸ் எடுக்கிறது. ஆனால் அதன்பின்னர் என்ன ஆனது? என்பதற்கு பதில் இல்லை.

இதுவரை நாம் பார்க்காத களத்தை எடுத்து, அதில் வேரின் ஆழம் வரை சென்ற இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவை அவ்வளவு பாராட்டலாம்.

வெறும் வழிப்பறியை காட்டாமல் அதற்கான ஸ்கெட்ச் உள்ளிட்டவைகளை சொல்லி, அனைவருக்கும் விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார்.

இதுபோன்ற செயின் திருடர்களை விடக்கூடாது என ஆடியன்சே சொல்லுமளவுக்கு காட்சிகளில் பலம் சேர்த்திருக்கிறார் ஆனந்த கிருஷ்ணன்.

இது சிட்டி மக்களுக்கு மட்டுமில்லை. எப்போதாவது சிட்டிக்கு வந்து செல்லும் மற்றவர்களுக்கும் ஒரு பாடம்தான்.

சென்சார் தடை செய்த இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பது நல்லது.

மொத்தத்தில் மெட்ரோ… சிட்டியில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை..!

அம்மா கணக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி, பேபி யுவஸ்ரீ, மாளவிக்கா, விஷால் தேவ், விக்கி மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : கவேமிக் யு அரி
படத்தொகுப்பு : ராஜா முகம்மது
இயக்கம் : அஸ்வின் ஐயர் திவாரி
பிஆர்ஓ : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பாளர் : தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய்.

கதைக்களம்…

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி யுவஸ்ரீ படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறார். முக்கியமாக கணக்கு பாடத்தில் பூஜ்யம்தான் எடுப்பதால் இவளது அம்மா அமலா பால் கவலைப்படுகிறார்.

ரேவதி வீட்டில் அனைத்தும் வேலைகளை செய்யும் இவர், ரேவதியிடம், மகளை நன்றாக படிக்க வைக்க ஐடியா கேட்கிறார்.

 

 

அவர் சொன்னப்படியே அமலா பால் அவதாரம் எடுத்து தன் மகளை கலெக்டராக்குகிறார். என்ன செய்தார்? எப்படி அவரது மகள் படித்தார் என்பதே இந்த அம்மா கணக்கு.

கதாபாத்திரங்கள்…

படத்தின் ஹீரோ ஹீரோயின் எல்லாம் அமலா பால்தான். ஹோட்டலில் பத்து பாத்திரம் தேய்ப்பதும், ரேவதிக்கு அனைத்து பணிவிடைகளை செய்வதும், மீன் மார்க்கெட்டில் வேலை செய்வதும் என கவர்கிறார்.

காலையில் தொடங்கும் இவரது பணிகள் இரவு வரை நீள்வதும் பார்ப்பவரை மனதை கொஞ்சம் வருத்தமடைய செய்யும்.

 

 

சமுத்திரக்கனியிடம் அட்மிஷன் கேட்பது, கலெக்டரிடம் பேசுவது என அசத்தினாலும் மகளுக்காக ஸ்கூல் யூனிபார்ம் மாட்டிக் கொண்டு செல்வது எல்லாம் கொஞசம் ஓவர்தான்.

இதில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. எப்போதும் இல்லாமல் மிடுக்கான பிரின்சிபாலாக வந்தாலும் பாடத்தில் அசத்துவது ரசிக்கலாம்.

பெற்றோரின் வலியை புரிந்துக் கொள்ளாமல், அம்மாவை திட்டுவதும், கேவலப்படுத்துவம், அசிங்கமாக பேசுவதும் இன்றைய அலட்சியமான குழந்தைகளை (ஒரு சிலரை) அடையாளப்படுத்தியிருக்கிறார் யுவஸ்ரீ.

 

 

யுவஸ்ரீ நடிப்பில் நல்ல மெச்சூர்ட்டிக்கு இருக்கிறது. இறுதியில் அம்மாவின் கனவை பற்றி பேசி கலங்க வைக்கிறார்.

ரேவதிக்கு பெரிதாக வேலையில்லை. மற்றவர்களுக்கும் அதே நிலைமைதான். ஒரு சில மாணவர்கள் கவனம் ஈர்க்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவின் பின்னணி இசை படம் முழுக்க பேச வைக்கிறது. உனக்கும் எனக்கும், கனவுகள், இந்த வாழ்க்கை பாடல்கள் கேட்கலாம்.

அரசுப்பள்ளி என்பதாலும் மற்ற காட்சியிலும் படம் முழுவதும் ஒரு இருட்டான சூழ்நிலையே காணப்படுகிறது. கவேமிக் யு அரியின் ஒளிப்பதிவில் இரவு காட்சிகள் ஓகே.

 

 

எடிட்டிங்கை ராஜா முகம்மது சரியாக செய்திருந்தாலும் இறுதிகாட்சியில் எல்லாம் திடீரென முடிவது மனதில் ஒட்டவில்லை.

படத்தின் ப்ளஸ்….

  • பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேறு வழியில் முயற்சித்திருக்கிறார்கள்.

 

 

  • கணவன் இல்லாத பெண்கள் படும் அவஸ்தைகளை காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார்கள்.
  • பின்னணி இசையில் உயிர் கொடுத்துள்ளார் இசைஞானி.

படத்தின் மைனஸ்…

  • யுவஸ்ரீக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. அவர் படிக்கவில்லை என்பது அவரது திமிர். ஆனால் அமலா பள்ளியில் படிக்க செல்வது எப்படி சாத்தியம்? அதுவும் திடீரென கணக்கு பாடத்தில் 52 மார்க் எப்படி?

 

 

  • நாங்க படிக்கிறப்ப எல்லாம் பாய்ஸ் கேர்ள்ஸ் ஒரே பெஞ்சில உட்கார விடமாட்டாங்க. இப்போ மாத்திட்டாங்களா என்ன? அரசுப்பள்ளியில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருப்பது எப்படி??
  • ஏழ்மையாக இருக்கிறார் அமலாபால். ஆனால் அவரது முகத்தில் வசதியான கலையம்சம் உள்ளதே. அதுகூட ஓகே. வீடே மிடில் கிளாஸ் போல்தான் தோன்றுகிறது.

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் காட்சியும் படமாக்கலும் ஓகே. ஆனால் நிறைய லாஜிக் மீறல் உள்ளதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

மொத்தத்தில் அம்மா கணக்கு… பெண்களுக்கான எனர்ஜி..!

ராஜா மந்திரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கலையரசன்-ஷாலின், காளி வெங்கட்-வைஷாலி, பாலசரவணன், நாடோடிகள் கோபால், ஜெயந்தி, சரவணசக்தி மற்றும் பலர்.
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : பிஜி முத்தையா
படத்தொகுப்பு : ஆர் கே செல்வா
இயக்கம் : உஷா கிருஷ்ணன்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : மதியழகன், ரம்யா, பிஜி முத்தையா

கதைக்களம்…

காளிவெங்கட் மற்றும் கலையரசன் இருவரும் அண்ணன்-தம்பி. காளி வெங்கட் வைஷாலியை காதலிக்க, கலையரசன் ஷாலின் ஸோயாவை காதலிக்கிறார்.

அண்ணன் தம்பி இருவரும் காதலை வெளியில் சொல்லாமல் மறைத்து வாழ்கின்றனர். ஒரு சூழ்நிலையில் காளியின் காதல் சில பிரச்சினைகளால் முறிந்து போகிறது.

 

 

எனவே காளிக்கு வேறு ஒரு பெண்னை பார்க்க குடும்பத்துடன் செல்ல, அங்கே பெண்ணாக வந்து நிற்கும் நாயகியால் இவர்களின் வாழ்வில் பெரும் பிரச்சினை எழுகிறது.

அதன்பின்னர் இவர்களின் காதல் என்னவானது? என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

இதில் தனி நாயகனாக களம் இறங்கியிருக்கிறார் கலையரசன். பெயருக்கு ஏற்ற போல், காட்சிகளில் கவர்கிறார்.

காதலியுடன் ரொமான்ஸ் செய்வதும், அண்ணனுக்காக காதலை உதற நினைப்பதும், காதலிக்காக ரிஸ்க் எடுப்பதும் என ரசிக்க வைக்கிறார்.

அண்ணன் காதலியிடம் ஆங்கிலம் பேசி அவரை வெறுப்பேற்றுவது ரசிக்க வைக்கும் ரகம்.

வெறும் காமெடியனாகவே பார்த்து வந்த காளிவெங்கட்டை இதில் ஒரு சிறந்த நடிகராக பார்க்கலாம். கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

 

 

ஒவ்வொரு பெண்ணாக தட்டிக் கொண்டு போக, இந்த திருமணமாவது நடக்குமா? என் ஏங்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.

தம்பியிடம் செல்லமாக சண்டை போடுவதும், பின்னர் கூடுவதும் குடும்பத்து உறவுகளை இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும்.

பாலசரவணனுக்கு காட்சிகள்தான் குறைவு. காமெடியோ அப்ளாஸ். கிடைக்கும் சின்ன சின்ன கேப்பில் எல்லாம் கிடா வெட்டுகிறார் மனிதர்.

 

 

காலி ப்ளவர் வைஷாலிக்கு இருக்கமான காட்சிகள்தான் அதிகம். ஆனால் அமைதியான முகம் கொண்டு வசீகரிக்கிறார்.

ஷாலின் அறிமுக காட்சிமுதல் க்ளைமாக்ஸ் வரை ரசிக்க வைக்கிறார்.

நான் உன் ஆளு அவன்கிட்ட சொல்லுவ. என்கிட்ட சொல்லமாட்டியா? என கேட்கும் காட்சிகளில் ரசிகைகளையும் கவர்கிறார்.

திருமணத்தை நிறுத்த கேட்பதும், இறுதியில் முடியாமல் அழுவதும் ரசிக்கும் ரகம். ஆனால் முடியல்லனா வேறு ஒரு திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வது டேக் இட் ஈசி காதல் பாலிசிதான் போல.

 

 

ஹீரோக்களின் பெற்றோராக நாடோடிகள் கோபாலும் ஜெயந்தியும், கிராமத்து அம்மா அப்பாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

குடிகார சித்தப்பாவாக சரவண சக்தி. சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

முத்தையாவின் ஒளிப்பதிவில் அந்த ஆரம்ப காட்சி அழகு. நீண்ட நெடுஞ்சாலை. இரண்டு பக்கமும் தென்னை மரம். அதன்பின்னர் வயல் என பசுமையாக படம் பிடித்திருக்கிறார்.

கிராமத்து வீடுகளையும் அதன் பின்னணியையும் காட்சிகளில் கொடுத்து கிராமத்து மண் வாசனையை உணர்த்தியிருக்கிறார்.

 

 

காலி ப்ளவர் என்ற ஒரு பாட்டிலையே நம்மை காலி செய்துவிடுகிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். லெகுவா பாடலும் ரசிக்க வைக்கிறது.

தனி ஒருவன் படத்தில் கலக்கிய ரெம்போன் பால்ராஜ்தான் கலை. குறை வைக்காமல் யார் என்று கேட்க வைக்கிறார்.?

படத்தின் ப்ளஸ்…

  • உஷா கிருஷ்ணனின் திரைக்கதை.
  • ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு

 

 

  • இடைவேளையில் ட்விஸ்ட் கொடுத்திருப்பது அருமை.

படத்தின் மைனஸ்….

  • வைஷாலிக்கு காளி மீது காதல் எப்படி? என்ற காட்சியில் அழுத்தமில்லை.
  • க்ளைமாக்ஸ் காட்சிப்படுத்தலில் இயக்குனர் கொஞ்சம் தடுமாறிய உணர்வு.

 

 

அறிமுக இயக்குனர் என்பதே தெரியாமல் அசத்தல் திரைக்கதையில் உஷா கிருஷ்ணன் கைத்தட்டல் பெறுகிறார்.

குடும்பம், நட்பு, சென்டிமெண்ட், காமெடி, திரைக்கதை என அனைத்திலும் தன்னால் பளிச்சிட முடியும் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்துவிட்டார் உஷா . சபாஷ்.

மொத்தத்தில் ராஜா மந்திரி… ரசிகர்களுக்கு பிடிச்ச முந்திரி..!

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜிவி பிரகாஷ், ஆனந்தி, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், சரவணன், கருணாஸ், யோகி பாபு, நிரோஷா மற்றும் பலர்.
இசை : ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : சாம் ஆண்டன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : லைகா நிறுவனம் சுபாஷ்கரன்

கதைக்களம்…

சென்னையிலுள்ள ராயபுரம் ஏரியாவை தன் கைக்குள் வைத்திருப்பவர் நைனா.

இவருக்கு வயது ஆகிவிட்டதால், தன் மகளை கட்டிக்கப் போகும் மாப்பிள்ளையை அடுத்த நைனாவாக ஆக்கிவிடலாம் என நினைக்கிறார்.

 

 

இதற்காக உங்களில் யார் அடுத்த நைனா? என்ற ரேஞ்சுக்கு போட்டி எல்லாம் நடைபெறுகிறது.

ஒரு சூழ்நிலையில் பயந்த சுபாவம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் இவரது மாப்பிள்ளையாக ஆகிறார். அதன்பின்னர் என்ன நடந்தது? என்பதே கதை.

கதாபாத்திரங்கள்…

ஜி.வி. பிரகாஷ்.. இதுவரை மியூசிக் டைரக்டர், பாடகர் என வலம் வந்தவர் கூடிய விரைவில் டான்சர் ஆகிவிடுவார் என்றே தெரிகிறது. அதற்கான பிள்ளையார் சுழியை இப்படத்தில் போட்டுள்ளார்.

 

 

மற்றபடி நடிப்பில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார். ஆனால் டான் வேடத்திற்கு அவ்வளவாக பொருத்தமில்லை. பெட்டராக எதிர்பார்க்கிறோம்.

ஆனந்திக்கு பெரிதாக வேலையில்லை. கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆனந்தி ரசிகர்கள் படு அப்செட்.

சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகிய பலரும் உண்டு. இவர்கள் தங்கள் அனுபவ நடிப்பால் பாஸ் செய்து விடுகிறார்கள்.

 

 

கருணாஸ் பேசும் பாகுபலி காளகேயன் வசனங்கள் ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறது. ஹாப்பி பர்த்டே டு மீ என அறிமுகம் ஆகிறார் விடிவி கணேஷ்.

இதில் அதிகம் ஸ்கோர் செய்பவர் யோகிபாபுதான். இவர் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு 100% கியாரண்டி கொடுக்கலாம்.

சரக்கு ஓவரா போட்டு இருக்கோமோ? என்று அப்பாவியாக கேட்பது முதல் நைனாவின் நற்காலியை அட்டைய போடுவது முதல் அசத்தியிருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷின் நண்பராக வருபவருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். லொள்ளு சபா மனோகர், நிரோஷா உள்ளிட்டோரை சரியாக பயன்படுத்தவில்லை.

இவர்களுடன் பொன்னம்பலம் மற்றும் மன்சூர் அலிகானும் வந்து போகிறார்கள். எதற்காக என்பது தெரியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜி.வி. பிரகாஷின் இசையில் எம்ஜிஆரின் ரீமிக்ஸ் பாடலும் படமாக்கப்பட்ட விதமும் கண்களுக்கு நிறைவு. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பாடலை கானா பாடலாக பாடியிருக்கிறார் கானா பாலா.

 

 

மைமா பாடல் இளைஞர்களை கவரும். மற்றபடி பின்னணி இசையில் மாஸ் சேர்த்து அசத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

கிருஷ்ண வசந்தின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள், ரவுடிகள் சேசிங் ரசிக்க வைக்கிறது.

படத்தின் ப்ளஸ்…

  • நைனா வாரிசுக்கு நடத்தபடும் ஆடிசனும் யோகிபாபுவின் வர்ணனையும் செம சூப்பர். அதில் டிஆர்பி ரேட்டிங்காக அழவைப்பது அருமை.
  • மாஸ் ஹீரோவுக்கான பின்னணி இசை

படத்தின் மைனஸ்…

  • பயந்த சுபாவம் கொண்ட ஜிவி பிரகாஷ் கடைசியில் வில்லனை பன்ச் செய்வது அவர் பொருத்துக் கொண்டாலும் எங்களால் முடியல.

 

 

  • கபாலி, தெறி, கத்தி, வேதாளம், 24, ஆகிய படத்தின் வசனங்களை அதிகம் பயன்படுத்தி அவர்களது ரசிகர்களை கவர்ந்தாலும், இயக்குனருக்கு அவரது ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இளைஞர்களை கவர்வதற்காக, லாஜிக் இல்லாமல் தினிக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும்போது சலிப்பு தட்டுகிறது.

மொத்தத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு… அட இருக்கட்டுமே. அதுக்கு என்ன?

முத்தின கத்திரிக்கா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சுந்தர் சி, பூனம் பாஜ்வா, கிரண், சதீஷ், சிங்கம் புலி, விடிவி கணேஷ், ரவிமரியா, யோகி பாபு, சுமித்ரா, வைபவ் மற்றும் பலர்.
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : பானு முருகன்
படத்தொகுப்பு : என் பி ஸ்ரீகாந்த்
இயக்கம் : வேங்கட் ராகவன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : அவ்னி மூவிஸ் சுந்தர் சி

கதைக்களம்…

40 வயது ஆகியும் மனதுக்கு பிடித்த பெண் அமையும் வரை காத்திருக்கும் பிரம்மசாரி சுந்தர் சி. அரசியலில் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மனிதர் இவர்.

இவரின் காதலி பூனம் பாஜ்வா. சுந்தர் சியின் தொண்டர் மற்றும் நண்பராக சதீஷ்.

சுந்தர் சியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் அண்ணன் தம்பிகளான விடிவி கணேஷ் மற்றும் சிங்கம் புலி.

 

 

இதனிடையில் ரவிமரியாவின் மகளான பூனம் பாஜ்வாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கவும் திட்டம் தீட்டுகின்றனர்.

இந்த சதி திட்டங்களை மீறி, அரசியலிலும் காதலிலும் வென்றாரா நம்ம ஹீரோ என்பதே இந்த முத்தின கத்திரிக்கா.

கதாபாத்திரங்கள்..

இயக்குனராக இருந்த போதும் தற்போது நடிகராக இருந்தாலும் காமெடியில் கொடியை நாட்டியிருக்கிறார் சுந்தர் சி.

தன் நண்பருக்கே தெரியாமல் சதி திட்டம் தீட்டுவதில் கில்லாடி இவர். கூடவே அம்மா சென்டிமெண்ட், ஓவர் ஏஜ் லவ்ஸ் என அனைத்திலும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

 

 

பூனம் பாஜ்வா… நாயகன் கத்திரிக்கா என்றால் இவர் கவர்ச்சிக்கா. புடவையிலும் வந்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். பாடல் காட்சியில் நனைந்து நம்மை சூடேற்றி செல்கிறார்.

இவருடன் ஜெமினி புகழ் கிரனும் மாப்பிள்ளை மீது ஜொள்ளு விட்டு ரசிக்க வைக்கிறார்.

கிராமத்து வேடம் என்றாலும் அதிலும் தன்னால் நிரூபிக்க முடியும் என புகுந்து விளையாடியிருக்கிறார் சதீஷ். படத்தை தன் காமெடியால் கலகலப்பாக்கி இருக்கிறார்.

விடிவி கணேஷின் டைமிங் சென்ஸ் செம. இவரது வாய்ஸே இவரது பலம். என்னைய பாத்து அஜித் சொன்ன முதல் ஆளு நீதான் என்று சொல்லும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

 

சிங்கம்புலியும் படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பாக்கியிருக்கிறார். யோகிபாபு இரண்டே காட்சிகளில் வந்தாலும் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்.

ரவிமரியா இதில் காமெடிக்கு குறைவைத்து, போலீசாக வருகிறார். வைபவ் கெஸ்ட் ரோலில் வந்து போகிறார்.

இவர்களுடன் சுமித்ரா மற்றும் சுந்தர் சியின் தம்பி, தங்கை, அண்ணி ஆகியோர் சிறப்பான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பானு முருகனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. முக்கியமாக நாயகியின் அசைவுகள்.

படத்தின் ப்ளஸ்…

சதீஷ் + விடிவி கணேஷின் டைமிங் சென்ஸ் காமெடி படத்தின் கேரக்டர்களுக்கு இன்ட்ரோ வாய்ஸ் சூப்பர் கவர்ச்சியான நாயகி கதாபாத்திரங்கள்..

 

 

சிந்திக்கக்கூடிய எலெக்ஷன் பாட்டு

படத்தின் மைனஸ்…

இரண்டாம் பகுதியில் தேர்தலை காமெடியாக்கி சொன்னவிதம்.

யோகிபாபு காட்சியை அதிகப்படுத்தி இருக்கலாம்.

 

 

இயக்குனர் வேங்கட் ராகவன், தான் சுந்தர் சியின் சிஷ்யர் என்பதை ஆணித்தரமாக காட்சிகளில் சொல்லியிருக்கிறார்.

மலையாள படம் ரீமேக் என்பதே தெரியாத அளவிற்கு தமிழ் நாட்டுக்கு ஏற்ப சுவையாக இந்த கத்திரிக்காயை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் முத்தின கத்திரிக்கா… சுவையில் குறையில்லை.

கபாலி இசை பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு தயாரிப்பில், முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

இதில் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு தீம் பாடல் இடம்பெற்றுள்ளது. ஆக மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது.

இப்பாடல் வெளியீட்டுக்கு விழா எதுவும் நடத்தாமல் ஆன்லைனில் வெளியிடுகின்றனர். அந்த பாடல்கள் பின்வருமாறு…

1)   உலகம் ஒருவனுக்கா…..

(தமிழ் ராப் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.)

பாடல் ஆசிரியர் : கபிலன்

பாடியவர்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா

பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 02 நொடிகள்

 

வா நீ வா தோழா…
உலகம் ஒருவனுக்கா..? உழைப்பவன் யார்..?
விடை தருவான் கபாலி தான்…
கலகம் செய்து, ஆண்டையரின் கதை முடிப்பான்..!

நீ நீயாய் வந்தாய்… தீயின் கருவாய்….
கண்கள் உறங்கினாலும், கனவுகள் உறங்காதே…

பூவின் நிழலாய்… புல்லாங்குழலாய்…
உன்னை வெளியிடு, துளிர் விடு,…
பலியாடாய் எண்ணாய் விதையாக..

வாழும் நமக்கு கதைகள் இருக்கு…
நாளை நமக்கே விடியும்… விழித்து போராடு…
வானம் உனதே.. பாதி வழியில், பறவை பறக்க மறக்காதே…

ஏய் எண்ணத்தில் நூறு திட்டமிட்டு,
கபாலி வாரான் கையத்தட்டு….
பம்பரம் போல சுத்திக்கிட்டு,
பரையிசை அடித்திட்டு பாட்டு கட்டு…

ஏய் இத்தன நாளா கூட்டுக்குள்ள…
இனிமே வாரான் நாட்டுக்குள்ள…

போன்ற வரிகள் கபாலியின் ரீ என்ட்ரீயை காட்டுகிறது. இந்த வரிகளும் இந்த குரல்களும் இனி அடிக்கடி கேட்கலாம். ரஜினி ரசிகர்ளுக்கு செம விருந்தாய் இந்த பாடல் அமைந்துள்ளது.

 

2)      மாய நதி..

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பாடியவர்கள் : அனந்து பிரதீப் குமார், ஸ்வேதா மேனன்

பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 35 நொடிகள்

 

 

நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே…

கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே…

நான் உன்னை கானும் வரையில் தாபத நிலையே

தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே….

 

ஆயிரம் கோடிமுறை நான் தினம் இறந்தேன்…

நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்…

 

மாய நதி இன்று மார்பில் வழியுதே…

தூய நரையிலும் காதல் மலருதே…

 

நீர் வழியிலே மீன்களை போல், என் உறவை நான் இழந்தேன்…

நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு துறவை நான் அடைந்தேன்…

ஒளி பூக்கும் இருளே…. வாழ்வின் பொருளாகி…

வலி தீர்க்கும் வழியாய்… வாஞ்சை தரவா…

 

நாம் நேசித்த ஒருவரை காலம் காலமாக பிரிந்து, மீண்டும் ஒன்று கூடும் நாளாக தெரிகிறது.

இந்த இரு குரல்களும் அந்த ஏக்கத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தியுள்ளன.

அண்ணாமலை படத்தில் ரெக்கை கட்டி பறக்குதே என்ற பாடல் போல நரைத்த பின்னும் காதல் மலரும் எனச் சொல்கிறது இப்பாடல்.

துற வாழ்க்கை அடைந்து மீண்டும் தன் காதலியை கண்டு இருக்கிறார் என்பதை இப்பாடல் வரிகள் வலிகளாய் உணர்த்துகின்றன.

 

3)      வீர துறந்துரா…

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பாடியவர்கள் : கானா பாலா, லாரன்ஸ் ஆர், பிரதீப் குமார்

பாடல் நேரம் : 3 நிமிடங்கள் 17 நொடிகள்

வீரத் துரந்தரா

எமை ஆளும் நிரந்தரா

பூமி அறிந்திரா

புது யுகத்தின் சமர் வீரா

உன்நிலை கண்டு

இன்புற்றார்க்கு

இரையாகாமல்

அன்புற்றார் அழ

அடிமைகள் எழ

 

உரிமை யாழ் மீட்டினான்

உணர்வால் வாள் தீட்டினான்

உலகில் யாரென காட்டினான்

 

தடைகள் அறுந்திட

தலைகள் நிமிர்ந்திட

“கடை”யன் “படை”யன் ஆகினான்…

இப்படியாக தூய தமிழ் வரிகள் இருந்தாலும், இடையே ஆங்கில ராப் வரிகளும் புகுத்தப்பட்டுள்ளது.

“EVERY MAN GOTTA RIGHT TO DECIDE HIS DESTINY” என்றும் வருகிறது.

இது கொஞ்சம் தாளம் போட வைக்கும் உள்ள பாடலே. ஆனால் இது எல்லாருக்கும் பிடித்த பாடலாய் இருக்குமா? என்பதை படம் வந்தே பிறகே காண முடியும்.

 

4)   வானம் பார்த்தேன்…

பாடல் ஆசிரியர் : கபிலன்

பாடியவர் : பிரதீப் குமார்

பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 52 நொடிகள்

நதியென நான் ஓடோடி…
கடலினை தினம் தேடினேன்…

தனிமையின் வலி தீராதோ…
மூச்சு காற்று போன பின்பு நான் வாழ்வதோ…
தீராத காயம் மனதில் உன்னாலடி… ஆறாதடி…

வானம் பார்த்தேன்… பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…

இது மிகவும் சோகப்பாடலாக உள்ளது. இது ரஜினி, ராதிகா ஆப்தேவின் இளமைக் கால பாடலாக இருக்கும் என தோன்றுகிறது. அல்லது தங்களது இளமை காலத்தை எண்ணிப் பார்க்கும் பாடலாக இருக்கும் என தோன்றுகிறது.
அதில் காதல் காயங்கள் கலந்துள்ளதாக தெரிகிறது.

 

5)   நெருப்புடா…

நடுவில் இடம் பெறும் வசனங்களை ரஜினிகாந்த் எழுதியிருக்கிறார்.

பாடல் எழுதி பாடியிருப்பவர் : அருண்ராஜா காமராஜ்

நெருப்புடா நெருங்குடா பாப்போம்

நெருங்குனா பொசுக்குற கூட்டம்!

அடிக்கிற அழிக்கிற எண்ணம்

முடியுமா நடக்குமா இன்னும்

அடக்குனா அடங்குற ஆளா நீ

இழுத்ததும் பிரியற நூலா நீ

தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ

விடியல விரும்பற கபாலீ…

என்று உணர்ச்சிமிக்க வரிகளுடன் தொடங்குகிறது.

இந்த பாடல் உருவாகும் முன்பே பட்டைய கிளப்பியது இந்த வார்த்தை. தற்போது இன்னும் எகிற வைத்துள்ளது.

கபாலி நெருங்குகிறவன் சாவை நெருங்குகிறான் என்பது போல அனைத்து வரிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இந்தப் பாடலை திரையரங்குகளில் கேட்க பல நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.  விசில் சத்தம் விண்ணை பிளக்கும்.

More Articles
Follows