ஜாக்சன் துரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சண்முக சுந்தரம் மற்றும் பலர்.
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : யுவா
இயக்கம் : தரணிதரன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : எம்.எஸ். சரவணன்

கதைக்களம்…

பிந்துமாதவியை மணக்க சிபிராஜ் மற்றும் கருணாகரன் போட்டி போடுகின்றனர். எனவே பிந்துவின் தந்தை சண்முக சுந்தரம் பேய் பங்களாவில் ஒரு வாரம் தங்க உத்தரவு இடுகிறார்.

அப்போதுதான் அங்குள்ள ஜாக்சன் என்ற பேய்க்கும் துரை என்ற பேய்க்கும் நடக்கும் பனிப்போர் இவர்களுக்கு தெரிய வருகிறது.

அந்த போராட்டம் இந்தியாவின் சுதந்திர காலப் போராட்டம் என்பதால் பேய்களுடன் இணைந்து இவர்கள் இருவரும் போராட இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

பின்னணி இசையோடு சத்யராஜின் அறிமுக காட்சி செம. தன் மகள் தன் நாட்டுக்காக உயிரை விடுவதும், அதன்பின் தானும் உயிரை விடுவதும் ஓகே. இரண்டு தோற்றத்திலும் மிகப் பொருத்தமாக இருக்கிறார்.

ஆனால் அதன்பின் வரும் காட்சிகள் எல்லாம் என்ன சொல்வதன்றே தெரியவில்லை. பேயாக வந்து சாவதும் பின் பேயாக வருவதும் மீண்டும் பேயாக… படிக்கிற உங்களுக்கு கடுப்பா இருக்கா? எங்களுக்கும்தான்.

இவருடன் ஜாக்சன் பேய், மனைவி பேய், குழந்தை பேய் மற்றும் மொட்டை ராஜேந்திரன் பேய் என பேய் பேய்யாக வரிசை கட்டி நிற்கும்போது சிரிக்கவும் முடியவில்லை. பயமும் வரவில்லை.

சிபிராஜின் இன்ட்ரோ ஸ்மோக் ஸ்பெக்ட் எல்லாம் ஓகேதான். ஆனால் காட்சிகளில்தான் வலுவில்லை. கூளிங் கிளாஸ் குணாவை கூட இதில் காணல. ட்ரை பன்னுங்க ப்ரோ.

கருணாகரன் சில நேரம் காமெடி செய்து மற்ற நேரங்களில் அவரே டயர்ட் ஆகிவிடுகிறார்.

பிந்து மாதவிக்கு ஏன் இந்த நிலைமை? படத்தில் சில காட்சிகளில் அவரை பார்த்த ஞாபகம் மட்டும் இருக்கிறது. மகாநதி சங்கரும் இருக்கிறார்.

யோகிபாபுக்கு நல்ல கை தட்டல் இருக்கிறது. ஆனால் அவர் வரும் காட்சிகள்தான் குறைவு.



தொழில்நுட்ப கலைஞர்கள்….

பாடல்கள் கைகொடுக்கவில்லை. ஆனால் படத்தை பின்னணி இசை மட்டும் தாங்கி நிற்கிறது. ஆனால் பேய் பயம் நமக்கு வரவில்லை என்பதால் அதுவும் சப்பென்று ஆகிவிடுகிறது.

மற்றவர்களை விட ஒளிப்பதிவாளர் யுவாவிற்கும் ஆர்ட் டைரக்டர் டி.என். கபிலனுக்கும் நிறைய வேலை இருந்துள்ளது.

பேய் படம் என்பதால் முழுக்க இருட்டிலேயே எடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளருக்கு வேலை இருந்த அளவுக்கு ஒளிக்கு வேலையில்லை.

படத்தின் ப்ளஸ்…

  • மோட்டார் பைக் பாடல் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
  • கலை கபிலனும் ஒளிப்பதிவாளர் யுவாவும் படத்தை தாங்கி நிறுத்துகின்றனர்.
  • சுதந்திர போராட்டக் காலத்தில் உயிர் இழந்தவர்கள் தங்கள் சுதந்திர நாட்டை காண வேண்டும் என்பதற்காக பேய்யாக பங்களாவில் வாழ்வது.

படத்தின் மைனஸ்…

  • ப்ளாஷ்பேக்கில் சத்யராஜ் மற்றும் அவரது மகள் இலக்கிய தமிழில் பேசுகின்றனர். பின்னர் நவீன தமிழ் மீண்டும் அடுத்த நொடியே இலக்கிய தமிழ் பேசுகின்றனர்.
  • பின்னர் நவீன காலத்தில் சிபிராஜ் பேசும்போது கொச்சை தமிழ் என்பது என்ன நியாயமோ..?
  • பேய்யுடன் மனிதன் போராடும் படங்களை பார்த்திருப்போம். ஆனால் இதில் ஒரு மனிதன் மற்றும் பேய்கள் சேர்ந்து வெள்ளைக்கார பேயுடன் போராடுவது எல்லாம் ரொம்பவே டூ மச்.
  • உடம்பு மற்றும் முகம் முழுவதும் வெள்ளை சாயம் பூசி கண்களில் மட்டும் கறுப்பு மை பூசி பயமுறுத்துவது எல்லாம் ஓவர் பழசு.

சத்யராஜ் போன்ற அனுபவமிக்க கலைஞர்களை கொண்டு இன்னும் நன்றாக கொடுக்க முயற்சித்திருக்கலாம் இயக்குனர் தரணிதரன்.

பர்மா படத்தில் பட்டைய கிளப்பியவர். இதில் சறுக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ஜாக்சன் துரை… பயமில்லாத ஜவ்வு துரை

அப்பா திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணன், வினோதினி, ப்ரீத்தி, வேல ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நசாத் மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
படத்தொகுப்பு : ஏஎல் ரமேஷ்
இயக்கம் : சமுத்திரக்கனி
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : நாடோடிகள் புரொடக்சன் சமுத்திரக்கனி

 

கதைக்களம்…

மூன்று அப்பாக்களும் (பெற்றோர்களும்) அவர்களது குழந்தைகளும். இவர்களுடன் வேறொரு பெற்றோரின் இரண்டு மகள்கள்.

தன் மகனின் ஆசையை தானாகவே தெரிந்து கொண்டு நிறைவேற்றும் ஒரு அப்பா. (சமுத்திரக்கனி-விக்னேஷ்)

குழந்தை பிறந்தது முதல் படிப்பு, அமெரிக்க வேலை, திருமணம் வரை திட்டமிடும் கண்டிப்பான ஒரு அப்பா. (தம்பி ராமையா-ராகவ்)

மூன்றாவது அப்பா.. மகனே நாம் இருக்கிற இடம் யாருக்கும் தெரியாம இருந்துக்கனும் என்று சொல்பவர்.  (நமோ நாரயணன்-நசாத்)

இவர்களில் எந்த அப்பாவின் மகன் நல்ல நிலைக்கு உயர்ந்து வருகிறான்? எப்படி வளர்க்கப்படுகிறான்? எந்த அப்பாவின் ஆசை நிறைவேறியது என்பதே இந்த படம்.

கதாபாத்திரங்கள்…

ஒரு அப்பாவாக மட்டுமில்லாமல் தன் மகனுக்கு ஒரு நண்பனாகவும் மற்ற குழந்தைகளுக்கு அப்பாவாகவும் வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி.

மகனுக்கு சைக்கிள் கற்று கொடுப்பது, தனியாக பஸ்சில் பயணிக்க சொல்வது, நீச்சல் கற்று கொடுப்பது, அவன் போக்கில் இவர் சென்று வழிகாட்டுவது என அனைத்தும் ரசிக்கும் ரகம்.

மாமனார் வேலராமமூர்த்திக்கு மருமகனாக இல்லாமல் மகனாகவும் தன் கேரக்டரை உயர்த்தி நிறுத்தியிருக்கிறார்.

இவரின் நண்பனாக வரும் டாக்டர் சசிகுமாரும் அனல் பறக்கும் வசனங்களை பேசி செல்கிறார்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஜெயித்து காட்டுவேன் என்பது போல தம்பி ராமையா இதிலும் வெளுத்து கட்டியிருக்கிறார். மகனையும்தான்.

எந்த குழந்தை பிறக்கும்? என்ன பெயர் வைக்கலாம்? என்பது தொட்டு, பிறக்கும் நேரம், படிக்கும் பள்ளி என அனைத்தையும் முடிவு செய்யும்போது சில அப்பாக்களை நினைவுப்படுத்துகிறார்.

இவர்களுடன் பெரிய காக்கா முட்டை விக்னேஷ், ராகவ், யுவஸ்ரீ, கேப்ரில்லா, நசாத் என அனைவரும் தங்கள் கேரக்டர்களை ஜொலிக்க வைக்கிறார்கள்.

சின்ன சின்ன பாவனைகளையும் அழகாக காட்டி நம் மனதை கவர்கிறார்கள்.

சமுத்திரக்கனியின் மனைவியாக ப்ரீத்தி. பிடிவாதத்தால் பெண்கள் நினைப்பதை சாதிப்பார்கள் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு.

தம்பி ராமையாவின் மனைவியாக வினோதினி. கணவன் சொல்லை மீறமுடியாமல் தவிப்பதை அழகாக காட்டியுள்ளார்.

நமோ நாராயணன், அணில் முரளி, ஆதிரா ஆகியோருக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மாணவனின் வளர்ச்சி பள்ளியில் இல்லை. அவனிடம் இருக்கிறது என சமுத்திரக்கனி சொல்லியதும் ஒலிக்கும் இளையராஜா குரல் அருமை. நம்மை 1980ஆம் ஆண்டுக்கே கொண்டு செல்கிறார் இசைஞானி.

இப்படத்திற்கு பாடல்கள் பெரிதாக தேவையில்லை என்பதால் அதை பின்னணி இசையில் சரி கட்டியுள்ளார்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்கிறது. ஜாக்கியின் கலையில் குழந்தைகளும் அவர்களது வீடுகளும் அசத்தல்.

படத்தின் ப்ளஸ்….

  • படத்தின் க்ளைமாக்ஸ் ஏற்படுத்தும் ஓர் அதிர்ச்சி உணர்வு
  • உணர்ச்சிமிக்க இப்படத்திற்கு உயிர் கொடுத்த வசனங்கள்
  • திரைக்கதையும் அதனைச் சார்ந்த குழந்தைகள் நட்சத்திரங்கள்
  • ஒளிப்பதிவும் அதற்கான பின்னணி இசையும்

படத்தின் மைனஸ்…

  • அப்பாக்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்பதே தெரியவில்லை.
  • 3 அப்பாக்கள் ஓகே. அதில் ஒருவருக்காவது மகள் இருப்பதாக வைத்திருக்கலாமே?

இப்படத்தை எவருக்கும் விட்டுக் கொடுக்காமல் தானே இயக்கி வசனம் எழுதி தயாரித்து நடித்து இருக்கிறார் சமுத்திரக்கனி.

நிச்சயம் வேறு எவராவது இதில் நுழைந்திருந்தால் இப்படி ஒரு படைப்பை அவரால் கொடுத்து இருக்க முடியாது.

அதுபோல் வசனங்கள் மனதில் என்றும் நிற்கும்.

  • பாய் கடைக்கும் ஸ்கூல் பசங்க ப்ராஜக்ட்டுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க யாரை ஏமாத்துறீங்க?
  • அப்பா கிட்ட சொல்ல முடிஞ்ச விஷயத்தை மட்டும் பன்னு. சொல்ல முடியாத விஷயம்னா அது தப்புன்னு அர்த்தம். பண்ணாதே.
  • அழுக்கு மனசுல சேர்ந்துட்டே இருந்தா அது வக்கிரமா மாறும். ஆசிட் அடிக்கக் கூட தோனும் என்ற வசனங்கள் படத்தை தாங்கி நிற்கின்றன.

தன் மகனின் சக மாணவியை அவன் தோழியாக பார்க்க சொல்லும் அந்த காட்சிகள் அருமை.

க்ளைமாக்ஸ் எவரும் எதிர்பாராதது. இப்படியும் சில பள்ளிகள் இன்று இருக்கின்றன என்ற உண்மை சம்பவத்தை சொன்ன சமுத்திரக்கனிக்கு ஆயிரம் சபாஷ் சொல்லலாம்.

இப்படத்தை பார்த்தபின் அப்பாக்களும் குழந்தைகளும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் நல்லது.

மொத்தத்தில் அப்பா… குழந்தைகளின் குற்றாலம்

மெட்ரோ (2016) விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிரிஷ், பாபி சிம்ஹா, மாயா, சென்ட்ராயன், துளசி, யோகி பாபு மற்றும் பலர்.
இசை : ஜோஹன்
ஒளிப்பதிவு : என் எஸ் உதயகுமார்
படத்தொகுப்பு : எம். ரமேஷ் பாரதி
இயக்கம் : ஆனந்த கிருஷ்ணன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : E5 Entertainments, Metro Productions

கதைக்களம்…

மெட்ரோ சிட்டியில் வாழும் சத்யா ஒரு காலேஜ் ஸ்டூடண்ட். இவருடன் படிக்கும் ஒரு மாணவியை காதலிக்கிறார்.

ஒரு சூழ்நிலையில், தன் நினைத்ததை எல்லாம் அடைய, தன் பேராசையால் செயின் பறிப்பில் ஈடுப்படுகிறார்.

அதன்பின்னர் அவரது குடும்பம் என்ன ஆனது? பேராசை அவரை நிம்மதியாக வாழவிட்டதா? என்பதே இந்த மெட்ரோ.

கதாபாத்திரங்கள்..

அண்ணன் சிரிஷ்தான் படத்தின் நாயகன். படு ஸ்மார்ட். அம்மாவை கொலை செய்தவர்களையும், செயின் திருடர்களையும் ஒவ்வொருவராக தேடி பிடிப்பதும், கொல்வதும் செம.

படம் சீரியஸ் படம் என்பதால் கடைசி நிமிடம் வரை அப்படிதான் இருக்கிறார். அழகான காதலி மாயா இருந்தும் இவர் மயங்கவில்லை.

சிரிஷின் தம்பியா சத்யா. திருடன் என்றே சொல்லமுடியாத அளவிற்கு அப்பாவியான முகம். பொருத்தமான தேர்வு.

இவரின் பேராசையால் வில்லன் பாபி சிம்ஹாவுக்கே ஆப்பு அடிப்பது காட்சிகள் சூப்பர்.
அதுவும் இடைவேளை காட்சியில் போலீஸையும் விட்டு வைக்காமல் கொள்ளை அடிப்பது அப்ளாஸை அள்ளுகிறது.

ஹீரோவானாலும் இன்னும் அந்த வில்லத்தனம் பாபி சிம்ஹாவிடம் பாக்கியிருக்கிறது.

திருடுவதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது நிஜத்திருடர்களுக்கு ஒரு பாடம். நமக்கும் ஒரு எச்சரிக்கைதான்.

இதில் ஹீரோயின் மாயாவுக்கு வேலையில்லை. சென்ட்ராயன் நல்லவனாக நடித்து, நமக்கு புதுவிதமான அனுபவம் கொடுத்துள்ளார்.

யோகிபாபு வரும் அந்த ஒரு காட்சியிலேயே கேரி ஆன் ப்ரோ. என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

சிரிஷின் பெற்றோர்கள் நல்ல தேர்வு. துளசி கடைசியில் அழவைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களை விட ஜோஹனின் பின்னணி இசை படத்திற்கு பலம்.
என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவில் செயின் பறிக்கும் காட்சிகள் நம் மனதையும் பறிக்கிறது.
எங்கும் சலிப்பு தட்டாத ரமேஷ் பாரதியின் அருமையான எடிட்டிங்.

படத்தின் ப்ளஸ்…

  • ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பு.
  • பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு

படத்தின் மைனஸ்…

  • அம்மாவை இழந்த பின் சிரிஷ் சீரியஸ் ஆக இருக்கலாம். ஆனால் ஜாலியான குடும்பம் என்று கூறும் இவர் படு சீரியஸாகவே வருகிறார்.
  • துளசியை கொலை செய்தவர்களின் ரேகையை போலீஸ் எடுக்கிறது. ஆனால் அதன்பின்னர் என்ன ஆனது? என்பதற்கு பதில் இல்லை.

இதுவரை நாம் பார்க்காத களத்தை எடுத்து, அதில் வேரின் ஆழம் வரை சென்ற இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவை அவ்வளவு பாராட்டலாம்.

வெறும் வழிப்பறியை காட்டாமல் அதற்கான ஸ்கெட்ச் உள்ளிட்டவைகளை சொல்லி, அனைவருக்கும் விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார்.

இதுபோன்ற செயின் திருடர்களை விடக்கூடாது என ஆடியன்சே சொல்லுமளவுக்கு காட்சிகளில் பலம் சேர்த்திருக்கிறார் ஆனந்த கிருஷ்ணன்.

இது சிட்டி மக்களுக்கு மட்டுமில்லை. எப்போதாவது சிட்டிக்கு வந்து செல்லும் மற்றவர்களுக்கும் ஒரு பாடம்தான்.

சென்சார் தடை செய்த இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பது நல்லது.

மொத்தத்தில் மெட்ரோ… சிட்டியில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை..!

அம்மா கணக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி, பேபி யுவஸ்ரீ, மாளவிக்கா, விஷால் தேவ், விக்கி மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : கவேமிக் யு அரி
படத்தொகுப்பு : ராஜா முகம்மது
இயக்கம் : அஸ்வின் ஐயர் திவாரி
பிஆர்ஓ : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பாளர் : தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய்.

கதைக்களம்…

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி யுவஸ்ரீ படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறார். முக்கியமாக கணக்கு பாடத்தில் பூஜ்யம்தான் எடுப்பதால் இவளது அம்மா அமலா பால் கவலைப்படுகிறார்.

ரேவதி வீட்டில் அனைத்தும் வேலைகளை செய்யும் இவர், ரேவதியிடம், மகளை நன்றாக படிக்க வைக்க ஐடியா கேட்கிறார்.

 

 

அவர் சொன்னப்படியே அமலா பால் அவதாரம் எடுத்து தன் மகளை கலெக்டராக்குகிறார். என்ன செய்தார்? எப்படி அவரது மகள் படித்தார் என்பதே இந்த அம்மா கணக்கு.

கதாபாத்திரங்கள்…

படத்தின் ஹீரோ ஹீரோயின் எல்லாம் அமலா பால்தான். ஹோட்டலில் பத்து பாத்திரம் தேய்ப்பதும், ரேவதிக்கு அனைத்து பணிவிடைகளை செய்வதும், மீன் மார்க்கெட்டில் வேலை செய்வதும் என கவர்கிறார்.

காலையில் தொடங்கும் இவரது பணிகள் இரவு வரை நீள்வதும் பார்ப்பவரை மனதை கொஞ்சம் வருத்தமடைய செய்யும்.

 

 

சமுத்திரக்கனியிடம் அட்மிஷன் கேட்பது, கலெக்டரிடம் பேசுவது என அசத்தினாலும் மகளுக்காக ஸ்கூல் யூனிபார்ம் மாட்டிக் கொண்டு செல்வது எல்லாம் கொஞசம் ஓவர்தான்.

இதில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. எப்போதும் இல்லாமல் மிடுக்கான பிரின்சிபாலாக வந்தாலும் பாடத்தில் அசத்துவது ரசிக்கலாம்.

பெற்றோரின் வலியை புரிந்துக் கொள்ளாமல், அம்மாவை திட்டுவதும், கேவலப்படுத்துவம், அசிங்கமாக பேசுவதும் இன்றைய அலட்சியமான குழந்தைகளை (ஒரு சிலரை) அடையாளப்படுத்தியிருக்கிறார் யுவஸ்ரீ.

 

 

யுவஸ்ரீ நடிப்பில் நல்ல மெச்சூர்ட்டிக்கு இருக்கிறது. இறுதியில் அம்மாவின் கனவை பற்றி பேசி கலங்க வைக்கிறார்.

ரேவதிக்கு பெரிதாக வேலையில்லை. மற்றவர்களுக்கும் அதே நிலைமைதான். ஒரு சில மாணவர்கள் கவனம் ஈர்க்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவின் பின்னணி இசை படம் முழுக்க பேச வைக்கிறது. உனக்கும் எனக்கும், கனவுகள், இந்த வாழ்க்கை பாடல்கள் கேட்கலாம்.

அரசுப்பள்ளி என்பதாலும் மற்ற காட்சியிலும் படம் முழுவதும் ஒரு இருட்டான சூழ்நிலையே காணப்படுகிறது. கவேமிக் யு அரியின் ஒளிப்பதிவில் இரவு காட்சிகள் ஓகே.

 

 

எடிட்டிங்கை ராஜா முகம்மது சரியாக செய்திருந்தாலும் இறுதிகாட்சியில் எல்லாம் திடீரென முடிவது மனதில் ஒட்டவில்லை.

படத்தின் ப்ளஸ்….

  • பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேறு வழியில் முயற்சித்திருக்கிறார்கள்.

 

 

  • கணவன் இல்லாத பெண்கள் படும் அவஸ்தைகளை காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார்கள்.
  • பின்னணி இசையில் உயிர் கொடுத்துள்ளார் இசைஞானி.

படத்தின் மைனஸ்…

  • யுவஸ்ரீக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. அவர் படிக்கவில்லை என்பது அவரது திமிர். ஆனால் அமலா பள்ளியில் படிக்க செல்வது எப்படி சாத்தியம்? அதுவும் திடீரென கணக்கு பாடத்தில் 52 மார்க் எப்படி?

 

 

  • நாங்க படிக்கிறப்ப எல்லாம் பாய்ஸ் கேர்ள்ஸ் ஒரே பெஞ்சில உட்கார விடமாட்டாங்க. இப்போ மாத்திட்டாங்களா என்ன? அரசுப்பள்ளியில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருப்பது எப்படி??
  • ஏழ்மையாக இருக்கிறார் அமலாபால். ஆனால் அவரது முகத்தில் வசதியான கலையம்சம் உள்ளதே. அதுகூட ஓகே. வீடே மிடில் கிளாஸ் போல்தான் தோன்றுகிறது.

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் காட்சியும் படமாக்கலும் ஓகே. ஆனால் நிறைய லாஜிக் மீறல் உள்ளதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

மொத்தத்தில் அம்மா கணக்கு… பெண்களுக்கான எனர்ஜி..!

ராஜா மந்திரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கலையரசன்-ஷாலின், காளி வெங்கட்-வைஷாலி, பாலசரவணன், நாடோடிகள் கோபால், ஜெயந்தி, சரவணசக்தி மற்றும் பலர்.
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : பிஜி முத்தையா
படத்தொகுப்பு : ஆர் கே செல்வா
இயக்கம் : உஷா கிருஷ்ணன்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : மதியழகன், ரம்யா, பிஜி முத்தையா

கதைக்களம்…

காளிவெங்கட் மற்றும் கலையரசன் இருவரும் அண்ணன்-தம்பி. காளி வெங்கட் வைஷாலியை காதலிக்க, கலையரசன் ஷாலின் ஸோயாவை காதலிக்கிறார்.

அண்ணன் தம்பி இருவரும் காதலை வெளியில் சொல்லாமல் மறைத்து வாழ்கின்றனர். ஒரு சூழ்நிலையில் காளியின் காதல் சில பிரச்சினைகளால் முறிந்து போகிறது.

 

 

எனவே காளிக்கு வேறு ஒரு பெண்னை பார்க்க குடும்பத்துடன் செல்ல, அங்கே பெண்ணாக வந்து நிற்கும் நாயகியால் இவர்களின் வாழ்வில் பெரும் பிரச்சினை எழுகிறது.

அதன்பின்னர் இவர்களின் காதல் என்னவானது? என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

இதில் தனி நாயகனாக களம் இறங்கியிருக்கிறார் கலையரசன். பெயருக்கு ஏற்ற போல், காட்சிகளில் கவர்கிறார்.

காதலியுடன் ரொமான்ஸ் செய்வதும், அண்ணனுக்காக காதலை உதற நினைப்பதும், காதலிக்காக ரிஸ்க் எடுப்பதும் என ரசிக்க வைக்கிறார்.

அண்ணன் காதலியிடம் ஆங்கிலம் பேசி அவரை வெறுப்பேற்றுவது ரசிக்க வைக்கும் ரகம்.

வெறும் காமெடியனாகவே பார்த்து வந்த காளிவெங்கட்டை இதில் ஒரு சிறந்த நடிகராக பார்க்கலாம். கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

 

 

ஒவ்வொரு பெண்ணாக தட்டிக் கொண்டு போக, இந்த திருமணமாவது நடக்குமா? என் ஏங்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.

தம்பியிடம் செல்லமாக சண்டை போடுவதும், பின்னர் கூடுவதும் குடும்பத்து உறவுகளை இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும்.

பாலசரவணனுக்கு காட்சிகள்தான் குறைவு. காமெடியோ அப்ளாஸ். கிடைக்கும் சின்ன சின்ன கேப்பில் எல்லாம் கிடா வெட்டுகிறார் மனிதர்.

 

 

காலி ப்ளவர் வைஷாலிக்கு இருக்கமான காட்சிகள்தான் அதிகம். ஆனால் அமைதியான முகம் கொண்டு வசீகரிக்கிறார்.

ஷாலின் அறிமுக காட்சிமுதல் க்ளைமாக்ஸ் வரை ரசிக்க வைக்கிறார்.

நான் உன் ஆளு அவன்கிட்ட சொல்லுவ. என்கிட்ட சொல்லமாட்டியா? என கேட்கும் காட்சிகளில் ரசிகைகளையும் கவர்கிறார்.

திருமணத்தை நிறுத்த கேட்பதும், இறுதியில் முடியாமல் அழுவதும் ரசிக்கும் ரகம். ஆனால் முடியல்லனா வேறு ஒரு திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வது டேக் இட் ஈசி காதல் பாலிசிதான் போல.

 

 

ஹீரோக்களின் பெற்றோராக நாடோடிகள் கோபாலும் ஜெயந்தியும், கிராமத்து அம்மா அப்பாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

குடிகார சித்தப்பாவாக சரவண சக்தி. சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

முத்தையாவின் ஒளிப்பதிவில் அந்த ஆரம்ப காட்சி அழகு. நீண்ட நெடுஞ்சாலை. இரண்டு பக்கமும் தென்னை மரம். அதன்பின்னர் வயல் என பசுமையாக படம் பிடித்திருக்கிறார்.

கிராமத்து வீடுகளையும் அதன் பின்னணியையும் காட்சிகளில் கொடுத்து கிராமத்து மண் வாசனையை உணர்த்தியிருக்கிறார்.

 

 

காலி ப்ளவர் என்ற ஒரு பாட்டிலையே நம்மை காலி செய்துவிடுகிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். லெகுவா பாடலும் ரசிக்க வைக்கிறது.

தனி ஒருவன் படத்தில் கலக்கிய ரெம்போன் பால்ராஜ்தான் கலை. குறை வைக்காமல் யார் என்று கேட்க வைக்கிறார்.?

படத்தின் ப்ளஸ்…

  • உஷா கிருஷ்ணனின் திரைக்கதை.
  • ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு

 

 

  • இடைவேளையில் ட்விஸ்ட் கொடுத்திருப்பது அருமை.

படத்தின் மைனஸ்….

  • வைஷாலிக்கு காளி மீது காதல் எப்படி? என்ற காட்சியில் அழுத்தமில்லை.
  • க்ளைமாக்ஸ் காட்சிப்படுத்தலில் இயக்குனர் கொஞ்சம் தடுமாறிய உணர்வு.

 

 

அறிமுக இயக்குனர் என்பதே தெரியாமல் அசத்தல் திரைக்கதையில் உஷா கிருஷ்ணன் கைத்தட்டல் பெறுகிறார்.

குடும்பம், நட்பு, சென்டிமெண்ட், காமெடி, திரைக்கதை என அனைத்திலும் தன்னால் பளிச்சிட முடியும் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்துவிட்டார் உஷா . சபாஷ்.

மொத்தத்தில் ராஜா மந்திரி… ரசிகர்களுக்கு பிடிச்ச முந்திரி..!

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜிவி பிரகாஷ், ஆனந்தி, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், சரவணன், கருணாஸ், யோகி பாபு, நிரோஷா மற்றும் பலர்.
இசை : ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : சாம் ஆண்டன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : லைகா நிறுவனம் சுபாஷ்கரன்

கதைக்களம்…

சென்னையிலுள்ள ராயபுரம் ஏரியாவை தன் கைக்குள் வைத்திருப்பவர் நைனா.

இவருக்கு வயது ஆகிவிட்டதால், தன் மகளை கட்டிக்கப் போகும் மாப்பிள்ளையை அடுத்த நைனாவாக ஆக்கிவிடலாம் என நினைக்கிறார்.

 

 

இதற்காக உங்களில் யார் அடுத்த நைனா? என்ற ரேஞ்சுக்கு போட்டி எல்லாம் நடைபெறுகிறது.

ஒரு சூழ்நிலையில் பயந்த சுபாவம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் இவரது மாப்பிள்ளையாக ஆகிறார். அதன்பின்னர் என்ன நடந்தது? என்பதே கதை.

கதாபாத்திரங்கள்…

ஜி.வி. பிரகாஷ்.. இதுவரை மியூசிக் டைரக்டர், பாடகர் என வலம் வந்தவர் கூடிய விரைவில் டான்சர் ஆகிவிடுவார் என்றே தெரிகிறது. அதற்கான பிள்ளையார் சுழியை இப்படத்தில் போட்டுள்ளார்.

 

 

மற்றபடி நடிப்பில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார். ஆனால் டான் வேடத்திற்கு அவ்வளவாக பொருத்தமில்லை. பெட்டராக எதிர்பார்க்கிறோம்.

ஆனந்திக்கு பெரிதாக வேலையில்லை. கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆனந்தி ரசிகர்கள் படு அப்செட்.

சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகிய பலரும் உண்டு. இவர்கள் தங்கள் அனுபவ நடிப்பால் பாஸ் செய்து விடுகிறார்கள்.

 

 

கருணாஸ் பேசும் பாகுபலி காளகேயன் வசனங்கள் ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறது. ஹாப்பி பர்த்டே டு மீ என அறிமுகம் ஆகிறார் விடிவி கணேஷ்.

இதில் அதிகம் ஸ்கோர் செய்பவர் யோகிபாபுதான். இவர் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு 100% கியாரண்டி கொடுக்கலாம்.

சரக்கு ஓவரா போட்டு இருக்கோமோ? என்று அப்பாவியாக கேட்பது முதல் நைனாவின் நற்காலியை அட்டைய போடுவது முதல் அசத்தியிருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷின் நண்பராக வருபவருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். லொள்ளு சபா மனோகர், நிரோஷா உள்ளிட்டோரை சரியாக பயன்படுத்தவில்லை.

இவர்களுடன் பொன்னம்பலம் மற்றும் மன்சூர் அலிகானும் வந்து போகிறார்கள். எதற்காக என்பது தெரியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜி.வி. பிரகாஷின் இசையில் எம்ஜிஆரின் ரீமிக்ஸ் பாடலும் படமாக்கப்பட்ட விதமும் கண்களுக்கு நிறைவு. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பாடலை கானா பாடலாக பாடியிருக்கிறார் கானா பாலா.

 

 

மைமா பாடல் இளைஞர்களை கவரும். மற்றபடி பின்னணி இசையில் மாஸ் சேர்த்து அசத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

கிருஷ்ண வசந்தின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள், ரவுடிகள் சேசிங் ரசிக்க வைக்கிறது.

படத்தின் ப்ளஸ்…

  • நைனா வாரிசுக்கு நடத்தபடும் ஆடிசனும் யோகிபாபுவின் வர்ணனையும் செம சூப்பர். அதில் டிஆர்பி ரேட்டிங்காக அழவைப்பது அருமை.
  • மாஸ் ஹீரோவுக்கான பின்னணி இசை

படத்தின் மைனஸ்…

  • பயந்த சுபாவம் கொண்ட ஜிவி பிரகாஷ் கடைசியில் வில்லனை பன்ச் செய்வது அவர் பொருத்துக் கொண்டாலும் எங்களால் முடியல.

 

 

  • கபாலி, தெறி, கத்தி, வேதாளம், 24, ஆகிய படத்தின் வசனங்களை அதிகம் பயன்படுத்தி அவர்களது ரசிகர்களை கவர்ந்தாலும், இயக்குனருக்கு அவரது ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இளைஞர்களை கவர்வதற்காக, லாஜிக் இல்லாமல் தினிக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும்போது சலிப்பு தட்டுகிறது.

மொத்தத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு… அட இருக்கட்டுமே. அதுக்கு என்ன?

More Articles
Follows