ரஹ்மான் இடத்தில் யுவன்.; 7வது முறையாக அஜித்துடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ பட சூட்டிங் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை அடுத்த 2019ல் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித் என்பதை பார்த்தோம்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்காக இது உருவாகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்க இருக்கிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பார் என முதலில் கூறபட்ட நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

அஜித், யுவன் கூட்டணி ஏற்கெனவே தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா-2, ஆரம்பம் ஆகிய 6 படங்களில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

சுஜா வருணி திருமணத்தை ஒரு அப்பாவாக நடத்தி வைக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை, கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுஜா வருணி.

இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் சுஜா வருணிக்கும் சிவாஜியின் பேரன் சிவாஜிதேவ் என்ற சிவகுமாருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை கமல்ஹாசனை சந்தித்து நேரில் வைத்துள்ளார் சுஜா.

இதுபற்றி அவர் கூறும்போது ‘என் திருமணத்தை எனது தந்தை இடத்தில் இருந்து கமல் தான் நடத்தி வைக்க உள்ளார்.

என் தந்தை இறந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதை பகிர்ந்துகொண்டு கமல் தான் என் திருமணத்தின்போது தந்தை இடத்தில் இருக்கவேண்டும் என்று அவரிடம் கேட்டேன்.

தற்போது என் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உள்ளார்’ என்றார்.

*மூடர் கூடம்* நவீன் இயக்கத்தில் இணையும் இரண்டு விஜய்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மூடர் கூடம்’ படத்தில் நடித்து இயக்கி தயாரித்தவர் நவீன்.

இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இதில் 2 விஜய்கள் இணைந்துள்ளனர். அதாவது ஒருவர் விஜய் ஆண்டனி. மற்றொருவர் அருண் விஜய்.

ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று மாலை வெளியிட உள்ளனர்.

ஹாரிஸ் இசையில் கார்த்திக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் ‘தேவ்’. இதில் இவர் கபில்தேவ் ரசிகராக நடிக்கிறார்.

கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை சூர்யா சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை பாடி இருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இவர் இதற்கு முன் சூர்யாவிற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘7ம் அறிவு’ படத்தில் ‘யம்மா யம்மா…’ என்ற பாடலை பாடியிருந்தார் எஸ்பிபி என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பி நாராயணனை நம்பி இயக்குனராக களமிறங்கிய மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன்.

இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருந்த இவர், அந்நிய நாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இதனையடுத்து சில நாட்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் குற்றவாளி அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது இவரின் வாழ்க்கை படமாக உருவாகியுள்ளது. நடிகர் மாதவன், நம்பி நாராயணாக நடிக்கிறார்.

‘ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி ஆங்கிலம் மொழிகளில் தயாராகிறது.

தமிழில் ராக்கெட்ரி நம்பி விளைவு என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் டீசர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ராக்கெட்டரியில் 35 ஆண்டுகளும், ஜெய்லில் 50 நாட்களும் வாழ்ந்திருக்கிறேன். இந்த 50 நாளில் என் நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான் இந்த கதை, என்னைப்பற்றி அல்ல என டீசரில் மாதவன் சொல்வது போல உள்ளது.

இப்படத்தை ஆனந்த் மகாதேவன் உடண் இணைந்து நடிகர் மாதவனும் இயக்கியுள்ளார்.

இதன்மூலம் முதன்முறையாக இயக்குநராக களமிறங்கி உள்ளார் மாதவன்.

ஏற்கெனவே எவனோ ஒருவன், இறுதிச்சுற்று ஆகிய படங்கள் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.சுரேஷின் *பில்லா பாண்டி* படத்திற்கு தடைகோரி வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய தள நண்பர்களுக்கு வணக்கம் ஆர்.கே.சுரேஷ் நடப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் ‘பில்லா பாண்டி’ இந்த படத்தினை திரு.கே.சி.பிரபாத் ஜே கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்….
இவர் ஏற்கனவே ‘ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளரான திரு ஏ.ஜமால் சாகிப் என்பவரிடம்
‘மருதாண்டசீமை’ என்கிற படத்தை இருவரும் சேர்ந்து எடுப்போம்
என ஆசைவார்த்தை கூறி படம் 60% எடுத்துக்கொண்டிருக்கும்போது மேற்குறிப்பிட்ட திரு கே.சி.பிரபாத் அவர்கள் புதிதாக படம் எடுக்கப்போகிறேன் என்று
ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் திரு ஏ.ஜமால் சாகிப் அவர்களை ஏமாற்றவேண்டும் என்கிற நோக்கில் ‘பில்லாபாண்டி’ படத்தை தயாரித்துள்ளார்.

ஏன் என்று விளக்கம் கேட்டபோது…’பில்லா பாண்டி’படம் வெளியாவதற்கு முன்பு ‘மருதாண்டசீமை’ படத்தை முடித்துத் தருகிறேன் என்று உறுதியளித்தார்…

ஆனால் இதுவரை மேற்படி
ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் திரு.ஏ.ஜமால் சாகிப் அவர்களுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் திரு.கே.சி.பிரபாத் அவர்கள் செயல்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

More Articles
Follows