தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ராஜமவுலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இதன் இரண்டாம் பாகம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிட கூடாது என கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காவிரி பிரச்சினையின் போது, நடிகர் சத்யராஜ் கன்னடர்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.
எனவே, அவர் நடித்த படத்தை தங்கள் மாநிலத்தில் திரையிடக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
இதனால் பாகுபலி தரப்பு என்ன செய்யலாம்? என ஆலோசித்து வருகிறதாம்.