ரஜினி-அஜித்துக்கு பதில் கமல் முந்திக் கொண்டாரோ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ஒப்பம் திரைப்படம் அண்மையில் வெளியானது.

சைக்கோ த்ரில்லர் படமான இதில் கண் பார்வையற்றவராக மிக அருமையாக நடித்திருக்கிறார் மோகன்லால்.

எனவே இப்படம் வெளியாகும் முன்னரே ரஜினிக்கு சிறப்பு காட்சியாக இடப்பட்டது.

மேலும் அஜித்துக்கும் இதன் சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து கமலும் இப்படத்தை பார்த்துவிட்டாராம்.

எனவே இயக்குனரையும் நடிகரையும் அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

மேலும் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினியும் அஜித்தும் மௌனம் காத்த நிலையில், கமல் முந்திக் கொண்டார் என்றே தெரிகிறது.

இதன் அதிகாரப்பூர்வ தகவலுக்கு இன்னும் சில நாட்கள் காத்திருப்போம்.

வெங்கட் பிரபு தயாரிப்பில் படம் இயக்கும் மிர்ச்சி சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ‘சென்னை 28′ படத்தின் 2ஆம் பாகம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது என சற்றுமுன் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜேஷின் கதை ஒன்றை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறாராம்.

இதனை அம்மா க்ரியேஷன்ஸ் சார்பாக டி. சிவா தயாரிக்கிறார்.

இதன்பின்னர் வெங்கட்பிரபு தயாரிப்பில், நடிகர் ‘மிர்ச்சி’ சிவா ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் பிரஸ்மீட்டில் தெரிவித்தனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார்.

இது நல்ல கருத்துள்ள படமாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாகுபலி தேவசேனாவுடன் கனெக்ஷன் ஆன சுந்தர்.சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர் சி.

இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் மகேஷ் பாபு இருவரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, நான்கு மொழிகளில் தயாராகவுள்ள ஒரு சீரியல் ஒன்றை தயாரிக்கவிருக்கிறாராம் சுந்தர் சி.

மேலும் யுகே செந்தில்குமார், ராஜ்கபூர் மற்றும் செல்வா ஆகியோர் இந்த சீரியலில் பணிபுரிய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த மெகா சீரியலுக்கு தேவசேனா என பெயரிட்டுள்ளனர்.

பாகுபலி படத்தில் அனுஷ்கா கேரக்டரின் பெயர் தேவசேனா என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியை அடுத்து மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, சிரஞ்சீவியின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான ராம்சரண்தேஜா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம் மணிரத்னம்.

‘காற்று வெளியிடை’ படத்தை முடித்துவிட்டு, இப்படத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு பக்கா கமர்ஷியல் மாஸாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி போஸ்டர்கள் கிழிப்பு; வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் காவேரி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், வழக்கம்போல் ரஜினியின் பெயரும் இதில் அடிபடுகிறது.

இதனால் கர்நாடகாவில் பல இடங்களில் ஒட்டியிருந்த கபாலி போஸ்டர்களை கன்னடர்கள் கிழித்து வருகின்றனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகளை தீயிட்டு கொளுத்திவிட்டனர்.

இதனால் கர்நாடகாவில் பதட்டம் நிலவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அஜித் அளவு உயராத ஜெய் இப்படி செய்யலாமா.? சிவா பரபரப்பான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு தயாரித்து இயக்கியுள்ள சென்னை 28 இன்னிங்ஸ் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இதில் வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி, மிர்ச்சி சிவா, வைபவ், விஜயலெட்சுமி, மகேஸ்வரி, மகத் உள்ளிட்ட படக்குழுவினருடன் படத்தில் நடித்துள்ள தயாரிப்பாளர் டி.சிவாவும் கலந்துகொண்டார்.

அப்போது படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜெய் இவ்விழாவுக்கு வராதது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து டி.சிவா பேசியதாவது…

“நடிகர் அஜித் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்து விட்டார்.

பொதுவிழாக்களில் கலந்துகொள்ளாமல் ஒரு டிரெண்டை கிரியேட் செய்தார் அஜித்.

ஆனால் வளரும் நடிகரான ஜெய், இவ்விழாவுக்கு வராமல் இருந்தது சரியல்ல.

அவர் இன்று நடிகராக உயர இந்த சென்னை 28 படத்தின் முதல் பாகம்தான் காரணம்.”

என்று பரபரப்பாக பேசினார்.

More Articles
Follows