‘ஈஸ்வரன்’ படம் ரிலீஸ் ஆகுமா..? சிம்புவின் நஷ்டமடைந்த படத்தால் வந்த சிக்கல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’.

நாளை மறுநாள் 2021 ஜனவரி 2ஆம் தேதி இப்படி பாடல்களை படக்குழு வெளியிடவுள்ளது.

இப்படத்தை 2021-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை எனக் கூறி டி.ராஜேந்தர் ஆரம்பித்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் இருப்போர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்…, “‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும்.

அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து இந்த படம் வெளியிடனும்னா ‘AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்டணும் என்று சொல்வது எந்தவகையிலும் நியாயம் இல்லை.

அந்த தீய சக்திகளுக்கு வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும். ‘AAA’ படம் சம்பந்தமாக நிறைய பிரச்னைகள் இருந்தது.

அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சிம்பு அவரது சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார்.

மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

‘AAA’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன்பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டபஞ்சாயத்து மூலமாக பேசியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இந்த பிரச்னையை நீதிமன்றத்தில் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

அதைவிட்டு விட்டு நாங்கள் கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்துவிடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது nசட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் மீண்டும் ஒருமுறை எங்களது கண்டத்தை தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Will Eeswaran release on pongal ?

ஜனவரி 31 வரை ஊரடங்கு..; மீண்டும் தள்ளிப்போகும் ‘மாஸ்டர்’ ரிலீஸ்..? முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

ஹிந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் முதல்வரை சந்தித்து நடிகர் விஜய் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் இன்று ஜனவரி 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதில் திரையரங்கில் 100% பார்வையாளர்கள் உயர்த்தப்பட்டதாக அறிவிப்புகள் எதுவும் இல்லை.

எனவே தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகளின்படி 50% இருக்கைகளை மட்டுமே நிரப்பி ‘மாஸ்டர்’ படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Thalapathy Vijay waiting for CM desicion on Master release

ரஜினியை போல அவரது ரசிகர்களும் நல்லவர்கள்..; அரசியல் சேறு அவர் மீது ஒட்ட வேண்டாம்.. – மோகன்பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக மக்கள் ரஜினியின் அரசியல் வருகையை எதிர்ப்பார்த்த நிலையில் திடீரென அரசியலுக்கு வரவில்லை என்றார் ரஜினி.

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகருமான மோகன் பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…:

“ரஜினிகாந்த் என் உயிர் நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அவர் அவரது உடல்நிலை காரணமாக அரசியலில் இறங்கவில்லை என அறிவித்தார்.

இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும், ஒரு நண்பனாகவும், அவரது உடல்நிலையை முழுமையாக அறிந்தவனாகவும், அவர் அரசியலில் இறங்காமல் இருப்பது நல்லது என்று நான் நம்புகிறேன்.

நான் அவரிடம் அரசியல் குறித்து பேசியுள்ளேன். நீ மிகவும் நல்லவன்.

உன்னைப் போன்ற என்னை போன்ற ஆட்களுக்கு அரசியல் ஒத்து வராது.

நாம் உண்மையை அப்பட்டமாகப் பேசுவோம், யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்.

பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியாது, வாங்கவும் மாட்டோம்.

அரசியலில் இறங்கும் வரை நல்லவன் என்று சொல்பவர்கள் நாளை அரசியலுக்கு வந்தபின் கெட்டவன் என்பார்கள்.

அரசியல் ஒரு சேறு. அந்தச் சேறு உங்கள் மேல் ஒட்டாமல் இருப்பதே நல்லது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்தைப் போலவே நல்லவர்கள்.

நீங்கள் அனைவரும் எனது நண்பரின் முடிவைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

Telugu actor Mohan Babu Supports Superstar Rajinikanth’s Decision On Political Entry

நம்பிக்கை துரோகம்..: அரசியலுக்கு வராத ரஜினி..; விரக்தியில் உயிரை விட்ட ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2020 டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினிகாந்த் என தமிழகமே எதிர்ப்பார்த்தது.

ஆனால் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் 3 பக்க கடிதம் எழுதி அறிவித்தார் ரஜினி.

ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதியளித்தார் ரஜினி.

அவரது ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

டிசம்பர் மாத ஆரம்பத்தில்.. ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை காட்டினார். ஆனால் டிசம்பர் இறுதியில் ஏமாற்றிவிட்டார்.

இதனால் அவரது ரசிகர்கள், ரஜினி வீடு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தலைவர் அரசியலுக்கு வர வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மீண்டும் ரஜினியை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வராமல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதால் விழுப்புரத்தைச் சேர்ந்த ரசிகர் ராஜ்குமார் என்ற ரசிகர் விரக்தியால் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Rajini fan commits suicide after his idol quits politics

மோடி-ரஜினி என் இரு கண்கள்.. ரஜினியுடன் தொடர்ந்து இருப்பேன்.. – அர்ஜுனமூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தவர் அர்ஜுனமூர்த்தி.

ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் சேர்வதற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

ஜனவரியில் கட்சி தொடக்கம் என்றும் கூறியிருந்த ரஜினி, உடல்நிலை காரணமாக, தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்… அர்ஜுனமூர்த்தி தமது நிலைப்பாட்டை விளக்குவதற்காக செய்தியாளர்களை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று பிற்பகலில் அழைத்திருந்தார்.

அப்போது பேசிய அவர், “ரஜினி அரசியலுக்கு வர இயலாத நிலை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை சக குடும்பத்தினர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலையின்போது எடுக்கப்படும் முடிவு போலவே கருத வேண்டும்.

“எனது இரண்டு கண்களில் ஒரு கண் நரேந்திர மோடி, இன்னொரு கண் ரஜினிகாந்த்.

இந்த இருவருமே தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள். அதனால் ஈர்க்கப்பட்டே இருவரின் தலைமையை நான் ஏற்றேன்.

மருத்துவர்கள் ரஜினிக்கு ஓய்வு வேண்டும் என கூறியிருக்கிறார்கள். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். ரஜினியின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரஜினியுடனேயே தொடர்ந்து இருப்பேன். எனக்கு பாஜகவுடன் நெருங்கிய உறவு உள்ளது. அங்குள்ள தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த நன்மதிப்பு உள்ளது. மீண்டும் பாஜகவில் சேருவது பற்றி இப்போதைக்கு முடிவு செய்யவில்லை,” என்றார்.

Arjuna Murthy about Rajini and Modi

இறப்பு தழுவும் வரை இனி அரசியல் இல்லை..; ரஜினி முடிவால் தமிழருவி மணியன் ‘அரசியல் முழுக்கு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் எஅன்று கூறி வந்த ரஜினிகாந்த்.. திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி ‘இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை’ என நேற்று அறிவித்தார்.

கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்த அன்றைய நாளிலேயே, தமிழருவி மணியனை தனது கட்சியின் மேற்பார்வையாளராக ரஜினிகாந்த் நியமனம் செய்திருந்தார்.

ரஜினி கட்சி தொடங்கிய பின், காந்திய மக்கள் இயக்கம் அதனுடன் இணைத்துக் கொள்ளப்படும் என்று தமிழருவி மணியன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்… காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்க வேண்டும் என்று என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றது தான் நான் செய்த ஒரே குற்றம்.

இதற்காக மலினமான மன நோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என் மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டன.

எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக் கொள்கிறேன்.

இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன். திமுகவில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்.

நான் போகிறேன். வரமாட்டேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன்.

Gandhiya Makkal Iyakkam head Tamilaruvi Manian quit electoral politics

More Articles
Follows