தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈஸ்வரன்’ படம் நாளை மறுநாள் 14ஆம் தேதி ரிலீசாகிறது.
இதனிடையில் இன்று மாலை சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
அப்போது அவர் பேசியதாவது…
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட இழப்பீடாக, சிம்பு மற்றும் டி ஆர் தரப்பு தனது சம்பளத்தில் ஒரு படத்துக்கு 2.4 கோடி வீதம் 3 படத்துக்கு 7.2 கோடி எனக்கு தருவதாக சொன்னார்கள்.
அந்த வகையில் முதலில் ‘ஈஸ்வரன்’ படத்தின் மூலம் தருவதாக கூறினர்.
ஆனால் அந்த தொகை ரூ.2.4 கோடியை தரவில்லை.
அதனால் ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட கூடாது என கியூப்பில் புகார் அளித்துள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
இதனால் ஈஸ்வரன் ரிலீசாகுமா? என்ற குழப்பமே நீடிக்கிறது.
AAA producer creates trouble to STR