ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகமான ரசிகர்களை கொண்டவர் அல்லு அர்ஜுன்.

இவரது படங்களுக்கு கேரளாவிலும் அதிக எதிர்பார்ப்பு அண்மை காலமாக இருந்து வருகிறது.

தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களை அதிகளவில் கவர்ந்திருக்கும் அல்லு அர்ஜுன் அவர்கள் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார்.

இன்று, மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரையிட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

”அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு பிறகு வெகு ஜனங்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த.

மக்களை கவரும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற “என் பேரு சூர்யா என் வீடு இந்தியா” அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்.

இதுவரை நாங்கள் 207 காட்சிகள் உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை” என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவேலன்.

ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வசூலை அள்ளுவாரா அல்லு..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Allu Arjun prove his mass in TN by En Peyar Surya En Veedu India movie

இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் அருள்நிதியை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் : டில்லி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் படம் ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’.

இப்படத்தினை ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பாக ஜி டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.

உலகமெங்கும் மே 11ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தினை பற்றி டெல்லி பாபு பேசும் போது,

”திரில்லர் வகை படங்களின் தீவிர ரசிகனாக இருப்பதால், இயக்குனர் மு மாறனின் கதை சொல்லலை கண்டு வியந்தேன்.

சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாக, திறமையாக கொண்டு வந்தது மகிழ்ச்சி. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் சீட்டின் நுனிக்கு வரவைக்கும் காட்சிகள் நிறைய உள்ளன.

அவை உங்கள் கண்களை இமைக்க விடாது. ஈர்க்கக் கூடிய விஷயங்களை திரைக்கதையில் சரியாக பிணைத்துள்ளார்.

சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சிஎஸ், படத்துக்கு இசையமைப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

‘பின்னணி இசையில் தனக்கு ஒரு தனி பாணி உண்டு என்று இந்த படத்திலும் தன் திறமையால் நிரூபித்திருக்கிறார் சாம்.

மேலும், மொத்த படத்திலும் அருள்நிதி ஒரு மிஸ்டர் பர்ஃபெக்ட்டாக இருந்தார். தனது நடிப்பை மெறுகேற்ற அவர் காட்டிய ஈடுபாடு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது.

மௌனகுரு எப்படி அவரின் கேரியரை உயர்த்தியதோ, அப்படி இந்த இரவுக்கு ஆயிரம் கண்கள் அவரை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும்.

ரெமோ, வேலைக்காரன் போன்ற பிரமாண்ட படங்களை தந்த 24AM ஸ்டுடியோஸின் ஒரு அங்கமான 24PM ஸ்டுடியோஸ் இந்த படத்தோடு கைகோர்த்திருப்பது பெருமையான விஷயம்” என்றார்.

Iravukku Aayiram Kangal movie will take Arulnithi to the next level says Delhi Babu

Breaking: நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவ பிரசன்னா உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

+2 படிப்பை முடித்த பின் மருத்துவ துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டும்.

இந்தாண்டுக்கான நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் அந்த தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை.

இது மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தருவதாக நடிகர் பிரசன்னா அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Prasanna ready to help Govt School students to write NEET exam in other states

Prasanna‏Verified account @Prasanna_actor
Wud love to sponsor travel expenses for atleast 2 underprevilleged students or Govt school students appearing for #NEET this year. Inbox me the details like hall ticket, place where ur exam hall assigned will book the tickets for u.

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம்; கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

+2 படிப்பை முடித்த பின் மருத்துவ துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டும்.

இந்தாண்டுக்கான நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் அங்குதான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவரான கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்.” என கமல் பதிவிட்டுள்ளார்.

Kamalhassan condemns TN Students must write NEET exam at other states

நமக்கு தேவையானதை பெற போராட வேண்டும்..; இயக்குனர் ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ், பா.இரஞ்சித், ரேவதி, அதிதி மேனன், ரோகினி, பாலாஜி சக்திவேல், புஷ்கர் காயத்திரி, அம்பிகா, சச்சு, சரோஜா தேவி, பிரேம் பெண்கள் மைய தலைவர் வைசாலி சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது…

“இது பெண்களுக்காக பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம்.

பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் தைரியமாக எதிர்க்கிறார்கள்.

அந்த தைரியத்தின் வெளிப்பாடாக இந்த சங்கத்தை நான் பார்க்கிறேன்.

இந்த சங்கம் ரொம்ப வீரியமாக செயல் பட வேண்டும்.

சமீபத்தில் பாலியலுக்கு ஆளான பெண்ணை பற்றி கூறும் போது, அவள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்கிறார்கள். குழந்தைகளும் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கும் ஆடைதான் காரணமா?

அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும்.

அதற்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும் தான் பெற முடியும்” என்றார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் சம்பளம் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் வருகிற ஜீன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

மற்றொரு படமான 2.0 படம் 2018 தீபாவளிக்குள் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகிற ஜீன் மாதம் முதல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இப்படத்தில் ரஜினியின் சம்பளமாக ரூ. 65-70 கோடிகளை கொட்டிக் கொடுக்க தயாராகவுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

More Articles
Follows