ஜிவி பிரகாஷ்-ரைசா இணையும் படத்திற்கு டைட்டில் தேடும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநியோக துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை இயன்ற ஆரா சினிமாஸ் தயாரிப்பு துறையிலும் தங்களது ஆளுமையை வெளிப்படுத்த வீரா நடிப்பில் “அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா”, மற்றும் அதர்வா -ஹன்சிகா இணையாக நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில்.”100″ என்றப் படங்களை தயாரித்து வருகிறது.

மிகவும் எதிர்பார்க்க படும்”100″ திரைப் படம் மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த வருடம் நல்ல கதை அம்சமுள்ள படங்கள் சிலவற்றை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கும் ஆரா சினிமாஸ் அந்த முயற்சிக்கு முன்னோடியாக ஜி வி பிரகாஷ்=ரைசா வில்சன் இணையாக நடிக்க, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் ஒரு horror fantsy படத்தை சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பூஜையோடு துவங்கி உள்ளனர்.

குறும்படங்கள் மூலமாக திரை உலக வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இயக்குனர் கமல் பிரகாஷ், அவர் இயக்கி உள்ள விளம்பர படங்கள் மூலமாக சில விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டிக் டிக், மிருதன், கொடி ஆகிய படங்களின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று பெயர் வாங்கிய எஸ் வெங்கடேஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் மூலம் சிறந்த பட தொகுப்பாளர் என்று பெயர் வாங்கிய சிவா இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

கமலநாதன் கலை அமைப்பில், டான் அசோக் சண்டை காட்சிகளை இயக்க, கதாநாயகன், இசை அமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகளை ஏற்கிறார் ஜி வி பிரகாஷ் குமார்.

” கதாநாயகன் ஜி வி பிரகாஷ் சாருக்கும், தயாரிப்பாளர் “ஆரா பிலிம்ஸ்” மகேஷ் கோவிந்தராஜன் சாருக்கும் , அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

“பியார் பிரேமா காதல்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறி போன ரைசா இந்த படத்தின் கதையை கேட்ட மாத்திரத்தில் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்.

திறமையான, அருமையான நடிக நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் என என் திரை பயணம் ஆசிர்வாதத்துடன் துவங்குகிறது.

படத்துக்கான தோதான டைட்டிலை தேடிக் கொண்டு இருக்கிறோம் . விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம் ” என்கிறார் இயக்குநர் கமல் பிரகாஷ்.

What will be the title for GV Prakash and Raiza wilsons new project

விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் 9 மாணவிகளுக்கு வாய்ப்பளித்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் 75 பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ராணி மேரிக் கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்.

பாடி அசத்திய அந்த மாணவிகள் மேடையிலேயே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்.

“நாங்கள் சினிமாவில் பாட முடியுமா” என்று அந்த வேண்டுகோள்களை ஏற்று கொண்ட இளையராஜா சில மாணவிகளை அழைத்து தனது ரெகார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

அதன்படி SNS மூவிஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் அந்த ஒன்பது மாணவிகளையும் பாட வைத்து பாடகிகளாக அறிமுகப்படுத்தி உள்ளார்.

Ilayaraaja introduced 9 College Students as Singers in Thamilarasan movie

கராத்தே போட்டியில் தங்கத்தை வென்ற ஸ்டன் சிவாவின் மகன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

37வது தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்பாக்கம் JJ ஸ்டேடியத்தில் மாநில கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது.

இன்று (13 ஜனவரி, ஞாயிறு) நடைபெற்ற போட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள் 76KG பிரிவில் கலந்து கொண்ட ஸ்டிவன் குமாரும், 70KG பிரிவில் கலந்து கொண்ட கெவின் குமாரும் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் மாநிலத்தலைவர் கராத்தே R.தியாகராஜன் வெற்றி பெற்ற ஸ்டிவன் குமார் மற்றும் கெவின் குமார் ஆகியோருக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்டன் சிவா, லாஸி சிவா, கனகராஜ், அல்தாப் ஆகியோர் உடனிருந்தனர்.

Stunt Master Stun Sivas two sons won Gold medal in Karate

‘சார்லி சாப்ளின் 2’ போல பார்ட் 3 பார்ட் 4 வர வேண்டும்.. : பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்லி சாப்ளின் 2’.

அம்ரீஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரித்துள்ளார்.

வருகிற ஜனவரி 25-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால், இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பிரபுதேவா பேசியதாவது:

இப்பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்த நாட்கள் ரொம்ப சந்தோஷமான நாட்கள்.

படத்தைப் பார்த்து சிலர் திட்டுவார்கள், சிலர் பாராட்டுவார்கள்.

மற்றவர்கள் படத்தை திட்டும் போது நமக்கு சந்தோஷமாக இருக்கு இல்லயா. அதைப் போல நம்ம படத்தை திட்டும் போதும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

‘சார்லி சாப்ளின் 2’ படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

இப்படம் பாகம் 3, 4, 5 என வர வேண்டும்” என பேசினார் பிரபு தேவா.

Actor Prabhu Deva talks about Charlie Chaplin 2 sequels

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை சொல்ல வரும் “ஆயிஷா”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Grace production தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரஃபீக் முஹம்மது இயக்கத்தில் புதுமுகம் ரவிகுமார் நடிப்பில் உருவாகும் படம் ” ஆயிஷா”.

இதில் கதாநாயகியாக உத்தரவு மகாராஜா படத்தில் மதுமிதா நடிக்கிறார் மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ரமேஷ் கண்ணா, முத்துக்காளை ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து இயக்குனர் ரஃபீக் முஹம்மது பேசுகையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.”

இப்படத்திற்கு லெனின் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீ விஷ்ணு படத்தொகுப்பை மேற்கொள்ள, நடன இயக்குனராக பவர் சிவாவும், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் துவக்க விழா பிரசாத் லேப் -ல்பூஜையுடன் துவங்கியது.

இவ்விழாவில் கில்டு தலைவர் ஜாகுவர்தங்கம் அவர்கள், தயாரிப்பாளர் மக்கள் தொடர்பாளர் திரு. விஜய்முரளி அவர்களும், கதையாசிரியர் கலைஞானம் அவர்களும், வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Debut Director Rafeek Muhammad directing Ayesha

சட்டக்கதிர் வெள்ளி விழா; சட்டம் & நீதிக் கருத்தரங்கு விருதுகள் வழங்கும் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சட்டக்கதிர்’ இதழ் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சென்னையில் சட்டக்கதிர் சட்ட மாத இதழின் வெள்ளி விழாவும், சட்டம் மற்றும் நீதிக் கருத்தரங்கும், நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ‘சட்டக்கதிர்’ இதழுடன் இணைந்து லிப்ரா ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நடத்தியது.

தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்கள் ‘சட்டக்கதிர்’ ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதுடன், இந்திய மாநில உயர்நீதி மன்றங்களில் அந்தந்த மாநில ஆட்சிமொழிகள் கூடுதல் வழக்கு மொழியாக வருவதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

தொடக்க விழாவிற்கு தலைமையேற்ற மாண்புமிகு நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்கள் சட்டக்கதிரின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்களுக்கு நீதித் தமிழ் அறிஞர் விருதினை ஆளுநர் வழங்கினார்.

முழுநாள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாநில மொழிகள் உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்துதல், நீதித்துறை நிர்வாகமும் தீர்ப்புகளை வழங்குதலும், இந்திய அரசமைப்பில் இசைவு பட்டியலும் மத்திய மாநில அரசு உறவுகளும் என்ற தலைப்பில் சட்ட வல்லுநர்கள் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.

நிறைவு விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விமலா அவர்கள் தமிழ் மொழி சட்ட மொழியாக்க வேண்டியதின் தேவையை வலியுறுத்தினார்.

சட்டத்தமிழ் மாமணி , சட்டத்தமிழ் மணி விருதுகளை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் சட்டக்கதிர் இதழின் சேவையை பாராட்டினார். “தமிழ் பெரும் பாரம்பரிய மிக்க மொழி. கலாச்சார ரீதியாக தமிழ் சிறப்பான மொழி.

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ் தெரியும். நான் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் நிச்சயமாக தமிழ் மொழியை அதிகம் கற்பேன். தமிழ் இலக்கியங்களை படிப்பேன்.

நான் பிறந்த வீடு ஓரிடமாக இருந்தாலும் தமிழ்நாடு எனது இன்னொரு வீடு. ” என சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.

விழாவில் ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் அவர்களும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி ஆர் எஸ் சம்பத் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திரு. டேவிட், திரு. கே. துரைசாமி, திரு. ஆர் வி தனபாலன், திரு எம் முத்துவேலு, திரு கே பாலு ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Sattakadir Silver Jubilee Conference on Law and Justice Award Ceremony

More Articles
Follows