‘கன்னி மாடம்’ டிக்கெட்டுடன் நாலு வரி பேச்சு போதும்; தங்கம் உங்களுக்குத்தான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட்.

இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவித்து இருக்கிறார் பட தயாரிப்பாளர் ஹசீர்.

கன்னிமாடம் படம் பார்க்கிறவர்களுக்கு தங்கம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஆணவ கொலைகளுக்கு எதிராகவும், சாதி வெறிக்கு எதிராகவும் காட்சிகள், வசனங்கள் மூலமாக இயக்குனர் போஸ் வெங்கட் சாட்டையை வீசியிருப்பார்.

இந்த படம் பார்க்கிற பெண்களை மகிழ்ச்சி படுதும் விதமாக இந்த தங்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னிமாடம் படம் பார்க்கும் பெண்கள் தாங்கள் படம் பார்த்த டிக்கெட்டுடன், படம் குறித்து அவர்களின் கருத்தை சில நிமிட வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யவேண்டும்.

அதில் தேர்வாகும் சிறந்த கருத்துக்கு முதல் பரிசாக அரை சவரன் தங்கம் பரிசாக வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் தங்கம் வழங்கப்படும் என தயாரிப்பாளர் ஹசீர் அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.

படம் பார்த்தால் தங்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Watch Kanni Maadam movie and win gold gift from Producer

BREAKING தர லோக்கலாக இறங்கிய ரஜினி; தலைவர் 168 டைட்டில் இதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்கி வருகிறார். இதற்கு தற்காலிகமாக தலைவர் 168 என தலைப்பு வைத்துள்ளனர்.

ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்க நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

மேலும் சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்க இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் கூடிடுவாங்க. பிரச்னை வரும்.; ஆஜராக விலக்கு அளிக்க ரஜினி மனு

இந்த நிலையில் அண்ணாத்த என படத்திற்கு தலைப்பிட்டு அறிவித்துள்ளனர்.

இதனை நாம் முன்பே நம் தளத்தில் பதிவு செய்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த என்ற சொல் கிராமத்தில் அழைக்கப்படும் சொல்.

Its Official now Rajinis Thalaivar 168 titled Annaatthe

“பாரம்” படத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சொன்னதை செய்த மிஷ்கின் பிரமிப்பில் ஆழ்ந்த திரையுலகம். சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தரமிக்க படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது. சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது முதல் ஆளாக நேசிக்கவும் பாராட்டவும் தவறுவதில்லை. “பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் “பாரம்” படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் எனக்கூறியபடியே அவர் தற்போது செய்து காட்டியுள்ளார். சினிமா மீதான அவரது அளவற்ற நேசிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசிய விருதை வென்ற “பாரம்” திரைப்படம் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் 2020 பிப்ரவரி 21 அன்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்குநர் மிஷ்கினின் அளவிலா அன்பின் செயலால் மிகுந்த புளகாங்கிதம் அடைந்துள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறியதாவது…

“பாரம்” படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும் அன்புக்கு விலைமதிப்பே கிடையாது.அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இவ்வளவு உயரத்தில் இருந்து கொண்டு புதுமுகங்களான எங்கள் மீது அவர் காட்டும் அன்பும் ஆதரவும் பிரமிப்பானது. இந்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. “பாரம்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது அவர் பேசியதிலிருந்தே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் பரவ ஆரம்பித்துவிட்டது. தற்போது அவர் போஸ்டர் ஒட்டியதன் மூலம் படத்தின் மீதான கவனம் பன்மடங்கு பெருகியிருக்கிறது. இந்த அன்பு எங்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் ஆர்த்ரா ஸ்வரூப் மற்றும் ப்ரியா கிருஷ்ணசுவாமி இணைந்து Reckless Roses நிறுவனத்திற்காக தயாரித்திருக்கும் “பாரம்” திரைப்படம் தமிழகமெங்கும் ரசிகர்களிடம் நல்ல படம் என்கிற பெயர் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

*“ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா-M.தீபா தயாரித்துள்ள படம் ‘காக்டெய்ல்’ இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா.விஜயமுருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அறிமுக இசையமைப்பாளர் சாய் பாஸ்கர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ், கருணாகரன், மைம் கோபி, எஸ்ஜிசி சினிமாஸ் மணிகண்டன் மற்றும் கனகராஜ், ராஜா, முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, “கல்லூரியில் படிக்கும்போது கனவுகளோடு இருப்போம் இல்லையா..? அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.. யார் என்ன சொன்னாலும் தூக்கி போட்டு விடாதீர்கள்.. கண்டிப்பாக ஒருநாள் அது நிறைவேறும்” என்றார்.

தயாரிப்பாளர் P.G.முத்தையா பேசும்போது, “சினிமா பற்றிய எந்த விஷயங்களும் தெரியாமல் தான் சென்னைக்கு வந்தேன்.. எஸ்ஆர்எம் கல்லூரி சேர்ந்து படித்தபோதுதான் சினிமா என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன்.. டிவி கூட இல்லாத வீட்டிலிருந்து வந்த நான், இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் இது அனைத்தையுமே எனக்குத் தந்தது எஸ்ஆர்எம் கல்லூரி தான்” என்றார்.

நடிகை நமீதா பேசும்போது, “எனக்கு வழக்கமான ரொமாண்டிக் படங்களை பார்த்து பார்த்து போரடித்து விட்டது.. எனக்கு இதுபோன்ற காமெடி படங்கள்தான் ரொம்ப பிடிக்கும்.. காக்டைல் படத்தை நான் தியேட்டருக்கு போய் பார்ப்பேன்” என்று கூறி கைதட்டலை அள்ளினார்.

நடிகர் எஸ்வி சேகர் பேசும்போது ஒரு நல்ல சிவராத்திரி தினமாக பார்த்து காக்டெய்ல் ரிலீஸ் செய்கிறார்கள். நமக்கு நல்லது நடக்கிறது என்றால் அந்த நாளும் நல்ல நாள் தான்”என்றார்.

எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் காக்டெய்ல் படத்தின் இசைத்தட்டை வெளியிட எஸ்ஜிசி சினிமாஸ் கனகராஜ், முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்தப்படத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘காக்டெய்ல்’ என்கிற பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை.. வரும் மார்ச்-6ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.

*தொழிநுட்ப கலைஞர்கள்*

இயக்கம் ; ரா.விஜயமுருகன்
இசை ; S.சாய் பாஸ்கர் .
ஒளிப்பதிவு : RJ ரவீன்
படத்தொகுப்பு ; SN ஃபாசில்
கலை ; தினேஷ் மோகன்
பாடல்கள் : விவேக், ரவி
நடனம் : சந்தோஷ்
தயாரிப்பு நிர்வாகம் ; உமா மகேஸ்வர ராஜு
நிர்வாக தயாரிப்பு ; சௌந்தர் பைரவி
தயாரிப்பு ; P.G.முத்தையா-M.தீபா
மக்கள் தொடர்பு ; A.ஜான்

‘கன்னி மாடம்’ பட வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடிய படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரூபி பிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’.

ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று சென்னை ஏ வி எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்கு கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வெற்றியை கொண்டாடினர்.

மேலும், இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹரீஷ் சாய், ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரீஷ், ரோபோ ஷங்கர், ஆகியோரும் உடன் இருந்தனர்

தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளதால் ’கன்னி மாடம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Kanni Maadam team celebrated their success with audience

கீழே நிக்கிறவன்தான்டா சூப்பர் ஸ்டாரு..; கல்லூரி விழாவில் சிம்பு மாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியார் கல்லூரி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் சிம்பு.

அப்போது அவர் பேசியதாவது..

“இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொண்டது மகிழ்ச்சி.

எஃப் 1 கார் ரேஸ் உங்களுக்குத் தெரியுமா.? அதில் நிறைய சுற்றுகள் இருக்கும். தொடர்ந்து வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே இருக்க முடியாது. அதற்காக பிட் ஸ்டாப் இருக்கும்.

அங்கு நிறுத்தி காரின் தேய்ந்து போன டயர்களை மாற்றி, பெட்ரோல் நிரப்பி, தொடர்ந்து ஓட்ட வேண்டும்.

கண்ணை மூடிக்கிட்டு என் ரசிகர்களை லவ் பண்ணலாம்.; பெண்களுக்கு சிம்பு அட்வைஸ்

இப்போதும் சொல்வேன். முதலில் யார் முதலிடத்தை அடைகிறார்கள் என்பதே முக்கியமல்ல. கடைசியில் யார் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

உங்களுடைய அன்புதான் என்னை இப்பவும் சினிமாவில் வைத்திருக்கிறது.

சின்ன வயசுலே இருந்தே நடிக்கிறேன். எனவே தான் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டேன். அதற்காக கோபித்துக் கொள்ளாதீர்கள்.

திரும்ப வந்துவிட்டேன். இனிமேல் எப்போதும் உங்களைவிட்டு போகமாட்டேன்.

நாம் வெற்றி பெறும் போது நம் பின்னால் நிறைய பேர் வருவார்கள். நம் பின்னால் ஒரு கூட்டமிருக்கும். ஆனால் ஒருவன் தோல்வியடைந்துவிட்டான் என்று சொன்னப்போதும் எனக்காக நின்றீர்களே. உங்களை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன்.

ஒவ்வொரு படம் கதையில் கதாபாத்திரங்கள் இருக்கும். அதில் ஒருவன் தொடர்ந்து கஷ்டப்படுகிறான். அனைவரும் அவனை மேலே வரவிடாமல் தடுக்கின்றனர். அவனது காதலில் பிரச்னை வருகிறது.

இந்தியன் 2 விபத்து; பணம்-வார்த்தை உயிரிழப்பை ஈடு செய்யாது என சிம்பு அறிக்கை

ஆனால் கடைசியில் ஜெயிக்கிறான். அவனது பெயர்தான் ஹீரோ. இன்னொரு கதாபாத்திரம் ஆரம்பத்திலிருந்தே எந்த பிரச்னையுமின்றி ஜெயித்துக் கொண்டே இருக்கிறான். மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்கிறான். அவனுக்கு பெயர் வில்லன்.

படத்தைப் போல் தான் நிஜவாழ்வும். ஒருவன் மேலே வருவதை தடுத்து கீழே தள்ளுகிறார்கள். வளரவிடாமல் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஹீரோவாக என்னை நீங்களும் கடவுளும் ஆக்கியிருக்கிறீர்கள்.

அண்ணாமலை படத்தில் இடைவேளை சமயத்தில் வில்லன் உயர்ந்து மேலே நிற்பார்.

தலைவன் கீழே நிற்பார். அவர்தான் ஹீரோ சூப்பர் ஸ்டார். மேலே நிற்பவர் அல்ல. அதனால் நான் கவலையேபடமாட்டேன்.” என பேசினார் சிம்பு.

Simbus Mass Speech At Nakshatra 2020 event at College

More Articles
Follows