தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கோகுல் இயக்கியுள்ள இப்படம் வருகிற அக். 28ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் கார்த்தி, விவேக், கோகுல், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது விவேக் பேசும்போது….
ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி வரவில்லை என்றால் இந்த காஷ்மோரா படத்தை இந்தியாவே கொண்டாடும். அந்த அளவுக்கு இருக்கும்.
ஆனால் இப்போது இந்த படம் வருவதால் நிச்சயம் பாகுபலியுடன் ஒப்பீடு இருக்கும். அதுவேண்டாம். இப்படம் ஒரு ஜாலியான படம்.
நயன்தாராவுடன் கள்வனின் காதலி படத்தின் நடித்தேன். அதன் பிறகு அவருடன் நடிக்கும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்தும், அவருடன் நடிக்கும் சீனே படத்தில் இல்லை.
இப்போது நயன்தாரா இங்கு வரவில்லை. பொதுவாக சில நடிகைகளும் வருவதில்லை.
அதற்கு அவர்கள் புத்திசாலித்தனமாக சொல்லும் காரணம் என்னவென்றால், நான் வந்தால் சென்டிமெண்ட்டாக ஒர்க் அவுட் ஆகாது என்கின்றனர்.
அப்படி சொல்லும் அவர்கள் படத்தின் சம்பளத்தின் கடைசி தொகையை (லாஸ்ட் பேமண்ட்) வாங்காமல் இருப்பார்களா? என்று பேசினார் விவேக்.