‘சினிமாவுக்கு விநியோகஸ்தரே தேவையில்லை…’ விஷால் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘உளவுத்துறை’, ‘வஜ்ரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் அடுத்து இயக்கியுள்ள படம் சுவாதி கொலை வழக்கு.

இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

“மக்களுக்கு எதாவது சொல்லணும், அவங்களை சிந்திக்க வைக்கிற மாதிரியான படங்கள் எடுக்கிறதுக்கு ஒரு தைரியம் வேண்டும்.

சுவாதி கொலை வழக்கை பற்றிப் யாரும் பேசக்கூட முடியவில்லை.

உண்மைகள் தெரிஞ்சாகூட வெளியே சொல்ல மாட்டோம்.

ஆனால் இவர் இந்தப் படத்தில் சொல்லவிருக்கிற விஷயத்தைப் பார்க்க நான் காத்திருக்க தொடங்கிவிட்டேன்.

பட ரிலீஸ் தேதியை முன்னாடியே சொல்லிடுங்க. உங்க கூட இருந்து நானே பிஸினஸ் செய்து கொடுக்குறேன்.

விநியோகஸ்தரிடம் கமிஷனுக்குக் கொடுத்து ஏமாற வேண்டாம். அவர்கள் தேவையற்றவர்கள்.

தியேட்டரில் சினிமா திரையிடுவது மட்டுமே வருமானம் கிடையாது.

சினிமாவில் சம்பாதிக்க நிறைய இருக்கு. நாங்க எப்போதும் உங்க கூட இருப்போம்.” என்று பேசினார் விஷால்.

Vishal speech at Swathi Kolai vazhakku movie audio launch

‘காலா’ டைட்டிலுக்கும் ஸ்டோரிக்கும் வந்த சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை, போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் ராஜசேகரன். இவர், இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காலா படக்குழுவினர் மீது புகார் ஒன்றைக் கொடுத்தார்.

இதுகுறித்து ராஜசேகரன் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…

” ‘கரிகாலன்’ தலைப்பு, கதையின் மூலக்கரு, பாடல்கள் ஆகியவை நீதி வழுவாத தமிழ்அரசர் கரிகால் சோழனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்டது.

அவர், அந்தக் காலத்தில் நாட்டு மக்களுக்குச் செய்த அறச்செயல், வீரச்செயல் போன்றவற்றை மையப்படுத்தியதாகும். இந்தக் கதையில், நாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து வெளியிடுவதே என்னுடைய லட்சியம்.

இதற்காக, கடந்த 1995, 1996ல் அன்றைய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்திய நாராயணனிடம் ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்துக்குச் சென்று, கரிகாலன் தலைப்பு, கதை பற்றி கூறினேன்.

மேலும், அவரின் உதவியுடன் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, ‘பிறகு பேசலாம்’ எனச் சொல்லி என்னை புகைப்படம் மட்டும் எடுக்க அனுமதித்தனர்.

ஏப்ரல் 1996ல் பிஆர்ஓ. நெல்லை சுந்தரராஜன் ஏற்பாட்டில், என்னுடைய படைப்பின் ‘மயிலே.. குயிலே’ என்ற ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்தது.

அதில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தலைமையில் ஆடியோ வெளியிட, நடிகை மோகினி அதைப் பெற்றுக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.ஆர். விண்மீன் கிரியேஷன் மூலமாக வெளியிடயிருக்கும் திரைப்படம், ‘கரிகாலன்’, ‘உடன்பிறவா தங்கச்சி’ ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன். அது, பத்திரிகைகளிலும் வெளியானது. ‘கரிகாலன்’ என்ற தலைப்பு, கதையின் மூலக்கரு முழுவதும் என்னுடையதே.

கரிகாலன் தலைப்பு மற்றும் கதையை, சில்வர் லைன் ஃபிலிம் ஃபேக்டரிமூலம் நடிகர் விக்ரமை வைத்து படத்தைத் தொடங்கி, காட்சிகள் வெளியானதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 2011ல் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.

அந்தப் படத்தை எடுக்க, நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து, என்னுடைய கரிகாலன் திரைக்கதையைப் பல சினிமா நிறுவனங்களின் தயாரிப்பாளர்களிடம் சொல்லிவந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ்மூலம் இயக்குநர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகத் தகவல் எனக்குத் தெரிந்தது.

அந்தப் படத்தின் பெயர், ‘காலா’, கரிகாலன் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்.

என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும் கதையையும் கதையின் மூலக்கருவையும் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் திருடி, ‘கரிகாலன்’ என்ற தலைப்பை காலா, கரிகாலன் என்றும் மறுவடிவமைப்புச் செய்துள்ளனர்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.

Police case filed about Kaala Title and Story

 

‘தமிழ்நாட்டில் வாழு; ஆளாதே…’ எச்சரிக்கும் பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மே17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து, பொது இடத்தில் சட்ட விரோதமாகக் கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், நான்கு பேர் மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, இன்று சேப்பாக்கத்தில் இருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது…

‘திருமுருகன் என கொலையாளியா, எதற்காக அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது?

யாரும் மத்திய அரசை விமர்சிக்கவே கூடாதா, அப்படி விமர்சித்தால் என்ன தவறு?

நானும்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவேந்தலுக்கு போயிருக்கிறேன். நான் பிரபாகரனையே நேரில் சந்தித்துள்ளேன்.

அதற்காக என் மீதும் குண்டர் சட்டத்தை போடுங்கள்.

தமிழ்நாட்டு மண்ணில் பிறந்தவன்தான் தமிழகத்திற்கு தலைவனாக வேண்டும்.

இம்மண்ணை ஆள்வதற்கு அயலானுக்கு உரிமை இல்லை.

வேறு எந்த மாநிலத்திலாவது ஒரு தமிழனால் தலைவனாக முடியுமா?

மற்ற மாநிலத்தவர்கள் இங்கு வாழலாம். அவர்களை அரவணைப்போம்.

அதற்காக சமபங்கு கொடுக்கமுடியாது.” என ஆவேசமாக பேசினார் இயக்குனர் இமயம்.

Only Tamizhans must rule Tamilnadu says Director Bharathiraja

பாட்ஷா பாதி; எஜமான் மீதி…? இதுதான் ‘காலா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை பல மொழிகளில் 163 படங்களில் நடித்துவிட்டாலும் அவரது மாஸான நடிப்பில் இன்றளவும் பேசப்படும் படமாக உள்ள படம் பாட்ஷா.

இதில் பம்பாய் தாதாவாக மிரட்டியிருந்தார். இப்படத்தின் கிளாஸ் மற்றும் டான் ஆடைகள், ஆட்டோ டிரைவர் ஆடைகள் பெரிதாக பேசப்பட்டது.

மேலும் இதில் தன் நண்பனுக்காக தனது பெயரை பாட்ஷா என்ற இஸ்லாமிய பெயராக மாற்றி நடித்திருப்பார்.

இனி பாட்ஷா போன்ற ஒரு படம் உருவாகாது.

எனவேதான் அதன் 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பமில்லை என தெரிவித்து இருந்தார்.

அதுபோல் ரஜினி பல படங்களில் பேண்ட் ஷர்ட், ஜிப்பா, கோட் சூட் என பல வகையான உடைகளில் நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க வேஷ்டி சட்டை அணிந்து, ஊருக்கே நன்மை செய்யும் நல்லவராக எஜமான் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது உருவாகும் காலா படத்தில், மும்பை டானாகவும் இஸ்லாமிய தோற்றத்துடன் குல்ல போட்டு நடித்து வருகிறார்.

அதே சமயம் எஜமான் ஸ்டைலில் வேஷ்டி அணிந்து நடித்து வருகிறார் ரஜினி.

எனவே, காலாவில் பாட்ஷா மற்றும் எஜமான் என இரண்டும் கலந்த ஸ்டைல் லுக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kaala movie connects with Baasha and Ejamaan

இளையராஜா பிறந்தநாளில் இசை பிரியர்களுக்கு சிம்பு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா அவர்கள், தன் பிறந்தநாளை ஜூன் 2ஆம் தேதி கொண்டாடுகிறார்.

எனவே அவரது பிறந்த நாளை முன்னிட்டு சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படக்குழுவினர் ஒரு சிறப்பு பாடலை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ரோட்டுல வண்டி வருது’ என்று தொடங்கும் ஆன்மிக பாடலை இளையராஜா பாட, யுவன் இசையமைத்துள்ளார்.

அஸ்வின் தாத்தா கேரக்டருக்காக உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை இளையாராஜா பிறந்தநாளில் வெளியிட உள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

மேலும், மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகும் என்றும், ரம்ஜான் திருநாளில் படம் ரிலீஸ் என்றும் தெரிவித்துள்ளார்.

STR‏Verified account @iam_str
#SpiritualGanaa #RottulaVandiOodudhu single on #June2nd marking the birthday of #Maestro #Ilayaraja #AAA1D @Adhikravi @thisisysr #Eid2017

‘ரஜினி ஜீப்பை கொடுத்துடுறோம்..’ மகிந்திராவிடம் தனுஷ் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தனுஷ்.

இதில் ரஜினி ஒரு ஜீப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

இதனை பார்த்த, மகிந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மகிந்திரா,

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற லெஜன்ட் அமரும் அரியணையாகப் எங்கள் ஜீப் பயன்பட்டதால், அதுவும் லெஜன்டாகிவிட்டது.

அது இப்போது இருந்தால் எங்கள் நிறுவன மியூசியத்தில் வைப்போம்”, என்று ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காலா தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கூறியுள்ளதாவது…

தற்போது அது ரஜினியின் காலா சூட்டிங்கில் உள்ளது. படம் முடிந்ததும் உங்களிடம் ஒப்படைக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

anand mahindra‏Verified account @anandmahindra
When the legend @superstarrajini uses a car as a throne, it becomes a legend…#Thar

Dhanush‏Verified account @dhanushkraja
Dhanush Retweeted anand mahindra
Thank you so much sir !!! The vehicle is being used by superstar for shoot currently. Once completed will ensure it reaches you

More Articles
Follows