தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவர் பேசியதாவது…
எனக்கு அரசியல் தொழில் அல்ல, அரசியலில் நான் சம்பாதிக்கவும் வரவில்லை. நான் ஓரு நடிகன்.
நான் எம்.எல்.ஏ-க்களை விட அதிகம் புகழ் பெற்றவன். அவர்களை விட அதிகமாக சம்பாதிப்பவன். நான் அரசியலை தொழிலாக செய்ய வேண்டிய தேவையில்லை. R.K. நகர் தேர்தல் நடக்கும் போது என்னால் வீட்டில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியில் தேர்தல் களத்தில் நடப்பதை பார்த்துக்கொண்டு , இப்படி தான் என்னுடைய சமூதாயம் இருக்க போகிறது என்ற சொல்ல தோன்றவில்லை.
நான் வீட்டிலிருந்து வெளியே வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தேன். வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். வேட்பு மனுக்கு கையெழுத்துக்கள் தேவைப்பட்டது. அவற்றை சரியான நபர்களிடம் வாங்கி தான் தாக்கல் செய்தேன். ஆனால் நான் வேட்புமனு தாக்கல் செய்தது பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு R.K. நகரில் நிறைய ரசிகர் மன்றங்கள் உள்ளன.
தேர்தல் ஆணையத்தை என்னுடைய வேட்பு மனுவை நிராகரிக்க வைத்ததின் மூலம் நான் தான் வெற்றி பெற்றிருப்பேன் என்பதை எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.
நான் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பேனா இல்லையா என்பது அடுத்த விஷயம் தான். குடியரசு வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனு இதுவரை நிராகரிக்கப்பட்டதில்லை.
என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகு நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று உறுதியாக முடிவு செய்துவிட்டேன். அவர்களால் தான் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன். அவர்களுக்கு நன்றி என்றார் விஷால்.