விவசாயிகளுக்காக குரல் கொடுக்க நெடுவாசல் செல்லும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் என்ன பாவம் செய்தததோ? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சினைகளாக சந்தித்துக் கொண்டே இருக்கிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை தமிழகம் பரபரப்பாக இருக்கிறது.

தற்போது ஹைட்ரோகார்பன் என்னும் மீத்தேன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இதற்கு ஆதரவளிக்க இன்று நெடுவாசல் சென்று விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவிருக்கிறார் விஷால்.

இதனை நேற்று நடைபெற்ற ‘ஒரு கனவு போல’ இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

அப்போது பேசியபோது, அரசியல்வாதிகளுக்கு நான் இதை முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கிறேன். ‘விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள். எனவும் தெரிவித்தார்.

இவருடன் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் பேரரசு ஆகியோரும் செல்லக்கூடும் எனத் தெரிகிறது.

Vishal going to Neduvasal to support Tamilnadu farmers in HydroCarbon issue

மார்ச் 3ல்… தமிழர்களுக்கு ரஜினியும் கன்னடர்களுக்கு அஜித்தும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் ரஜினி மற்றும் அஜித் படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு எப்போதும் இருந்து வருகிறது.

இந்நிலையில் கிட்டதட்ட 22 வருடங்களுக்கு பிறகு, ரஜினியின் பாட்ஷா தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி ரீரிலீஸ் ஆகிறது.

அதுபோல் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் கன்னட டப்பிங் வருகிற மார்ச் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கௌதம் மேனன் இயக்கிய இப்படம் கன்னடத்தில் சத்யதேவ் ஐபிஎஸ் என்ற பெயரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் தமிழக மற்றும் கன்னட ரசிகர்கள், தங்கள் அபிமான நடிகர்களின் பட ரிலீசை கொண்டாட இருக்கிறார்கள்.

Rajini and Ajith movies release treat on 3rd March 2017

 

ரஜினி பாராட்டு; எமன் வசூல்… விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிச்சைக்காரன், சைத்தான் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான எமன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

முற்றிலும் அரசியல் விருந்தான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் ஒரு கோடி வசூலை கடந்துள்ள இப்படம் தமிழகத்தில் மூன்றே நாட்களில் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

‘எமன்’ படத்தின் வரவேற்பை அறிந்த ரஜினி படத்தை பார்த்தாராம்.

அவரும் படக்குழுவினருக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் வசூல் வேட்டை மற்றொரு பக்கம் ரஜினியின் பாராட்டு என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் விஜய் ஆண்டனி.

சாந்தனுவின் ‘முப்பரிமாணம்’ படத்தை பார்த்த சுசீந்திரன் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடித்துள்ள படம் முப்பரிமாணம்.

அதிரூபன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

வருகிற மார்ச் 3ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர்.

அப்படத்தை பார்த்த இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளதாவது…

படத்தின் இடைவேளை வரை இதுவும் பொழுதுபோக்கு படம்தான் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் இடைவேளைக்கு பிறகு இப்படம் முற்றிலும் வேறு ஒரு கதைகளத்தில் இருந்தது.

சாந்தனு மற்றும் ஸ்ருஷ்டியின் நடிப்பு அருமை என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Suseenthiran letter about Shanthanus Mupparimanam movie

அந்த கடிதம்…

ரஜினியை எப்படி இயக்க வெங்கட் பிரபுக்கு ஆசை தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவின் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு ரஜினியுடன் ஒரு படத்திலாவது இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதே கனவாக இருக்கும்.

அதுபோன்ற ஆசை இயக்குனர் வெங்கட் பிரபுவையும் விட்டுவைக்கவில்லை.

அவரின் சமீபத்திய பேட்டியில் அதுபற்றி தெரிவித்துள்ளார்.

அதில்… “ரஜினிக்கு இயல்பாகவே காமெடி சென்ஸ் அதிகம். அவர் ஒரு மாஸ் ஹீரோ என்றாலும் காமெடியிலும் கலக்குவார்.

எனவே எனக்கு ரஜினியை முழுக்க முழுக்க காமெடி செய்ய வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு ரஜினி சம்மதிப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Venkat Prabhu wish to direct Rajinikanth

சௌந்தர்யா ரஜினி கார் மோதி ஆட்டோ டிரைவர் காயம்; தனுஷ் சமரசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா.

இவர் கருத்துவேறுபாடு காரணமாக கணவர் அஸ்வினை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ஒரு விருந்தில் கலந்துக் கொண்டு அதிகாலை 4.30 மணிக்கு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது, சென்னை, டி.டி.கே. சாலை வழியாக வந்துக் கொண்டிருக்கும் போது, மௌபரிஸ் சாலை அருகில் நின்ற ஆட்டோ மீது இவரின் கார் மோதியுள்ளது.

இதனால் ஆட்டோ கவிழ்ந்து அதில் இருந்த டிரைவர் மணி என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே இத்தகவலை தனுஷக்கு சௌந்தர்யா தெரிவித்தாகவும், அவர் நேரில் வந்து ஆட்டோ டிரைவரிடம் சமரசம் பேசியதாக சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்துள்ளாராம்.

இதனால் சௌந்தர்யா மீது எந்த வழக்கும் இல்லாமல் இப்பிரச்சினை முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் நடிகர் அருண் விஜய்யின் கார் மோதி ஒரு விபத்து நடந்ததும், அவரின் தந்தை விஜயகுமார் சமாதானம் செய்ததும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Soundarya Rajini hits an auto with her car Dhanush solve the issues

More Articles
Follows