விஜய்சேதுபதி-டி.ஆர் கூட்டணியில் இணைந்த ‘கெத்து’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடித்து வரும் கவண்.

இந்த தலைப்பின் விளக்கத்தை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் விக்ராந்தும் நடித்திருக்கிறாராம்.

‘கற்க கசடற’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், கெத்து படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்று தனுஷ்-சிவகார்த்திகேயன்-அனிருத் சந்திப்பு நடைபெறுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் இந்த பெயர்களை இணையத்தில் டைப் செய்தாலே இவர்கள் மூவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கும்.

ஆனால் இதெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது.

தற்போது இவர்களின் நட்பு வட்டத்தில் சில விரிசல்கள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று தனுஷின் ‘கொடி’ படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஆந்திராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெறுகிறது.

இதே இடத்தில் ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பின் பிரஸ்மீட்டும் நடைபெறுகிறது.

இதில் சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

ஒரே இடத்தில் இரண்டு விழாக்களும் நடைபெறுவதால் இவர்கள் சந்தித்து பேசுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ரஜினியுடன் மீனா நடித்ததை போல, அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஷாலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எங்கேயோ கேட்ட குரல் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் ஆகிய படங்களில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா.

பின்னர் வளர்ந்து குமரியாகி எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்தார்.

இதே போல காதல் மன்னன் படத்தில் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலு.

இவரது சமீபத்திய பேட்டியில் இவர் கூறியதாவது…

“என் அம்மா சொல்லிதான் எனக்கு தெரியும் நான் அஜித் சாருடன் நடித்தேன் என்பதே.

காதல் மன்னன் சூட்டிங்கில் அஜித் என்னை கொஞ்சிக் கொண்டிருப்பாராம்.

தற்போது நான் வளர்ந்து விட்டேன். இப்போது அவருடன் ஒரு சின்ன கேரக்டரிலாவது நடிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது.

அதுபோல் அவரிடம் இந்த ப்ளாஷ்பேக் சொல்லி, அவருடன் ஷெஃல்பி எடுத்துக் கொள்ளவும் ஆசை” என தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதியுடன் கைகோர்க்கும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்ரிஷா நடிப்பில் நாயகி படம் அண்மையில் வெளியானது. ஆனால் படம் வந்ததா? என்பதே தெரியாத அளவுக்கு ஓடி ஒளிந்துக் கொண்டது.

இதனையடுத்து, விரைவில் கொடி, மோகினி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.

தற்போது அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ‘சதுரங்கவேட்டை -2’ மற்றும் ‘கர்ஜனை’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் முதன்முறையாக விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

விஜய்சேதுபதி நடித்த, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரேம்குமார்.

இவர் இயக்கவுள்ள ஒரு படத்தில்தான் இந்த ஜோடி இணைகிறது.

ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ‘சிறப்பு’ விருந்து தரும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலு படத்திற்கு சிம்பு பல படங்களில் நடிக்க கமிட் ஆனார்.

ஆனால் அதற்கு முன் ஒப்புக் கொண்ட இது நம்ம ஆளு படம் மட்டுமே இந்தாண்டு வெளியானது.

இதனால் இவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தன் ரசிகர்களுக்கு இரண்டு விருந்துகளை அடுத்தடுத்து கொடுக்கவிருக்கிறாராம்.

கௌதம் மேனன் இயக்கியுள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகிறது.

இதனையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் இரண்டாவது டீசரை வெளியிடவிருக்கிறாராம்.

இதனுடன் அஸ்வின் தாத்தாவின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் சிம்பு.

தனுஷ் தயாரிப்பில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தனுஷ், தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.

தற்போது ஷங்கரின் 2.ஓ படத்தில் நடித்துவரும் ரஜினி, அடுத்த வருடம் இப்படத்தில் நடிக்க தொடங்குகிறார்.

இந்நிலையில், எவரும் எதிர்பாராத வகையில் இப்படத்தில் ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை ஐஸ்வர்யா இயக்கியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதுவரை படங்களை மட்டுமே இயக்கிய ஐஸ்வர்யா முதன்முறையாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows